Sunday, June 29, 2014

பத்து கேள்விக்குப் பதில்! ;) :)

முக்கியமான முன்குறிப்பு
இந்த பத்து பதில்களில் பெரும்பாலானவை நகைச்சுவையை மனதில் கொண்டு எழுதப்பட்டவை. யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை! எல்லாருமே சீரியஸாவே பதில் சொல்லிட்டு இருக்காங்க, அதான் நாம கொஞ்சம் காமெடியா எழுதலாமேன்னு...ஹிஹி!

1. உங்களுடைய 100வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
பிறந்தநாள் பரிசாக ஒரு தங்கப் பல் செட் வாங்கி, "கருக்-மொருக்" னு கடிச்சுச் சாப்பிடற ஸ்னாக்ஸ் எல்லாம் வயிராற, மனசார சாப்ட்டு சந்தோஷமா கொண்டாட விரும்புகிறேன்.

2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?
கண்ணைத் திறந்து கொண்டே தூங்கக் கற்க விரும்புகிறேன்.

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
..தோ...இப்பத்தான்! :) மொதக் கேள்விக்கு பதில் எழுதும்போது சிரித்தேன், இப்பவும் சிரிக்கிறேன்! :)

4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
கரண்ட் கம்பியப் புடிச்சு தொங்கி(!) பார்க்க ஆசை..
கனெக்ட் பண்ணிய ஒயரை எல்லாம் கையால் இழுத்துப்பார்க்க ஆசை!
இங்கே அது முடியாது என்பதால், திங்க் பண்ணி அப்பறமா சொல்லறேனே, ப்ளீஸ்! ;)

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
உங்க அப்பா-அம்மாவை இவ்வளவு நாள் பார்த்த பிறகும் இப்படி ஒரு துணிகரமான முடிவை எடுத்த உன் மன தகிரியத்தை;)ப் பாராட்டுகிறேன். பல்லாண்டு, பல்லாண்டு, பலகோடி நூறாண்டு வாழ்க! :)

6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?
பூமிப் பந்தின் ஒரு பக்கம் பகல், ஒரு பக்கம் இரவு எல்லாம் இருக்கப்படாது. எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் இரவு, ஒரே நேரத்தில் பகல். அப்புறம், உலகத்தில 24 மணி நேரம், 35 மணி நேரம் விமானப் பயணங்களெல்லாம் கிடையாது. கண்ணை மூடி கண்ணைத் திறந்தா, யு.எஸ். டு கோயமுத்தூர்(சும்மா உதாரணமுங்க..எந்த ஊர் வேணா வைச்சுக்கலாம்! ) போயிரணும்.

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
நல்லவங்க, நண்பர்ங்க, பெரியவங்ககிட்ட கேக்கிறதுதான். ஆனா கடைசி முடிவு ஆண்டவன் கைல. கண்ணை மூடி சாமி கும்புட்டு எந்த வழியில் போகும்படி என் மனதிற்கு தோன்றுமாறு ஆண்டவன் என்ன சொல்றாங்களோ அதில போயிருவங்க.

8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
இன்னா பண்றது! நம்மளும் பிரபலம் ஆகிட்டோம்னு கண்டுக்காம போயிக்கினே இருக்கறது தான்! ஐ டோண்ட் கேர்! ;) நான் எனக்கு உண்மையா இருப்பது மிக முக்கியம்னு நினைக்கிறேங்க.

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
நான் "சொல்ற" நிலைமையில் இருப்பனான்னு தெரில. அழுதுகிட்டு இல்ல இருப்பேன்? அவரையும் மனம் கரையும்வரை அழுது முடிக்கச் சொல்லி அதன் பின்னர் தேற்ற முயல்வேன்.

