Friday, February 25, 2011

வசந்தத்தில் ஓர் நாள்..

குளிர்காலம் இன்னும் முழுவதும் முடியவில்லை,ஆனால் வசந்தமும் வந்துவிட்டது! ஒரு அழகான சனிக்கிழமைக் காலையில் திடீரென்று மஞ்சள் பூக்கள் மலர்ந்துகிடக்கின்றன. உடனே படமெடுக்க முடியாமல், வேலைகளை முடித்துக்கொண்டு மாலையில் செல்வோம் என்று சென்றேன்..

மாலைச்சூரியன் அந்திவானத்துக்குள் அமிழும் வேளை..என்ன ஒரு ஏமாற்றம்?!!கதிரோன் மறைந்ததும் மலர்கள் எல்லாமும், இதழ்களை மூடிக்கொண்டு உறங்கத்தொடங்கியிருந்தன. அடுத்தநாள் உச்சிவெயில் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று, கேமராவுடன் சென்றபோது, என்னை வரவேற்ற வசந்தம்...

வீட்டருகில் இருக்கும் இந்த இரண்டு-மூன்று சாலைகளில் மட்டுமே தலையாட்டும் மஞ்சள் மலர்க்கூட்டங்கள்..என்னைக்காணோம் என்று தேடிக்கொண்டு (அவர்கிட்ட கூட சொல்லாம போயிருக்கியான்னு முறைக்காதீங்க,தூங்கிட்டு இருந்தவரைத் தொந்தரவு செய்யாம, எங்கே போறேன்னு நோட் எழுதிவச்சுட்டுதான் வந்தேன்.கர்ர்ர்ர்ர்ர்) வந்து, இதோ இந்த இடத்தில் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.:)

இங்கேயே இத்தனை பூக்களிருக்கே,இன்னும் கொஞ்சதூரம் போய்ப்பார்ப்போமென்று (காரில்தான்) போனோம்,ஆனால் வேறெங்கும் இப்படிப் பூக்களில்லை.

அபார்ட்மெண்டில் ஜனவரியிலிருந்தே புதுப்பூக்கள் நட ஆரம்பித்திருத்தார்கள்.இந்தப்பூக்களின் பெயர் தெரியல, பல்வேறு வண்ணங்களில் ரொம்ப அழகா இருக்கின்றன. அங்கே இங்கே தேடி இந்தப்பூக்களின் பெயர் Ranunculus Flowers என்று கண்டுபிடித்துட்டேன். மேலதிகத்தகவலுக்கு இங்கே க்ளிக்குங்க. பூக்களைப் பார்க்க யாருக்குத்தான் சலிப்பு வரும்??! இரண்டு நாட்களுக்கொருமுறையாவது எல்லாப்பூக்களையும் பார்த்து ஹாய் சொல்லிட்டுதான் இருக்கேன்.:)

இந்தப்பூவின் பெயர் Poppy. இதுவும் பலநிறங்களில் அழகழகா இருக்கு. நீளமான காம்புடன் ஒற்றைக்காலில் நிற்கும் பூக்கள் மட்டுமில்லாமல், மொட்டுக்கள் தலை குனிந்து நிற்பதும் க்யூட்டாக இருக்கும்.
படங்களை எடுக்கும்போதிருந்து இந்தப்பாடல் வரிகள் மனதுக்குள் ஓடிகிட்டே இருந்தது.பாட்டைக் கேட்டுக்கொண்டே எங்க ஊர்ப்பூக்களை ரசியுங்க! வசந்தத்தில் ஓர் நாள்,மணவறை ஓரம்..
வசந்தத்தில் ஓர் நாள்..

நன்றி!

Tuesday, February 22, 2011

பார்ட்டி

நண்பர்களையெல்லாம் பார்த்து பலநாட்களாகிட்டதால் இந்த வாரம் எங்க வீட்டில் ஒரு பார்ட்டி! இந்த ஊருக்கு வந்த புதிதில் 2 பேருடன் ஆரம்பித்த என்னவரின் ப்ராஜக்ட் இப்போது 20+ ஆட்களுடன் ஆரோக்கியமா இருக்கிறது. :) இந்தவாரம் லாங் வீகெண்டா இருந்ததால் ஞாயிறு மதியம் லன்ச்சுக்கு எல்லாருக்கும் இன்வைட் அனுப்பியாச்சு.

ஊரிலே வீட்டில் ஏதாவது விஷேஷம்னா சொந்தபந்தம் எல்லாரும் முதல்நாள் மாலையே வந்துருவாங்க. சமையலுக்கு சீனியர் குக் யாராவது இருப்பாங்க..நாம சும்மா, வெங்காயம் உரிப்பது-காய் அரிந்து கொடுப்பது-தேங்காய் துருவிக் கொடுப்பது- டீ-காபி போட்டு எல்லாருக்கும் கொடுப்பதுன்னு நைஸா நழுவிடலாம்! ;) ;) ஆனா இங்கே அப்படி இல்லையே!! எல்லா வேலையும் நாமேதான் செய்தாகவேண்டிய கட்டாயம். நான் அதிகபட்சம் சமைத்தது 12 பேருக்குதான்..இத்தனை பேருக்கு என்ன சமைக்கிறது-எப்படி சமைக்கிறதுன்னு கொஞ்சம் உதறலா இருந்தாலும்,சரி முயற்சித்துதான் பார்ப்போமேன்னு தில்லா களமிறங்கிட்டோம்.

மெனு-வை வெள்ளி மாலையே பைனலைஸ் செய்து, டிஸர்ட் வீட்டில் செய்யவேணாம்,கடையில் வாங்கிக்கலாம்னும் முடிவு செய்தாச்சு. அன்னிக்குன்னு பாத்து கிரிக்கெட் மேட்ச் வேற வந்து புண்ணியத்தை கட்டிகிச்சு, அதிகாலை 4 மணிவரைக்கும் என்னவர் டிவி முன்னால இருந்து நகரலை.(கர்ர்ர்ர்ர்!!!) சனிக்கிழமை காய்கறி-மளிகை எல்லாம் வாங்கிவரவே அரைநாள் முடிந்தது. வீடு வந்ததும் ஐயா சாப்பிட்டுவிட்டு நைஸா உள்ளே போய்த்தூங்கிட்டார்! :)

நான் மலாய்கோஃப்தா-விற்கு கோஃப்தாவை செய்துவைத்து..
ஊறவைத்த வடைப்பருப்பை அரைத்து வடையும் சுட்டு முடிக்கையில்...
என்னவர் மெதுவா எழுந்து வந்து 'டீ கிடைக்குமா?'ன்னாரு!! டீ குடித்ததும் பேட்டரி சார்ஜ் ஆகி, நான் வெங்காயம்-காய்கறிலாம் நறுக்கித்தரேன்னு சுறுசுறுப்பா சொன்னார்.
இதானே சான்ஸு?!!! நானும் மிஸ் பண்ணாம எல்லாத்தையும் எடுத்து குடுத்தேன். எவ்ளோ அழகா கட் பண்ணீருக்கார் பாருங்க! :) :)

அடுத்து சப்பாத்தி போட ஆரம்பித்தேன்..நண்பர்களில் 99% வடஇந்தியர்கள்..அதனால சப்பாத்தி கட்டாயம் செய்தாகணும். (முதல் ஐட்டமா காலியானதும் இதுதான்.)
மலாய் கோஃப்தா-கடலை கறி-தால்,கேஸரோல் இதெல்லாம் செய்யலாம்னு நினைத்திருந்தோம். கேஸரோலுக்கு பீன்ஸ் நறுக்கி வேகவைத்து, மலாய் கோஃப்தா க்ரேவிக்கு வதக்கி, ஊற வைத்திருந்த கொண்டைகடலை வேகவைத்து,துவரம் பருப்பு வேகவைத்து எல்லாவற்றையும் ஆறவைத்து, பத்திரமா மூடி எடுத்து ப்ரிட்ஜில் வைத்துட்டு தூங்கிட்டோம்.

ஞாயிறு காலை..முதல்ல வெறும் சாதம் ஒரு குக்கர் வைத்துட்டு,அடுத்து ஜீரா ரைஸ் வைத்தேன்..

