அப்பாடி 7 கேள்விக்குறி(கவனிங்க,கேள்வி இல்ல,கேள்விக்குறி) ஆகிடுச்சு. இதுக்கும் மேல கேள்வி கேட்டா,எல்லாரும் அப்பூடியே அடுத்த ப்ளாகுக்கு தாவிடுவீங்க,அதனால கேள்விகளை நிறுத்திட்டு அடுத்த ஸ்டெப்புக்கு போவோம்.:)
என்னோட சிற்றறிவுக்கு தெரிந்தவரை ரவைல இரண்டே வகைதான்..வெள்ளைரவை-கோதுமை ரவை. கல்யாணமாகி, பெங்களூர் வந்தப்ப அங்கே கோதுமை ரவை கிடைக்காது,இங்கருந்தே வாங்கிட்டுப்போயிருங்கன்னு அறிவுரை கிடைத்தது. அதே மாதிரி பெங்களூர்ல வெள்ளை ரவை மட்டுமேதான் கிடைத்தது.
ஒரொரு முறையும் ஊருக்கு போயிட்டு வரும்போது கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்,ஹோம் மேஜிக் [கண்ணன் அம்மா வீட்டு மளிகை,ஹோம் மேஜிக் மாமியார் வீட்டு மளிகைக்கடைங்க. :) கடை எங்களுதல்லாம் இல்ல,மாசாமாசம் அங்கேதான் மொத்தமா சாமான் வாங்கறது...ப்ரீ ஹோம் டெலிவரியும் இருக்கறதால நல்ல வசதியா இருக்கும்.] இப்படி கடைகள்ல ரவை, சின்ன வெங்காயம்,பெரியவெங்காயம்(சிரிக்கக்கூடாது, அப்ப வெங்காயம் யானைவிலை-குதிரை விலை வித்துட்டு இருந்த காலம்) இதெல்லாம் வாங்கிட்டு போவோம்.
ரவைல ஆரம்பிச்சு கதை எங்கேயோ போயிடுச்சு. அகெய்ன்,ரிடர்ன் பேக் டு ரவை..சம்பா ரவைன்னு ஒண்ணு சொல்லுவாங்க,அது என்னன்னு ஒரு சந்தேகமும் இருக்குது..அதை கொஞ்சம் ஒத்திவச்சுட்டு மேலே போலாம். இங்கே வந்தப்புறம் எனக்கு தெரிந்தது,புரிந்தது அமேரிக்கால கோதுமை ரவை கிடைக்காது..ஒன்லி ஒயிட் ரவா-சூஜி-செமோலினா(என்னல்லாம் பேரு பாருங்க!!)தான் கிடைக்கும் என்று. அம்மா வீட்டுலல்லாம் உப்மா-ன்னா..என்னது?உப்ப்ப்ப்ப்ப்புமாவா??ன்னு கேட்டதெல்லாம் போயி, ஒரு நாளாவது கோதுமை ரவை உப்மா சாப்பிடமாட்டோமான்னு ஏக்கமா இருக்கும். அப்பல்லாம், பல்கர்னு ஒண்ணு இருப்பது..ஏஷியன் மார்க்கெட்-பெர்ஷியன் மார்க்கட் இங்கேயும் நம்ம சமையல் பொருட்கள் எல்லாம் கிடைக்கும்ங்கறதெல்லாம் எனக்கு தெரியாதுங்க.
அப்புறம் மெது-மெதுவே டயட் சமையல் ப்ளாக்ல எல்லாம் பாத்து,அவிங்ககிட்ட டவுட்டு கேட்டுகேட்டு பல்கர்-னா க்ராக்ட் வீட் என்று புரிந்துகிட்டேன். புரிந்தாலும், நான் சாமான் வாங்கற கடைலல்லாம் அது கிடைக்கவேஇல்ல. கோதுமை குருணைதான் இருந்தது.அது கோதுமை சாதம் வைக்கதான் நல்லாருக்கும்..உப்மாவா செய்தா...கொழ-கொழன்னு நல்லாவே இருக்காது.(அதையும் விடாம வாங்கி செய்து பார்த்த அனுபவம்,ஹிஹி)
ஒருவழியா இப்ப இருக்க ஊருக்கு வந்ததும், இங்கே கடைகள்ல பர்கர்..ச்சீ,ச்சீ,பல்கர் கிடைத்தது. நல்லா நைஸா நம்ம ஊர் கோதுமை ரவை மாதிரியே இருந்தது. கோவைல "மயில்"மார்க் ரவைன்னு ஒண்ணு எங்க மாமியார் வாங்குவாங்க, சூப்பரா இருக்கும். அந்த உப்மா சாப்ட்டமாதிரியே ஒரு பீலிங் இருந்தது. இப்பல்லாம் வெள்ளைரவை வாங்கறதே அபூர்வமாகிடுச்சு. :)
உப்மால உங்க கற்பனைத்திறன யூஸ் பண்ணி பலவிதமா செய்யலாம்..அதாவது தக்காளி சேர்த்து/சேர்க்காம செய்யறது, தேங்காய்த்துருவல் சேர்த்து/சேர்க்காம செய்யறது...பைனல் டச்சா, ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணெய்/நெய் ஊற்றி கிளறுவது..இப்படி. சரி,நான் செய்வது எப்படின்னா...
{அப்பாடி,மொக்கை ஓவர்..ஓவர் டு தி ரெசிப்பி!! :) ---ன்னு நினைச்சா...நீங்க ரொம்ப பாவம்!!}
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை-1டம்ளர்
தண்ணீர்-2டம்ளர்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3
இஞ்சி-சிறுதுண்டு
வரமிளகாய்-2
கடுகு-1/2ஸ்பூன்
கடலைப்பருப்பு-1ஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது
எண்ணெய்
உப்பு
செய்முறை
வெங்காயம்-மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். (இது முக்கியமான ஸ்டெப்..வெங்காயம் நீளமான துண்டுகளா இருந்தாதான் நல்லாருக்கும்.இதுக்கு பேரு உப்மா கட்..ப்ரியாணி கட்,சாம்பார் கட் இப்படி வெங்காயம் வெட்டறதுல பலவகைகள் இருக்குது,அதெல்லாம் மெதுவா சொல்லறேன்.)
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளித்து பருப்புகள் பொன்னிறமானதும் வெங்காயம்-மிளகாய்-இஞ்சி-வரமிளகாய்-கறிவேப்பிலை-உப்பு-சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிவந்ததும்,ரவையை கொட்டி கிளறவும்.(டோன்ட் வொரி..இது கட்டி தட்டாது,டென்ஷன் இல்லாம கிளறலாம்.;))
அடுப்பினை சிறுதணலில் வைத்து 3 நிமிடங்கள் வைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை,தேங்காயெண்ணெய் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான உப்மா ரெடி!
உப்மா செய்தப்புறம் ஒரு இம்பார்டன்ட் பார்ட் இருக்கே..சாப்பிடறது!! :P :P இது தக்காளி சேர்த்து செய்த உப்மாங்க. தேங்காசட்னி வச்சு சாப்பிடலாம்.
ஓக்கே..மொக்கை கம் ரெசிப்பி இத்தோட முடிஞ்சது. அடுத்த வாரம் பாக்கலாம். ஹேவ் எ நைஸ் வீக்எண்ட் எவ்ரிபடி!