Tuesday, August 9, 2011

கோயிலும் சில சுவாரஸ்யங்களும்...

இந்தக் கோயில் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு-மூன்று மணிநேரப் பயணத்தில் இருக்கிறது. மூலவர் பெருமாள், அருகிலேயே சிவபெருமானுக்கும் தனிக்கோயில். பாலாஜி கோயிலினுள் ராமபிரான், பத்மாவதித் தாயார்,ஆண்டாள், ராதாகிருஷ்ணர், ஆஞ்சனேயர் சந்நிதிகள் இருக்கின்றன.

மேலே உள்ள படத்தில் வலது ஓரத்தில் இருப்பது சிவன் கோயில். சிவபெருமானுடன் விநாயகர்,முருகர், மீனாட்சி, நடராஜர், நவக்கிரஹ சந்நிதிகள் இங்கே இருக்கு. உள்ளே நுழைந்துட்டா யு.எஸ்.ஸில் இருக்கிறோம் என்பதே மறந்துடும், அப்படியே நம்ம ஊர்க் கோயில்கள் போல உணர்வு வந்துவிடும். :)

இந்தப் படத்தில் பாலாஜி கோயிலின் நுழைவு வாயில் கோபுரம். சிவன் கோயிலில் ஒருவர் மும்முரமாகப் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்தார். எங்க ஊரில் கோயில் கோபுரங்கள் பலவண்ணங்களில் வர்ணம் பூசப்பட்டு இருக்கும், இங்கே வெள்ளை நிறமாகவே பெயின்ட் அடிக்கிறீங்களே ஏன்னு கேட்டோம்.

கலர்ஃபுல்லாக பெயின்ட் அடித்தால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து விபத்துக்கள் நேர்ந்துவிடும் என்ற காரணத்தால் எல்லாக் கோயில்களும் பெரும்பாலும் வெள்ளைநிறத்தில்தான் இருக்குமாம். அந்த பெயின்ட்டருக்கு கோபுரங்களில் இருக்கும் சிலைகளைப் பார்த்து மிகவும் ஆச்சரியம். அழகான சிற்பங்களை ரசித்தவாறே பெயின்ட் செய்துகொண்டிருக்கிறேன், சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை உங்க ஊருக்கு வந்து மற்ற கோயில்களையும் பார்க்கணும் என்றார்.

கோயிலின் உட்புறத் தோற்றம்..வெயில் காலங்களில் பிரகாரத்தை சுற்றிவரும் பாதையில் பச்சைநிறத்தில் கார்ப்பெட் விரித்திருக்கிறார்கள். சிலசமயங்களில் கூரையும் போடுவார்கள் போலும்..அந்த அலுமினியக் கம்பங்கள் அதற்குத்தான் என்று நினைக்கிறேன். இந்தக்கோயில் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிறதாம். மிகவும் அழகான கோயில். என்ன ஒன்றே ஒன்று, கோயிலுக்குப் போய்விட்டு வீடு வந்து சேரும்போது ஒரு பெரீஈஈஈய்ய ட்ரிப் போய்விட்டு வந்தது போல இருக்கும்..அந்த அளவுக்கு ட்ராஃபிக்! ;)

சரி, கோயிலுக்குப் போயாச்சு, சாமியும் கும்பிட்டாச்சு, இனி நம்ம வேலையைக் கவனிப்போமா? ஒரு முறை கோயிலுக்குப் போயிருந்தபோது, ஆஞ்சநேயர் சந்நிதிக்கருகில் குருவிகளின் குரல் பலமாக ஒலித்தது! அண்ணாந்து பார்த்தால்...

இங்கே எங்க வீட்டருகே கூடுகட்டியிருந்த அதே குருவிக்கூட்டம்..கோயில் கோபுரத்தையும் விட்டுவைக்காமல் கூடு கட்டி சந்தோஷமா இருந்தாங்க! :)
அத்திப்பழம்(figs) நான் இதுவரை ஒருமுறை கூட பார்த்ததில்லை. சமீபத்தில் மார்க்கெட் போயிருந்தபோது உலர்ந்த அத்திப்பழங்கள் வைத்திருந்தார்கள். சூப்பராக இருந்தது.

இந்தமுறை கோயிலுக்குச் சென்றபோதுதான் அங்கிருந்த அத்திமரத்தைப் பார்த்தேன். ஏதோ காய் என்று கடந்து செல்கையில் அணில் கடித்த காய் ஒன்று கண்ணில் பட்டதால் "அடடா,அத்திக்காய்!"னு மண்டைக்குள் பல்பு எரிஞ்சு படமெடுத்துட்டேன். :) அத்திப்பூதான் ஒன்றையும் காணவில்லை. அதெல்லாம் அவ்வளவு ஈஸியா பார்க்க முடியாது, சும்மாவா பழமொழி சொன்னாங்க, அத்தி பூத்தமாதிரி-ன்னு? என்று என்னவர் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டார், இல்லைன்னா இன்னும் மரத்தடியில்தான் நின்னுட்டு இருந்திருப்பேன்.ஹிஹி!