சைட்-பை-சைட் பீன்ஸ் கேஸரோலுக்கும் எல்லாம் கலந்து அவன்-ல வைத்தாச்சு. இந்தமுறை சீரகம்-சில்லி ப்ளேக்ஸ் எல்லாம் போடல..ஆரஞ்ச் கலர் கேப்ஸிகம் ஒண்ணை பொடியாக நறுக்கி கலந்து பேக் செய்தேன்.
பருப்புக்கு தாளித்து கொதிக்கவிட்டு,கடலைகறியை செய்து, கோஃப்தா க்ரேவிக்கு வதக்கிவைத்திருந்ததை அரைத்து க்ரேவி வேலையை முடித்து மணியைப் பார்த்தா 11.20!

நேரம் நிறைய இருந்தது. இனிப்பு எதுவும் செய்யாம இருக்கோமேன்னு குறையா இருந்தது..எதுக்கு அதைமட்டும் விட்டு வைப்பானேன்,வடை சுட்டிருக்கோம்,மேட்ச்சிங்கா சேமியா பாயசம் வைப்போம்னு அதையும் செய்தாச்சு! :)

எல்லா உணவுவகைகளையும் அவன்-ல வைத்து சூடு செய்து ரெடியா வைத்தோம். நண்பர்கள் வந்து சேர கரெக்ட்டா லன்ச் டைம். டேபிள்ல எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணினோம். குட்டீஸ் உட்பட எல்லாருக்கும் சாப்பாடு பிடித்திருந்தது. குறிப்பா மலாய் கோஃப்தாவும் பீன்ஸ் கேஸரோலும் நிறைய பாராட்டுப் பெற்றன. :)

உங்க வசதிக்காக புல் மெனு, இதோ! :) :)

இடது வரிசை,மேலிருந்து கீழ்
1.பீன்ஸ் கேஸரோல்
2.மலாய் கோஃப்தா
3.சாலட் ப்ளேட்+ தயிர்

நடுவரிசை,மேலிருந்து கீழ்
1.ஜீரா ரைஸ்
2.கடலை கறி
3.தால்

வலதுவரிசை,மேலிருந்து கீழ்
1.ஒயிட் ரைஸ்
2.சப்பாத்தி(தீர்ந்துடுச்சுங்க,அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.:))
3.வடை
4.சேமியா பாயசம்
5.பக்லவா

சாப்பாட்டு மும்முரத்தில போட்டோ எடுக்க மறந்துட்டேன்..இந்தப்படம் எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் எடுத்தது.ஹிஹி!
மலாய் கோஃப்தா -ரெசிப்பிக்கு லிங்க் தமிழில் இங்கே, ஆங்கிலத்தில் இங்கே.
கேஸரோலுக்கு லிங்க் இங்கே.

50 பேர் -100 பேருக்கு சமைக்கும் ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கும்போது இவ்ளோ டீடெய்லா ஒரு போஸ்ட் தேவையான்னு நீங்க நினைக்கலாம்..இருந்தாலும் சின்னதா பார்ட்டி வைக்க நினைக்கும் ஆட்களுக்கு,சமையல்ல புதுசா நுழைந்திருக்கும் ஆட்களுக்கு உபயோகமா இருக்குமேன்னு தோணுச்சு. சமைக்க முடியுமான்னு இருந்த டவுட்டெல்லாம் காணாமப் போய், இப்போ இந்தமாதிரி குட்டி பார்ட்டீஸுக்கு குக்கிங் கான்ட்ராக்ட் எடுத்துடலாமான்னு யோசிச்சுட்டிருக்கேன். ஆர்டர் தர யாராவது தைரியசாலிகள் இருக்கீங்களா? :) ;)

Wednesday, February 16, 2011

க்ரீன் பீன்ஸ் கேஸரோல்

தேவையானபொருட்கள்
1" அளவுக்கு நறுக்கிய பீன்ஸ் துண்டுகள்-11/2கப்
பால்-1/2கப்
Campbell's கண்டெஸ்ட் க்ரீம் ஆஃப் மஷ்ரூம் சூப்-1/2கப்
ஃப்ரைட் ஆனியன்-1/4கப்
மிளகுத்தூள் -1டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ்-11/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
பொடித்த வால்நட்-1டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை
பீன்ஸை தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோவேவில் வேகவைத்து தண்ணீரில்லாமல் வடித்து எடுக்கவும்.

கேஸரோலில் பாலுடன் மஷ்ரூம் சூப் சேர்த்து கலக்கவும்.

பீன்ஸ்,மிளகுத்தூள்,சில்லி ஃப்ளேக்ஸ்,பாதியளவு ஃப்ரைட் ஆனியன்,சீரகம், உப்பு இவற்றையும் சேர்த்து,
நன்றாக கலந்து 350F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 25 நிமிடங்கள் வைக்கவும்.
25 நிமிடங்களில் கலவை நன்றாக கொதித்து இருக்கும்.

அதனை ஸ்பூனால் கிளறிவிட்டு, மீதியுள்ள ப்ரைட் ஆனியனையும் வால்நட் துண்டுகளையும் தூவி..
மீண்டும் 5 நிமிடங்கள் பேக் செய்யவும்.

ரிச் & க்ரீமி க்ரீன் பீன்ஸ் கேஸரோல் ரெடி.

குறிப்பு
இது Campbell's Kitchen-ல பார்த்து,சில மாற்றங்களுடன் செய்தேன். (அவங்க சில்லி ப்ளேக்ஸ் -சீரகம்லாம் போட சொல்லிருக்க மாட்டாங்கன்னு உங்களுக்கே தெரியும். :) ) அடுத்த முறை பச்சைமிளகாய் போட்டு செய்ய நினைத்திருக்கேன். சூடாக சாப்பிட சூப்பரா இருந்தது.
நாங்க வெறும் சாதத்துக்கூட மிக்ஸ் பண்ணியும்(!!),தனியாவும் சாப்பிட்டோம்.

இதனை மெய்ன் டிஷ்-ஆகவும் சாப்பிடலாம். க்ரீன் பீன்ஸ் கேஸரோலுடன் வறுத்த/மசித்த உருளைக்கிழங்கு (roasted/mashed potato) அவன் ரோஸ்டட் சிக்கன் போன்ற நான்வெஜ் ஐட்டங்களுடனும் சாப்பிடலாம்னு சொல்லறாங்க. உங்க வசதிப்படி சாப்பிடுங்க. :)

Sunday, February 13, 2011

இயற்கை!

கடவுளின் கைவண்ணத்தில் பூக்கள் மட்டும் இல்லை, நாங்களும் இருக்கிறோம் என்று தலையாட்டும் இலைகள்! இலைக்கு நடுவே அழகாய்ப் பூத்திருக்கும் ஒரு குட்டிப் பூ!!

இத்துணூண்டாய் மூன்று இலைகள்..அதிலே அடுக்கடுக்கடுக்காய் எத்தனையெத்தனை இலைகள்?!

மஞ்சள் நிறப்பூக்களுடன் இருந்த இந்தச் செடிகளில் பூக்களைவிட இலைகள் என்னைக்கவர்ந்தன.

Happy Valentines Day!

Thursday, February 10, 2011

காலிஃப்ளவர்-ப்ரோக்கலி பொரியல்

காலிஃப்ளவர்-ப்ரோக்கலி பொரியல்னு டைட்டில் இருக்கு,ஆனா போட்டோல வெறும் காலிஃப்ளவர் மட்டும்தானே தெரியுதுன்னு நீங்க நினைக்கறீங்கன்னு எனக்கு தெரியுமே! :)

இந்தப் பொரியல் தனியா காலிஃப்ளவர்ல செய்தாலும் நல்லா இருக்கும்,ரெண்டு காயும் சேர்த்து செய்தாலும் நல்லா இருக்கும். இது காலிஃப்ளவர் மட்டும் செய்தபோது எடுத்த போட்டோ.

தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர்-ப்ரோக்கலி பூக்கள்-1கப்
வெங்காயம்(சிறியதாக)-1
பச்சைமிளகாய்-1
மிளகுத்தூள்-1/2ஸ்பூன்
சோம்புத்தூள்-1/
Dry தேங்காய் பவுடர்-3/4டேபிள்ஸ்பூன்
உப்பு
தாளிக்க
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு-தலா 1 டீஸ்பூன்
எண்ணெய்
அரைக்க
பாதாம்-10
இஞ்சி-சிறுதுண்டு
பூண்டு-2 இதழ்கள்

செய்முறை
பாதாமை வெந்நீரில் ஒரு மணிநேரம் ஊறவைத்து தோலுரிக்கவும். அதனுடன் இஞ்சி-பூண்டு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மைய அரைத்துவைக்கவும்.

வெங்காயம்,பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம்,க.பருப்பு-உ.பருப்பு தாளித்து வெங்காயம்,ப.மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்த பாதாம்-இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.

காலிஃப்ளவர்-ப்ரோக்கலி துண்டுகளை சேர்த்து உப்பு,மிளகுத்தூள்,சோம்புத்தூள் சேர்த்து அதிக தீயில் 4-5 நிமிடம் கடாயை மூடிவைத்து வேகவிடவும்.

தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான காலிஃப்ளவர்-ப்ரோக்கலி பொரியல் ரெடி.
இதில் காய்கள் முழுவதும் வெந்திருக்காமல் க்ரன்ச்சியாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம். நான் இந்தப் பொரியலைத் தனியாவே சாப்பிட்டுடறது வழக்கம். ஹிஹி!நீங்க உங்க வசதிப்படி சாப்பிடுங்க. :)

Friday, February 4, 2011

ரசித்து ருசித்தவை- 4

கடலை எங்க வீட்டில் இருவருக்குமே பிடிக்கும்.அதுவும் வறுத்த கடலைன்னா ரொம்பவே பிடிக்கும்.இங்கே அமெரிக்கன் ஸ்டோர்ல கிடைக்கும் கடலைகள் ஏனோ அவ்வளவா பிடிக்கலை எங்களுக்கு..இண்டியன் ஸ்டோர்ல பச்சைக்கடலைதான் கிடைக்கும். இந்த கடலை வறுப்பது கொஞ்சம் நச்சுப்பிடிச்ச வேலை,ஒரு நிமிஷம் ஏமாந்தா கறுகிப்போயிரும்..பக்கத்துலயே நின்னு வறுக்கணும்.(இந்த இடத்தில நீங்க வேற(!) கடலை வறுக்கறதைப்பத்தி யோசிச்சீங்கன்னா அதுக்கு கம்பெனி பொறுப்பில்ல! ;) )

சுகந்திக்கா ஒருமுறை கடலை வறுக்க ஒரு ஈஸி டெக்னிக்கும், கடலை உருண்டைக்கு ஒரு ரெசிப்பியும் குடுத்திருந்தாங்க. அப்ப இருந்து செய்துபார்க்க நினைத்தேன். இதோ,நேத்து செய்தாச்சு..ரொம்ப ஈஸியா இருந்தது. தேங்க்ஸ் சுகந்திக்கா!
ஒரு பேக்கிங் ட்ரேல ஒரு கப் பச்சைக்கடலைய பரப்பி, 300F ப்ரீஹீட் செய்த கன்வென்ஷனல் அவன்ல 15 நிமிஷம் bake செய்தா போதும்.
ட்ரே-ய அவன்ல வச்சுட்டு டைம் செட் பண்ணிட்டா, 15நிமிஷங்கழிச்சு,அதே சத்தம்போட்டு நம்மளக் கூப்பிடும். எடுத்து வெளில ஆறவைச்சா சூப்பரா மொறு-மொறு கடலை ரெடி!

முதல்முறையா கடலை உருண்டை செய்யறதால கொஞ்சமா செய்துபார்க்கநினைத்து ஒரு கப் கடலைய எடுத்தேன். 2கப் கடலைக்கு 3/4கப் வெல்லம்னு சுகந்திக்கா சொல்லிருந்தாங்க,அதனால வெல்லம் கால்கப்புக்கு கொஞ்சம் அதிகமா, அரைகப்புக்கு கம்மியா (குழம்பிடாதீங்க, அது வேற ஒண்ணுமில்ல, 3/4கப்புல பாதி! நம்மள்லாம் யாரு,கணக்கில புலியாச்சே!! :) ) வெல்லம் எடுத்தாச்சு.
கடலைய மிக்ஸில 4-5 முறை pulse-ல பொடிச்சுட்டு,வெல்லத்தையும் சேத்து 2-3 முறை pulse பண்ணிஎடுத்தேன்..உருண்டை பிடிக்கும்போது கையில கொஞ்சமா நெய் தடவிக்க சொல்லிருந்தாங்க..ஆனா நான் என்ன சொதப்பினேன்னு தெரில,மாவு உருண்டையே சேரமாட்டேங்குது!! 2 டீஸ்பூன் நெய்ய ஊத்தி உருட்டினாலும் முடியல!
சரின்னு மறுபடியும் மிக்ஸில போட்டு 2-3 pulse போட்டேன்.. பறுபறுன்னு இருந்த கடலை கிட்டத்தட்ட மாவாகிடுச்சு. உருண்டையும் பிடிச்சாச்சு. ஒரொரு உருண்டையும் ஓரொரு சைஸ்ல இருக்குன்னு எனக்கே தெரியுது.ஆனா இதான் என்னால முடிஞ்சது. ஹிஹிஹி!

இந்த அளவுக்கு இவ்வளவு உருண்டைகள் வந்தது. வழக்கம்போல டேஸ்ட் பார்க்காம,பத்திரமா ஒரு பாக்ஸ்ல போட்டு மூடிவைச்சாச்சு.
சாயந்திரம் பசியோட வந்த என்னவர் & இன்னொரு ப்ரெண்டுக்கும் கடலை உருண்டை ரொம்ப பிடிச்சுப்போச்சு..அப்புறம் இன்னொரு ப்ரெண்ட் பேமிலி வந்தாங்க,அவங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. மீதி இருந்த 4 உருப்படி இன்னிக்கு என்னவரின் ஆபீஸ்க்கு போயிடுச்சு,ஆக மொத்தம் கடலைஉருண்டை காலி! :) ஈஸீ அன்ட் ஹெல்த்தி ரெசிப்பியைப் பகிர்ந்ததுக்கு சுகந்திக்காவுக்கு நன்றி!
~~
ஆசியாக்காவின் பீட்ரூட் -பாசிப்பருப்பு பொரியல்..பீட்ரூட் வாங்கும்போதெல்லாம் இந்தப்பொரியல் செய்வது வழக்கமாப்போச்சு.
பலமுறை செய்தாச்சு, முக்கால்வாசி டின்னர்க்கு செய்ததால் போட்டோ சரியாக வரல. அட்ஜஸ்ட் பண்ணி,லைட் போட்டு போட்டோவைப் பாத்துக்குங்க. தேங்க்ஸ் பார் அண்டர்ஸ்டேண்டிங்.;)

சுரைக்காய்-கடலைப்பருப்பு கூட்டு..இது சப்பாத்திக்கு சூப்பரா மேட்ச் ஆகும்.


நன்றி ஆசியாக்கா!
~~
இது காமாட்சி அம்மா அவர்களின் மேத்தி புலாவ்...

பச்சைப்பட்டாணியும் போடச்சொல்லியிருந்தாங்க..நான் பட்டாணி சேர்க்காமல்தான் செய்தேன்.புலாவ் டேஸ்டியா இருந்தது. ரெசிப்பியைப் பகிர்ந்ததுக்கு நன்றிம்மா!

பி.கு. முதல் படத்தில கடலை உருண்டை ப்ளேட்டுக்கு பக்கத்தில இருப்பது ஓக் மரத்தின், வறண்டுபோன காய்கள். அழகா இருக்குன்னு எடுத்துட்டு வந்தேன்..அதைவைச்சு கலைக்கண்ணோட ஒரு போட்டோ எடுப்பதா நினைத்து... ஹிஹிஹி!
ஹேப்பி வீகெண்ட் எவ்ரிபடி!

LinkWithin

Related Posts with Thumbnails