10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
இந்தக் கேள்விய மெய்யாலுமே பாராட்டுறேன்ங்க.."உங்க வீட்டில்" என்று ஒரு வார்த்தையச் சேர்த்தீங்களே..அதுக்காக! :) நம்ம வீட்டில என்ன வேணா பண்ணலாமே! ம்...என்ன பண்ணலாம்?? வீட்டை க்ளீன் பண்ணுவோம் முதல்ல..அப்புறம் இருக்கவே இருக்கு டிவி-கம்ப்யூட்டர்-ஐ பேட் எக்ஸறா..பிறகு சமையல், சாப்பிடறது..எனக்கு தனியா இருந்தா தூக்கம் மட்டும் வராது, சோ நோ தூக்கம். தட்ஸ் ஆல்!
~~~
சரி, ஒரு வழியா மொக்கைய முடிச்சாச்சு..ஒடஞ்சு சுக்கு நூறாப் போன உங்க இதயத்தை சிரமப்பட்டு, பெவிகால், க்விக்-ஃபிக்ஸ், எம்-ஸீல் எல்லாம் போட்டு ஒட்டிகிட்டு சாப்பிடவாங்க!!
ஒரே தட்டை சுத்திச் சுத்தி வந்து படமெடுத்திருக்கேனேன்னு யோசிக்கப்படாது..நாமல்லாம் ஆரு? விக்கிரமாதித்தன் வம்சமில்லையா..நினைச்சது கிடைக்கும்வரை விடாம சுடுவோம்ல? ;) 
 இந்தப் படத்தில சோறு ஃபோகஸ் ஆகிருக்குங்க..
 இந்தப் படத்தில பச்சைப்பயறும், நெய்யும் ஃபோகஸ் ஆகிடுச்சு..
 இதிலே கேரட் பொரியல்...
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், குட்டி உருளை வருவல்!! இவரை போட்டோ எடுக்கத்தான் இம்புட்டு பில்ட்-அப்பூ! ரொம்ப ரொம்ப சிம்பிள் அண்ட் டேஸ்ட்டி வருவல். சின்ன உருளைக் கிழங்கை வேகவைச்சு தோலுரிச்சு, ஓரொரு கிழங்கையும்  உள்ளங்கைல வைச்சு லேசா அழுத்தி வைச்சுக்குங்க. கடாயில கொஞ்சம் எண்ணெயை தாராளமா ஊத்தி, கடுகு தாளிச்சு வெந்த கிழங்கு, மஞ்சப்பொடி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிட்டு, உப்பு மிளகாத்தூள் போட்டு புரட்டி இறக்கிருங்க. தட்ஸ் ஆல்! மொறு மொறுன்னு காரசாரமான வறுவல் ரெடி!
ஓக்கே...நன்றி வணக்கம், அடுத்த பதிவில் சந்திப்போம். 

12 comments:

  1. :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))
    எனக்கும் ஒரு பல் செட்டுக்கு ஆர்டர் கொடுத்துடறேன் :)))

    நல்லா சிரிச்சி முடிச்சிட்டு நாளைக்கு வரேன் மிச்ச கமெண்ட்சுக்கு

    ReplyDelete
  2. ஹா... ஹா... ரசித்தேன்...

    // நான் எனக்கு உண்மையா இருப்பது மிக முக்கியம்... // சிறப்பு... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. 100 வயசு ஆனாலும் பெண்களுக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசை போகாது போலிருக்குதே

    ReplyDelete
  4. சாப்பாட்டுத் தட்டப் பாத்துட்டு என்ன பதிவுன்னே மறந்துபோச்சு. இதோ மீண்டும் படிச்சுட்டு வரேன்.

    ஹும் .. மகி தேர்வை வெற்றிகரமா முடிச்சாச்சு. பாத்து காப்பி அடிச்சிட‌லாமா அல்லது மனப்பாடம் பண்ணி எழுதிடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.

    நாலாவது கேள்விக்கான பதில் சூப்பர். ஆனா மறந்துபோய்கூட இதை செய்யமாட்டேன். எல்லாம் சின்ன வயசு அனுபவம்தான். மொத்தத்தில் எல்லா பதில்களும் சூப்பர்.

    ReplyDelete
  5. என்னமா பதில் கொடுத்திருக்கீங்க மஞ்சள் மகி!..

    சூப்பர்!..ரொம்ப ரசிச்சு சிரிச்சு படிச்சேன்.

    அப்புறம் சாப்பட்டுத்தட்டு உ.கி வறுவல் உடனே செய்து பார்க்கணும்..
    அசத்திட்டீங்க மகி!..

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. //எல்லாருமே சீரியஸாவே பதில் சொல்லிட்டு இருக்காங்க// இது என்ன்வோ உண்மைதான்.ஆனா இதை சொல்லி நீங்க எஸ்கேப்.
    நல்ல நகைச்சுவையாகவே எழுதியிருக்கிறீங்க மகி. 4வது கேள்வி!!!! அவ்வ்வ். இப்படி ஒரு ஆசையா.டிபரண்ட்.
    ஆகா சாப்பாட்டை பார்த்ததும் பசி கிளம்புதே. சின்னதா ஒரு குறிப்பும் கூடவே. நல்ல (நகைச்)சுவையான ப(தில்)கிர்வு.நன்றி.

    ReplyDelete
  7. சிரிப்பதற்காகவே பதில் சொல்லீட்டீங்க. அத்தனையும் உண்மை என்பது சுவை கூட்டுகிறது. உகிழங்கு செய்முறைக்கும் தங்கப்பல் ஐடியாவிக்கும் நன்றிங்கோவ்.

    ReplyDelete
  8. சாப்பாடுப்த்தட்டு மிக அழகு:))

    ReplyDelete
  9. கரண்ட் கம்பியப் புடிச்சு தொங்கி(!) பார்க்க ஆசை..
    கனெக்ட் பண்ணிய ஒயரை எல்லாம் கையால் இழுத்துப்பார்க்க ஆசை!///உங்கள் ஆசை நிறைவேறட்டும். சூப்பர் பதில்கள்.

    ReplyDelete
  10. ;))))

    ம்... சூப்பர் மகி. ;)
    பதில்கள் படிக்கையில் எனக்கு ஆங்காங்கே வேறு ஒரு நட்பு ஞாபகத்திற்கு வருகிறார். ;))))

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails