Thursday, January 31, 2013

சித்திரம் பேசுதடி...

 2011-ல் ஊருக்குச் சென்றிருந்த பொழுது உறவினர் வீட்டுத் திருமணம் (தஞ்சையில்) இருந்தது. எங்கள் பயணத்தேதி நெருங்கிவிட்டதால் திருமணத்திற்குச் செல்ல இயலாதென்று முதல்நாளே கோவையில் இருக்கும் மாப்பிள்ளை வீட்டிற்குப் போய் வாழ்த்திவிட்டு வந்தோம். கல்யாண வீட்டில் இருந்த கோலங்கள், காமெராவில் புகுந்து இங்கே  பிரசன்னமாகின்றன. :)
மாப்பிள்ளையின் அம்மா அழகாகக் கோலங்கள் போடுவார். மகன் கல்யாணத்துக்கு கோலம் என்றால் சொல்லவும் வேண்டுமா? :)
மாக்கோலம், வெளியே வாசலில் போட்டிருக்கும் கோலம் எல்லாமே வெகு அழகாய் இருந்தன.
~~
இந்தக்கோலம்  என் அக்கா போட்டது..7புள்ளி, இடைப்புள்ளி 4 வரை. ரொம்ப சிம்பிளான கோலம்தான் என்றாலும், சுற்றிலும்   வரும்  பூவின் இதழ்கள் சரியாக வரவில்லை என்றால் கோலத்தின் அழகே கெட்டுப் போய்விடும், வடிவமும் வராது. கோலம் போடப் பழகிய  காலங்களில்  இந்தக்  கோலத்தைத் தப்பாகாமல், இதேபோல  அழகாய்ப் போடுவதே எனக்கொரு சவாலாய் இருந்தது. அதனால்தானோ என்னமோ, இக்கோலத்தின் மீது  எனக்கேற்பட்ட ஈர்ப்பு  குறையவே இல்லை! :) இப்பொழுது நானும் சுமாராய்ப்   போட்டுவிடுவேன்  என்றாலும், அக்காவைப் போல  பர்ஃபெக்ட்டாக வராது!  ;)
~~
சித்திரம் பேசுதடி..- என்று தலைப்பு வைக்க முக்கிய காரணம் இந்த வண்ணக் கிளிதான். :) அம்மா வீட்டில் முக்கியமான போன் நம்பர்களை பெரிய எழுத்தில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருப்போம். அந்தக் காகிதம் பழசாகிப் போக, திடீரென்று ஒருநாள் புதிதாக ஒரு காகித்ததில் போன்நம்பருடன், பக்கத்தில் இந்த வண்ணக்கிளியும் உட்கார்ந்திருந்தது. :)) 
என் (அக்கா) பையனின் கைவண்ணம்! :))) எங்க இருந்து தம்பி இந்தக் கிளியப் புடிச்சே? - என்று கேட்டதற்கு, ஒரு பழைய நோட் அட்டையில் இருந்து பார்த்து வரைந்ததாக நோட்டை எடுத்துக் காட்டினார். அசலும், நகலும் எப்படியிருக்கு?! ;)
என் கை சும்மா இருக்குமா? துறுதுறு..ன்னுச்சா..நானும் பென்சில் பேப்பர் எடுத்து கிளிய அழகாக் கீறிட்டேன். :))) [கவனிக்க, ரப்பர் உபயோகமே படுத்தலையாக்கும்! :)]
கிளிக்கு உடல் கொஞ்சம் நீளமாப் போயிருச்சோ? ;) ஆனா அதைக் கூட யாரும்  கவனிக்கலை, கிளி ஏன் இப்படி "சிரிச்சிட்டு" இருக்கு என்றுதான் கிண்டல் பண்ணினாங்க!! நீங்களே சொல்லுங்க, என் கிளி சிரிக்குதா..சிரிக்குதா...சிரிக்குதா??! அவ்வ்வ்வ்வ்......
அடுத்த சில நாட்களில் கிடைச்ச கலர் பென்ஸில்களை வைச்சு கிளிக்கு கொஞ்சம் வண்ணமும் தீற்றி வைச்சிட்டு வந்தேன், பையன் கிளியை மட்டும் அழகா நறுக்கி, போன் நம்பர் பக்கத்தில் ஒட்டிவைச்சிட்டார்! :)
இவ்ளோதாங்க  இந்த சித்திரம் பேசியது! :) ஹ்ம்ம்ம்...கிளிப் பேச்சு கேட்க வா- அப்படின்னு தலைப்பு வைச்சிருக்கணுமோ? இருங்க, வரேன்...ஒரே நிமிஷம்! டைட்டிலை மாத்திட்டு வந்துடறேன்! ;)))

