Wednesday, June 28, 2017

வானமே, வானமே!!

கடந்த மே மாதக்கடைசியில்  ஒரு நாள் முற்பகல் வெளியே சென்றுவிட்டு வருகையில், வானில் மேகங்கள், சீராகக் கிள்ளிப் போடப்பட்ட பஞ்சுத் துணுக்குகளாய் பறந்துகொண்டிருக்க...

ஹைவே-யில் காரில் வர வர கண்ணாடி glare அடிப்பதையும் பொருட்படுத்தாமல் போனில் எடுத்த படங்கள், யாம் பெற்ற இன்பம் இந்த வலைப்பூவும் பெறட்டும் என்று இங்கேயும் வருகை புரிந்திருக்கின்றன! :)
நீலவானத்தில் காற்றின் திசைக்கேற்ப அலையும் மேகங்கள் அன்று மட்டும் ஏதோ ஒரு அலைவரிசையில் அடித்த காற்றின் கை பட்டு அழகழகாய் சிதறி கிடந்த காட்சி கண்களைக் கைது செய்தது.
 வீட்டுப்பக்கம் வந்துவிட்டோம் என்பதை பறைசாற்றும் மலைக்குன்றுகள்! :D
முன்பெல்லாம் வானம் பார்க்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்கும். இப்போது அரிதாகவே கிடைக்கிறது. பெரும்பாலும் மேகங்களற்ற வானமே கண்ணுக்குக் கிடைக்கும். பலநாட்கள் கழித்து பார்த்ததாலோ அல்லது, திடீரென வந்த பல்வலியால் துன்பப்பட்டு சொத்தைப்பல்லை சரிசெய்ய  முதல் படியாக இரண்டு மணி நேரம் பல் மருத்துவரிடம் சென்ற போது குட்டிப்பெண் அமைதியாக இருந்து காரில் திரும்பி வரும்போதும் சமர்த்தாக தூங்கிவிட்டதால் சும்மா கண்ணில் பட்ட வானம் வெகு அழகாகத் தென்பட்டதோ?! :) :) ஹிஹி...!! 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails