Sunday, July 27, 2014

சவலைப் பிள்ளைகள்..

மொத்தமாக கவனம் செலுத்தி கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட முதல் பிள்ளைகள் இரண்டாம், மூன்றாம் பிள்ளைகள் வந்த பின்னர், கவனிப்புக் குறைய கொஞ்சம் ஏங்கிப் போய்விடுவார்கள்.. அந்த சவலைப்பிள்ளைகள் போல என் வலைப்பூக்களும், தோட்டமும் (ஏன் ஜீனோ-வும் கூடத்தான்!) கவனிப்பு குறைந்து என் முழுக்கவனமும் லயா-வின் பின்னால் சென்றுகொண்டிருக்கிறது! :)..I miss my blog! avvvv....

முதல் புகைப்படத்தில் பூத்துச் சிரித்தாலும் செடிகள் கொஞ்சம் சுணங்கித்தான் போயிருக்கின்றன. புதினா மிகவும் ஸ்ட்ராங்க்-ஆன செடி என்பதால் தாக்குப் பிடித்துக்கொள்கிறது.  முதல் ஒரு முறை பார்க்கையில் புதினாவில் பூ வந்தது போன்ற தோற்றத்தில் பச்சைநிறத்தில் "ஏதோ ஒன்று" இருந்தது..
பூவாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் படமெடுத்தும் வைத்துவிட்டு ஒரு வாரம் வட அமெரிக்காவின் கிழக்குமூலைக்குச்  சென்றுவந்தோம்.

 
Tampa Aquarium-ல் மீன்களைப் பார்க்கும் என் தங்க மீனுக்குட்டி! :) 

திரும்பி வந்த போது புதினாவில் பசுமையாக இருந்த பூக்கள் வெள்ளைப் பூக்களாகிவிட்டிருந்தன. முதல் முறையாகப் புதினாப் பூக்களைப் பார்த்ததில் எனக்கு மிக மகிழ்ச்சி.  விதைகள் வருமா என காத்திருக்காமல் அவசரக்குடுக்கையாகப் பூத்திருந்த தண்டுகளைக் கிள்ளி சமைத்துவிட்டேன். அவ்வ்வ்வ்!! 
இது போன வருடம் டாலர் ஷாப்-ல் வாங்கி வந்த மிளகாய்ச் செடி. திடமாக நின்று ஒன்றிரண்டு காய்கள் காய்த்துக்கொண்டிருக்கிறது. காய் குறைவு என்றாலும் நல்ல குண்ண்ண்ண்டு மிளகாய்களாகக் காய்க்கும். ;) ஊருக்குப் போகையில் எல்லாம் பச்சையாக இருந்தார்கள்..வந்து பார்க்கையில் இருவர் "வெயிலில் தண்ணி இல்லாம எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டாயே" என்ற கோபத்தில் சிவந்து போயிருந்தார்கள். எல்லா மிளகாய்களையும் பறித்தாச்சு..
குட்டி ஹெல்ப்பர் புகைப்படத்துக்கு போஸ் குடுக்க யெல்ப்ப்ப் செய்கிறார்..
அப்பாடீ...கை கொஞ்ச நேரம் அமைதியாக நின்னுச்சு..ஒரு ஃபோட்டோ எடுத்தாச்...
ஆக மொத்தம், ஆறு மிளகாயை ஆல்மோஸ்ட் ஆறு படமெடுத்திருப்பேன். ஹிஹி...
ஊருக்குப் போகையில் அமைதியாக இருந்த ரோசாப்பெண்..வந்த போது பூக்களாகப் பூத்து வரவேற்பு அளித்தார். :)
 ஸோலார் டான்ஸிங் ஃப்ளவர்..வெகு நாட்களாகத் தவணையில் இருந்தது, இணையத்தில் பார்த்து வாங்கியாச்சு! :)
என் குட்டிப்பெண் வளர்ந்துட்டே இருக்காங்க..
நாட்கள் மின்னல் வேகத்தில் ஓடுகின்றன..விரைவில் லயமும் ஓட ஆரம்பிப்பாங்க, அவங்க பின்னால் நானும் ஓடுவேன். அப்போதும் அவ்வப்போது இங்கே எட்டிப்பார்க்க காலம் அனுமதிக்கவேண்டும். ;) :) 
ஓவராக மொக்கை போட்டாச்..பிராயச்சித்தமாக ஒரு ஆப்பிள் பை(Apple Pie from Denny's), கடைல வாங்கினதுதான்..தகிரியமாச் சாப்புடுங்க..டாங்ஸூ! ;) 