Tuesday, January 29, 2013

அனுவாவி - பகுதி 1

மேற்குத் தொடர்ச்சி மலையின் சாரலில், கோவையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில். மலையும் மலை  சார்ந்த இடத்தில், பச்சைப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு அருள்பாலிக்கிறார் இந்தக் கோயிலில் இருக்கும் முருகப் பெருமான். அனு- அழகிய, வாவி -நீரூற்று, பிரித்துப் பார்த்துப் பொருள்கொண்டால் இதுவே அனுவாவியின் அர்த்தம். :)

கோவை காந்திபுரத்தில் இருந்து 26A என்ற பேருந்தில் காலை எட்டரை மணிக்கு ஏறி உட்கார்ந்தால் ஒரு ஒண்ணரை மணி நேரத்தில் கோயில் சென்று சேர்ந்துவிடலாம். இது பேருந்தினை நம்புவோருக்கு! :) இருசக்கர - நான்கு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு ஆயிரம் வழிகள். தடாகம் ரோடு வழியாக வரலாம், அல்லது கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ், துடியலூர், வடமதுரை இப்படியான ஊர்களில் இருந்து மேற்காகச் செல்லும் குறுக்குச் சாலைகளில் நுழைந்து ஆங்காங்கே வழி கேட்டுக்கொண்டே கோயில் போய்ச் சேர்ந்துவிடலாம். :)) 

எங்கள் வீடு கோயிலில் இருந்து அதிகபட்சம் 10 கிலோமீட்டர் தூரம்தான் இருக்கும். பள்ளிக் காலங்களில், சோறு கட்டிக்கொண்டு, அடித்துப் பிடித்துக் கிளம்பி 9மணிக்கு வரும் 26A பிடித்து கோயிலுக்குப் போவோம். அப்பொழுதெல்லாம் அடிவாரத்தில் இருக்கும் லலிதாம்பிகை அம்மன் கோயில் இருக்கவில்லை. மலையேறி, முருகரை தரிசித்துவிட்டு, புளிச்சோறு- கட்டுசாதங்களை ஒரு புடி புடிச்சுட்டு, குளுகுளுன்னு வீசும் காற்றில் இளைப்பாறிவிட்டு   வீடு திரும்புவோம். இப்பொழுது காலங்கள் மாறிவிட, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பைக்கையோ காரையோ எடுத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் போய்விட முடிகிறது.
எங்கூரில் இருந்து (எந்த ஊருன்னு கேக்காதீங்க, ;), 2வது பாரால சொல்லியிருக்கும் ஊர்களில் ஒண்ணுதான், ஹிஹி!) மேக்கால போகும் ஒரு குறுக்குச் சாலையில் செல்கையில் சாலையோரம் வாழைத்தோப்பும், பச்சைக்குடை பிடிக்கும் மரங்களும்! 
வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் கொஞ்சம் தொலைவு சென்றதும், அனுவாவி கோயிலுக்குத் திரும்பும் சாலை..
போகும் வழியெல்லாம் இருபுறமும் செங்கல் சூளைகள். குவித்து வைக்கப்பட்ட செம்மண்ணும், பச்சைக் கற்களும், சூளையில் வேகும் கற்களுமாய் நிறைந்திருக்கும். 
  
 
கோயிலின் முன்னால் பெரீஈஈஈய்ய மைதானம் போல திடல்..பெரீய்ய ஆலமரம் ஒன்று நிற்கிறது. அதற்கு முன்பாகவே இடப்பக்கமாக லலிதாம்பிகை கோயில். அழகானவாயிலின் அருகே வேப்பமரம், வலப்பக்கம் அகத்தியர் சித்த வைத்தியசாலை இருக்கிறது.

சிறிய குன்றின் மேல்தான் கோயில் இருக்கிறது. படிகளும் ரொம்பவும் செங்குத்தாக இல்லாமல்தான் இருக்கும். வழியில் ஆங்காங்கே விநாயகர்- இடும்பன் இப்படி சந்நிதிகளும், திண்ணைகளும், மரங்களையொட்டிய மேடைகளும் இருக்கின்றன. படியேறுவோமா? ரெடி, ஒன்...டூ..த்ரீ...ஸ்டார்ட்! :)
படியேறிகிட்டே, அப்படியே பின்னால் திரும்பிப் பார்த்தால்...மேற்குத்தொடர்ச்சி மலை எல்லை கட்ட, தென்னைமரங்களும் எட்டிப்பார்க்க ஒரு வியூ!
இன்னுங்கொஞ்சம் மேஏஏஏஏலே போயாச்சு..இப்ப அடிவாரத்தில் இருக்கும் வீடுகளும் தோட்டங்களும் சிறு சிறு புள்ளிகளாய்த் தெரிகின்றன. 
ஆடிப்பாடி(?!!) :) 90% ஏறியதும் வரும் இடம்தான் மேலேயுள்ள படம். Elevated view-ல மந்தஹாசம் புரிந்தபடி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர்..மேல ஏறி மயில் மேல உக்காந்துகிட்டு, "You did it"! என்கிறாரோ?! :)  இங்கிருந்து ஒரு பத்திருபது படிகள் நல்லாவே உசரமா இருக்கும். அதற்கு எச்சரிக்கை  பண்ணத்தான் இம்புட்டு அழகாச் சிரிக்கிறாருன்னு நினைக்கிறேன். அவ்வ்வ்வ்! தம்கட்டி ஏறிடுவோமில்ல? ஏறிப்போனால் அங்கேயே அனுவாவியின் குளிர்ந்த நீரைப் பருகலாம்.

படங்கள் எண்ணிக்கை அதிகமாவதால் அவை அடுத்த பதிவில்.

பி.கு. ஆசையாசையாகப் படமெடுத்து வந்து பிறகு ஆர்வம் குறைந்துபோய் ஹார்ட் ட்ரைவில் தூங்கிக் கொண்டிருந்த படங்களைத்  தேடியெடுத்து இங்கே பகிரவைத்த இன்ஸ்பிரேஷன் பதிவு இங்கே. :)

Friday, January 25, 2013

ஆனை ஆனையாம், அழகர் ஆனையாம்!

 

 

யானைக் குளியல்-வீடியோ



குளிச்சு முடிச்சு, ப்ரெஷ்ஷாகி, ஒரு கட்டு புல்லும் தானே எடுத்துட்டுப் போய் உறவினர் கூட்டத்துடன் சேர்ந்து சாப்பிட்டுட்டு..
பாகனுடன் வசூல் வேட்டை  & போட்டோ ஷூட்டுக்கு ரெடி! :)

நான் சூப்பரா போஸ் குடுப்பேன்! நீங்க அழகா நின்னுக்கணும், அது உங்க பாடு, போட்டோ க்ராபர் பாடு! ;))) 
இந்த மனுஷங்க தொந்தரவு ரெம்ப ஜாஸ்தியாப் போச்சு பா...யானைப்பசிக்கு சோளப்பொரி-னு சொல்லுவாகளே, அது இதுதான்பா! ;)))
இந்தப் படத்திலிருக்கும் ஆட்கள் யாரோ எவரோ தெரியாதுங்க..அந்தப் பாப்பா யானைக்கு பாப்கார்ன் கொடுக்கறதைப் பார்த்து டக்குன்னு க்ளிக் பண்ணினேன்! :)
~~~
 

அக்டோபரில் பெங்களூரு பன்னர்கட்டா மிருகக் காட்சி சாலைக்கு சென்றபோது பார்த்த யானைகள்..பெண்களும் குழந்தைகளும் ஒரு புறம் அணிவகுத்து நிற்கிறார்கள், தந்தத்துடன் கம்பீரமாக இருக்கும் ஆண்யானை தனியாக நின்று படங்களுக்கு போஸ் குடுக்கிறது. யானைக்குட்டிகள் ரொம்ப க்யூட்டாக இருந்தன. :)

இவ்வளவு பெரிய உருவம், மனிதனின் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிந்து பூனைக்குட்டிகள் போல சாதுவாக இருப்பது மனதின் மூலையில் கொஞ்சம் வருத்தத்தைக் கொடுத்தாலும், நல்லவிதமாகப் பராமரிக்கப் படுகின்றன என்று மனதைத் தேற்றிக் கொள்ளவேண்டியிருக்கிறது.

 Its Okay, Remove your thinking cap..Come on! யானையப் பார்க்க யாருக்குதான் பிடிக்காது?  வருத்தங்களை மறந்துவிட்டு ஜாலியா யானை பாருங்க!!:))
~~~
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
 Happy Republic Day! Enjoy the feast! :)

Saturday, January 19, 2013

சர்க்கரைப் பொங்கல்

இதுவரை பொங்கலை ப்ரெஷ்ஷர் குக்கரில்தான் செய்திருக்கிறேன். இந்த வருடம் குக்கரில் இல்லாமல் பாத்திரத்தில் செய்வோம் என முயற்சித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இனிப்பான பொங்கலுடன் எனக்குக் கிடைத்த இனிப்பான பரிசின் விவரங்கள் பொங்கலைத் தொடர்ந்து..

தேவையான பொருட்கள் 
பச்சரிசி - 3/4கப்
பாசிப்பருப்பு -1/4கப்
வெல்லம் - 1 அல்லது 11/2 கப் (சுவைக்கேற்ப அனுசரித்து போட்டுக்கொள்ளவும்)
ஏலக்காய்-2
முந்திரி-திராட்சை -சிறிது
நெய்- 2 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப் [விரும்பினால் சேர்க்கலாம், அல்லது நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.]
தண்ணீர் - 3 கப்


செய்முறை 
பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும். 

அரிசியை இரண்டு மூன்று முறை  களைந்து பருப்புடன் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். [புது அரிசி எனில் ஊறத்தேவையில்லை, என்னிடம் இருந்தது கொஞ்சம் பழைய சோனாமசூரி அரிசி! ;)]

பாலுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். பால் பொங்கியதும் ஊறிய அரிசி-பருப்பைச் சேர்க்கவும்.
மிதமான தீயில் அரிசி பருப்பு நன்கு வேகும்வரை சமைக்கவும்.

அவ்வப்போது கிளறிவிட்டு, வேகவைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றி பொங்கல் நன்றாக வெந்ததும், கரண்டியால் நன்றாக மசித்துவைக்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு சூடாக்கவும். கரைந்ததும் வடிகட்டி பொங்கலில் சேர்த்து கிளறிவிடவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி-திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காயையும் பொடித்துச் சேர்க்கவும்.
சுவையான பொங்கல் தயார். பரிமாறும்போது மேலும் ஒரு ஸ்பூன் நெய்யை சூடான பொங்கல் மீது விட்டு பரிமாறவும்.
ஜலீலா அக்காவின் சமையல் அட்டகாசம் வலைப்பூவில் நடைபெற்ற பேச்சுலர் சமையல் போட்டியில் எனக்கும் ஒரு பரிசு கிடைத்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என் ஆங்கில வலைப்பூவில் இருந்து அனுப்பிய Scrambled Egg with Veggies-க்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.குறிப்பு இங்கே.
ஜலீலா அக்கா போட்டியை அழகாக நடத்தி, பங்கு பெற்ற குறிப்புகளை வகை பிரித்து, சுவைத்துப் பார்த்து பரிசுக்குரிய குறிப்புகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அழகான பரிசுகளை வழங்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பங்குபெற்ற அனைவருக்கும் அழகான சான்றிதழ்களையும் வழங்கியிருக்கிறார்.அன்றாட வேலைப்பளுவிற்கிடையில் இத்தனை வேலைகள் செய்யும் அவரது அயராத உழைப்பு பிரம்மிப்பூட்டுகிறது. மிக்க நன்றி ஜலீலா அக்கா!

எனக்குக் கிடைத்துள்ள கற்கள் பதித்த அழகான கைப்பையைப் பார்க்க விரும்புவோர் கையை இங்கே வையுங்கள்! :))))))).

ஜலீலா அக்காவின் சென்னை ப்ளாஸா கடையில் இருந்து பரிசு மற்றும் சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் கொரியர் மூலம் கோவையில் எங்க வீட்டுக்குச் சென்று சேர்ந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

Wednesday, January 16, 2013

வடா-பாவ்

 
வடா-பாவ் என்பது மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மிகப் பிரபலமான உணவுவகை. மும்பையில் சாலையோரக் கடைகளில் கிடைக்கும் உணவுகளில் மிக முக்கிய உணவு இது. கடந்த கிறிஸ்துமஸ் அன்று எங்க வீட்டுப்பக்கம் இருக்கும் மராத்தி தோழி வீட்டில் வடா-பாவ் செய்து எல்லாருமாக ருசித்தோம். மாலை வாக் போய்விட்டு திரும்புகையில் சடாரென்று வடா-பாவ் ஐடியா உதயமானது. அப்பொழுதே இருட்டவும் ஆரம்பித்தாச்சு, அன்று கிறிஸ்துமஸ் என்பதால் எல்லாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சட்டென்று கடைக்குப் போய் பாவ் வாங்க முடியலை, முன்பே யோசிக்காததால் வீட்டிலேயே பாவ் செய்யவும் வாய்ப்பில்லை. அதனால் வீட்டில் இருந்த வீட் ப்ரெட்(ஹிஹி, wheat breadங்க ;))) உபயோகித்து வடா-பாவ் செய்தோம்.

இதிலே ஸ்வீட் சட்னி-க்ரீன் சட்னி எல்லாம் முன்பே செய்து வைத்துக் கொள்ளலாம். அவற்றின் ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்கவும். நாரியல் (= தேங்காய்) சட்னி எப்படி செய்வது என்பது மட்டும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன்.

தேவையான பொருட்கள் - நாரியல் சட்னி (தேங்காய் சட்னி) 
கொப்பரைத் தேங்காய்த் துருவல்(Dry coconut flakes) - 1 கப்
வரமிளகாய்- 5
பூண்டு - 4 பல்
உப்பு

செய்முறை 
எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீரில்லாம் அரைத்து எடுத்துவைக்கவும்.

தேவையான பொருட்கள் - வடா
உருளைக் கிழங்கு -5
இஞ்சி பூண்டு துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்- 2 
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன்
உப்பு

மேல்மாவுக்கு 
கடலை மாவு -1 கப்
ஓமம்- 1/2டீஸ்பூன்
கொத்துமல்லித் தூள் - 1/2டீஸ்பூன்
காய்ச்சிய எண்ணெய்- 1டேபிள்ஸ்பூன்
உப்பு
தண்ணீர்

வடாவைப் பொரிக்க எண்ணெய்

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.

கொஞ்சம் எண்ணெய் காயவைத்து, மஞ்சள்தூள்-மிளகாய்த்தூள்- இடித்த பச்சைமிளகாய் சேர்த்து பொரியவிடவும். அதனை மசித்த கிழங்குடன் சேர்க்கவும்.
துருவிய இஞ்சி-பூண்டு, தேவையான உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சிறிய வடைகளாகத் தட்டி வைக்கவும்.

கடலைமாவை பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். ஓமத்தை பொடித்துக்கொள்ளவும். ஓமப் பொடி, தனியாத்தூள், உப்பு இவற்றை கடலைமாவுடன் சேர்க்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயையும் சூடாக்கி மாவுடன் சேர்க்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கடலைமாவைக் கரைத்துக்கொள்ளவும். 
பொரிக்கத் தேவையான எண்ணெய் காயவைக்கவும். 
ஏற்கனவே செய்து வைத்த உருளைக் கிழங்கு வடைகளை மாவில் தோய்த்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

(பொதுவாக பாவ்(பன்) தான் உபயோகிப்பார்கள். இங்கே ப்ரெட் உபயோகித்திருக்கிறோம்.) ஸ்வீட் சட்னி-க்ரீன் சட்னி-நாரியல் சட்னி மூன்றும் தயாராக வைத்துக்கொள்ளவும். 
பாவ் பன்னின் ஒரு புறம் க்ரீன் சட்னி தடவவும். க்ரீன் சட்னி மீது கொஞ்சம் தேங்காய் சட்னியைப் பரப்பி, ஒரு வடா-வை வைக்கவும். இன்னொரு பாவ் பன்-னில் ஸ்வீட் சட்னியைத் தடவி வடா-வின் மீது வைத்து லேசாக அழுத்திவிடவும். 

இதற்கு பக்க உணவாக,(அதாங்க, சைட்டிஷ்!;)) சில பச்சைமிளகாய்களை லேசாகப் பிளந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். மிளகாய் சூடாக இருக்கும்போதே அதன் மீது உப்பு தூவிவிடவும். 

அவ்வளவுதாங்க, வடா பாவ் ரெடி! இதனுடன் தேவைப்பட்டால் ஸ்வீட்-க்ரீன்-நாரியல் சட்னிகளை பக்கத்தில் வைத்து தொட்டும் சாப்பிடலாம். 

ப்ரெட்-வடா-சட்னிகள் இவையெல்லாம் கலந்து ஒரு சூப்பர் சுவை, கூடவே துணைக்கு ரெடிமேட் கார்லிக் ப்ரெட், காரசாரமான  பச்சைமிளகாய ஒரு கடி...கண்ணில மூக்கில எல்லாம் தண்ணி வந்தாலும் சும்மா ஜூஊஊப்பர் சுவை! ;) :))))

பி.கு. படங்கள் என் கேமராவில் எடுக்கலை, அதனால் கொஞ்சம் சுமாராகத்தான் வந்திருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. "மீண்டும் நீ வீட்டில் செய்து படமெடுத்துக்கோ" என்று ஆன்டி சொன்னாங்க. ஆனா பாருங்க, இவ்ளோ வேலை எல்லாம் நான் நானா செய்வேனா என்று சந்தேகமா இருந்ததால், இருப்பதால் அதே படங்களை அப்லோட் செய்துவிட்டேன். ;))))

Sunday, January 13, 2013

பொங்கல் வாழ்த்துக்கள்!

 

 அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 
மூன்று வருடங்கள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில்  இந்த வலைப்பூ அடியெடுத்து வைக்கும் இந்நேரம் என் பதிவுகளைப் படித்தும், கருத்துக்கள் தந்தும் ஆதரவு தரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

 

சில சமயங்களில் வேகமாகவும், பல நேரங்களில் நத்தையென ஊர்ந்தும், மூன்று ஆண்டுகளில் இது எனது 300வது பதிவு!

அலுக்காமல் சலிக்காமல் என் அலம்பல்களைப் படித்து ரசிக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த, இனிய இனிய நன்றிகள்!

Thursday, January 10, 2013

புதுசு கண்ணா, புதுசு! :)

பொறுமை...பொ...று...மை....ஐஐஐஐஐ! :)))
ஏற்கனவே பார்த்த புதினாதானே? இதிலென்ன புதுசு-ன்னு உங்க ஏழாம் அறிவு(!) :) யோசிக்கலாம்! வெயிட்டீஸ்... and scroll down patiently please! ;)))

வாடைக்  காற்றில் மற்ற எல்லாச் செடிகளும் வாடிக் கிடக்க, புதினா மட்டும் தளதளப்பாய் வளர்கிறது. அப்பப்ப தேவைப்பட்ட அளவு தண்டுகளைக் கிள்ளி உபயோகப் படுத்திகிட்டு வாரோம். :) 

இங்க நீங்க ஒரு பாயின்ட் நோட் பண்ணனும், பென்சில்-நோட் பேட் எல்லாம் எடுத்துக்குங்க. பென்சில்ல மூக்கு இல்லன்னா, கத்தி-கப்படா எல்லாம் யூஸ் பண்ணி நல்லா கூரா சீவிக்குங்க!
" இந்தப் பதிவில் அங்கங்க நான் பார்த்தவற்றை (மட்டுமே) பகிர்கிறேன், நானா எதையுமே சொல்லலே,சொல்லலே,சொல்லல்லே! ;)))))" 
...என்ன, எழுதிகிட்டீங்களா? சரி, மேல படிங்க! ;)

நீங்கள் கவனித்திருக்கக் கூடும், பல உணவகங்களில் குடிக்க தண்ணீர் தரும்போது சிறு துண்டு எலுமிச்சையை தண்ணீரில் சேர்த்து தருவார்கள். நீரில் புதினா, மற்றும் சில பழ வகைகள் சேர்த்து flavoured water ஆகவும் குடிக்கிறார்கள்.

கடந்த விடுமுறையில் ஒரு முறை நாள் முழுக்க புக் படிச்சுகிட்டு, ஓய்வெடுத்துகிட்டு,  பிஸ்ஸா ஆர்டர் பண்ணி சாப்பிட்டுகிட்டு பொழுது போக்கிய ஒரு நாளில்...நடந்த நிகழ்வு இது! என்னவருக்கு ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தண்ணீர் தேவைப்பட்டதால ஒரு டெமோ- கொடுத்தார். உங்க வீடுகளில் யாருக்கேனும் உதவுமே என்ற நல்லெண்ணத்தில் இங்கே பகிர்கிறேன்.

ஹலுமிச்ச புதினாத் தண்ணி (அல்லது) தேமிச்ச புதினாத் தண்ணி
[இந்த டைட்டிலை ஆராய்ச்சி பண்ணி யாரும் பி.ஹெச்.டி. வாங்கினீங்க, அட்லீஸ்ட் $100,000 ராயல்டி நேரா என் பேங்க் அக்கவுன்ட்டுக்கு வந்துடணும், இப்பவே சொல்லிட்டேன்! ஹாஹ்ஹாஹ் ஹா! :))) ]

தேவையான பொருட்கள்
எலுமிச்சம் பழம்/ லெமன் -1
தேன் / ஹனி - 1டீஸ்பூன்
புதினா இலைகள் -2
தண்ணீர் - 1 கப்
ஐஸ் க்யூப்ஸ்- 2

செய்முறை 

படத்தைப் பார்த்தே புரிஞ்சுகிட்டிருப்பீங்க! இருந்தாலும் என் வாயாற :) ஒரு முறை சொல்லிக்கிறேனே! :)))
  • ஓடிப்போய்(!) தொட்டியில இருக்க புதினாச் செடில இருந்து ரெண்டு ஆரோக்கியமான புதினா இலையப் பறிச்சுட்டு வந்து கழுவிவைங்க. 
  • ஒரு முழு எலுமிச்சம் பழத்தை ஒரு அழகான வட்டம் வரமாதிரி ஸ்லைஸ் பண்ணிக்குங்க. [மீதி பழம் முழுசா வேஸ்ட் ஆனாலும், டோன்ட் கேர்! ;) ]
  • புதினா இலைய உள்ளங்கைல வைச்சு, லேசா கசக்கி டம்ளரில் போடுங்க, அது மேல லெமன் ஸ்லைஸையும் போட்டுருங்க.
  • கப்-ல முக்கால் பாகம்  தண்ணீர் ஊத்துங்க. 
  • கொஞ்சம் (ஆர்கானிக்) ஹனிய தண்ணில ஊத்தி, கலக்கிருங்க.
  •  மேலாப்பல ரெண்டு ஐஸ் க்யூபையும் தூக்கி(!) போடுங்க!
அம்புட்டுதானுங்...ஹலுமிச்ச புதினா தண்ணி அல்லது தேமிச்ச புதினாத் தண்ணி ரெடி! சுடச்சுட பிஸ்ஸா சாப்பிடும்போது சைடுல கோக்-பெப்ஸி இதெல்லாம் குடிச்சு வயித்த கெடுத்துக்காம, இப்படி ஆரோக்கியமான பானத்தைப் பருகி, சந்தோஷமா இருங்க! ஓக்கே!?
"பி.கு. எனக்கு தண்ணின்னா, ஐஸ் க்யூப் கூட போடாம, ரொம்ப சில்லுன்னும் இல்லாம,   நார்மல் டெம்பரேச்சரை விட கொஞ்சம் சில்லுன்னு இருந்தாப் போதும்,  இப்படி ஒப்பனை வேலைகள், லெமன்-மின்ட் போன்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எல்லாம் பிடிக்காது, பிடிக்காது, பிடிக்காது!"
ஹலோ..படிச்சுகிட்டே போனீங்கன்னா எப்புடி? இந்த பாயின்ட்டையும் நோட் பண்ணிக்குங்க, அக்காங்! ;))

 ~~~~~
அடுத்ததா இன்னும் 2  விஷயங்கள்..புதுசு கண்ணா புதுசு.. 

டிசம்பரில் ஒரு சனிக்கிழமை.. ஷாப்பிங் போயிருந்தோம், அருகில் இருந்த பெட்கோ வாசலில் அடாப்ஷன் சென்டரில் இருந்து பல வடிவில், உருவில், வயதில் செல்லங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு காத்திருந்தனர். நான் ஒரு பக்கம் பார்த்துக்கொண்டிருக்க, என்னவரை  இந்தப் பெரியமனுஷன் மிகவும் கவர்ந்துவிட்டான். சட்டென்று ஒரு சின்ன வாக் கூட்டிப் போய்ப் பார்த்துவிட்டு, ஃபார்மாலிட்டீஸ் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டோம். :)

அதே டிசம்பரில் இன்னுமொரு வெள்ளிக்கிழமை..கடைக்குப் போனோம். நான் மட்டும் கடைக்குள் போக, என்னவரும் இந்தப் பெரிய மனிதரும் காரிலேயே தங்கிட்டாங்க. சாமான் வாங்கிட்டு காருக்கு வந்தா உள்ளே இவர் மட்டும் இருக்கிறார். குளிரில் வெளியே நிற்க முடியாமல் மீண்டும் கடைக்குள்ளே போய்விட்டேன், அரை மணி கழித்து அவசர அவசரமாய் திரும்பிவந்தவரின் கையில் ஒரு சிவப்பு கலர் கிஃப்ட் பேக், நம்ம அதையெல்லாம் பார்க்கவே மாட்டமில்ல? கர்ர்ர்ர்-னு காருக்குள்ள வந்து உட்கார்ந்தா...உனக்காக சர்ப்ரைஸா வாங்கிவந்தேன்-னு எடுத்துக் கொடுத்தார் இந்த வெண்ணிற ஆடை நிர்மலா;)வை!! ஹவ் இஸ் இட்?! ;)
~~~~~
எங்க வீட்டுப் புது ஆளுக்குப் பெயர் சூட்டுவதற்காக ஒரு நாள் முழுக்க யோசிச்சோம், சில மணி நேர யோசனைகள், மோக்லி, ஜிண்டு, டிங்கு, பூச்சி, வேட்டை, மணி--இப்படி விபரீதமான பெயர்கள் எல்லாம் ஆலோசிக்கப் பட்டு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர், "ஜீனோ"! :)))

சுஜாதாவின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். விகடனில் "என் இனிய இயந்திரா" வந்த காலத்திலிருந்தே "ஜீனோ" மேல் ஒரு கண்ணு! மறந்து போயிருந்த ஜீனோவை நினைவூட்டும் விதத்தில் சிலகாலம் முன் வலைப்பூ உலகிலும் அறுசுவையிலும் ஜீனோ- என்ற பெயரில் ஒருவர் காமெடி பண்ணிக் கொண்டிருந்தார், thanks to him! 

ஜீனோவை இங்கே வரவைக்க வேண்டும் என்று ப்ரெஷ்ஷர் போட்டு, ட்ரிக்ஸி மூலம் தூது விட்ட இமாவின் உலகிற்கு மகியின் உலகில் இருந்து ஒரு சின்ன கொலாஜ் பரிசு!  :)))


நாங்க வாக் போயிட்டு வரோம், நன்றி, வணக்கம்!

LinkWithin

Related Posts with Thumbnails