Friday, July 11, 2014

ப்ரோக்கலி பொரியல்

தேவையான பொருட்கள்
ப்ரோக்கலி துண்டுகள்-11/2கப்
வெங்காயம்-1
பூண்டு-4பற்கள்
தக்காளி-1
பச்சைமிளகாய்-1
கறி மசாலா பொடி-11/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்-2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு -தலா 1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
ப்ரோக்கலியை கழுவி, பூக்களாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம்-பச்சைமிளகாய்-பூண்டு-தக்காளியை நறுக்கிவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 
வெங்காயம்-பூண்டு-பச்சைமிளகாய் வதக்கி, தக்காளியும் சேர்த்து குழைய வதக்கவும்.
நறுக்கிய ப்ரோக்கலி பூக்கள் சேர்த்து பிரட்டி விடவும்.
கால் கப் தண்ணீரை தெளித்து மசாலா பொடி-உப்பு சேர்த்து கலந்து விடவும்.
காய் 4-5 நிமிடங்களில் வெந்துவிடும். (பாத்திரத்தை மூடி வைத்தால் பச்சை நிறம் மங்கிவிடும், அதனால் அப்படியே வேகவிடவும்)
காய் வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். 
சுவையான ப்ரோக்கலி பொரியல் தயார். சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம். முதல் படத்தில் கத்தரி-உருளை சாம்பார், சோறு, முட்டைக்கோஸ் பொரியல் & ப்ரோக்கலி பொரியல். 

Thursday, July 3, 2014

ப்ரெட் உப்புமா / ரொட்டி உப்புமா

தேவையான பொருட்கள்
ப்ரெட் ஸ்லைஸஸ்/ ரொட்டித் துண்டுகள் - 8
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3 (காரத்துக்கேற்ப)
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-2டேபிள்ஸ்பூன்
உப்பு-வெங்காயம் வதங்கும் அளவு
எண்ணெய்

செய்முறை
வெங்காயம்-பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய்-கறிவேப்பிலை(நான் சேர்க்கவில்லை) சேர்த்து வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க உப்பை சேர்த்து வதக்கவும். 
ப்ரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துக்கொள்ளவும். [புது ப்ரெட்-ஐ விட மீதமான ப்ரெட் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த ப்ரெட் ஈஸியாக அரைபடும். நான் ஃரெஷ் ப்ரெட்தான் உபயோகித்திருக்கிறேன். ;)] 
உதிர்த்த ப்ரெட்-ஐ வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து பிரட்டவும்.
ப்ரெட் ஓரளவு சூடேறியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான உப்புமா தயார். சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு
உப்பு வெங்காயம் வதக்க மட்டுமே, ரொட்டியில் ஏற்கனவே உப்பு இருக்கும்.
நாங்கள் எப்போதும் கோதுமை அல்லது மல்ட்டிகிரெய்ன் ப்ரெட் தான் வாங்குவது வழக்கம்.  வெள்ளை ரொட்டியும் உபயோகிக்கலாம்.
உதிர்த்த ரொட்டி சேர்த்த பின் அதிக நேரம் வதக்கினால் உப்புமா வறவற-வென ஆகிவிடும்.
சூடாகச் சாப்பிட்டால் சுவை அதிகம்! :)
ரெசிப்பி கிடைத்தது இங்கே.

LinkWithin

Related Posts with Thumbnails