அடுத்த படத்தில் இன்னொரு இன்ட்ரஸ்டிங்கான ஆள்! அணிலா இல்லை வேறு ஏதும் பிராணியா என்று தெரியவில்லை, பூச்செடிகளின் அருகே வங்கு தோண்டி குடியிருக்கு..அப்பப்ப மேலே வந்து சாப்புட ஏதாச்சும் கிடைக்குதான்னு பாத்துட்டே இருந்தது. கையிலிருந்த தேங்கா மூடியிலிருந்து கொஞ்சம் தேங்காயப் பிச்சுக் குடுத்துப் பார்த்தோம்.(கேமரா என் கையில் இருந்ததால் என்னவர் குடுத்தார், எனக்கு பயமெல்லாம் இல்லைங்க! கர்ர்ர்ர்ர்ர்! நம்பிக்கை இல்லைன்னா பஸிஃபிக் கடலோரம் போய்ப் பார்த்துட்டு வாங்க. ;) )
கையிலயே குடுப்போம்னு பார்த்தா அந்த ஆள் உஷாரா வங்கில் இருந்து வெளியே வரவே இல்ல. ரெண்டு பல்லு தேங்காயை அவரின் மூக்குக்கு(!) எட்டும் தொலைவில் வைச்சோம், ஓடிவந்து கடகடன்னு சாப்ட்டார். நாங்க எதுவும் செய்யமாட்டோம்னு தைரியம் வந்துடுச்சு போல, அதுக்கப்புறம் கையிலிருந்தே வாங்கி சாப்பிட்டார். :) :))))))

நாங்க பார்த்தது எலியா இல்ல அணிலான்னு ஒரு நலம்விரும்பி விக்கிபீடியாவில் தேடி லிங்க் அனுப்பியிருந்தார், அதிலிருந்த ஜந்துவைப் பார்க்கவே பயம்ம்ம்ம்மா இருந்தது. நாங்க பார்த்தவர் ஆல்வின் சிப்மங்க்-ஐ கொஞ்சம் நினைவு படுத்தினார். ஆனா அணிலும் இல்ல,எலியும் இல்ல,சிப்மங்க்-ம் இல்லை..எதுவா இருந்தாலும் லட்சணமா,அழகா இருந்தது! :)

அணிலுக்குத் தேங்கா குடுத்தாச்சு, உங்களுக்கு எதுவும் குடுக்கலைன்னா நல்லாருக்குமா? இவ்வளவு நேரம் பொறுமையாப் படிச்சிருக்கீங்க, இதோ உங்களுக்காக..
கலர்ஃபுல் "khandvi"!

குஜாராத்தி டோக்ளா வகைகளில் ஒன்று இந்த khandvi. இதைப் பற்றிய முன்குறிப்பும், ரெசிப்பியும் அடுத்த பதிவில்.

48 comments:

  1. வெள்ளை பெயின்ட் காரணம் இது தானா?? என்னமா யோசிக்கிறாங்க இந்த நாட்டில்.
    கடவுளே! அது அணில் அல்ல எலி. கொஞ்சம் அசந்திருந்தா முழுத் தேங்காயையும் அபேஸ் பண்ணியிருக்கும்.
    சூப்பர் அத்திக்காய். இது வரைகண்டதில்லை அத்திக்காய், பூ.

    ReplyDelete
  2. வானதி, அந்தப் பிராணி அணில் மாதிரி கலர்லயே இருந்தது, எலி சின்னதா இருக்கும்தானே? இது கொஞ்சம் நீஈஈஈஈளமா இருந்ததோன்னு எனக்கு டவுட்டு!என்னவர் அப்பவே சொன்னார்,அது எலின்னு. அத்தோட ஓடியாந்திட்டோம். ஆனா பாருங்க, இதை டைப்பறப்ப மேல்மாடி காலியா இருந்ததால் நினைவு வரலை! ஹிஹ்ஹி!!

    அத்திப்பூ குட்டியாய் மஞ்சக்கலரில் இருந்ததுன்னு நினைக்கிறேன்..அடுத்தமுறை கோவிலுக்குப் போகையில் போட்டோ புடிச்சுட்டு வரேன்.நன்றி வானதி!
    ~~~
    BTW, வானதி சொன்னதை 2 விதமாப் படிக்கலாம்,
    1./என்னமா யோசிக்கிறாங்க இந்த நாட்டில்.கடவுளே!/
    2./கடவுளே! அது அணில் அல்ல எலி/
    ~~~
    நான் ஆப்ஷன்-1லதான் படிச்சேன்,இனிமேட்டு இங்க கருத்துப் போடப்போகும் கருத்து கந்த(சாமினிகள்/சாமிகள்) எல்லாரும் அப்பூடியே படிங்கோ என்று கேட்டுக்கொல்;)கிறேன்.அட்வான்ஸ் டாங்க்ஸு!

    :)))))))))))

    ReplyDelete
  3. கோவிலில் பொங்கல் சுண்டல் ஏதும் கொடுக்கலைய மகிமா.

    சுண்டல் எந்த கோவிலில் தருவார்கள் விபரம் தரவும்
    நேரம் குறிப்பிடவும்

    பிறகு வெள்ளை நிறம் பற்றி அறிந்து கொண்டேன்

    நன்றி

    அது எலி அல்ல....

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்கின்றது...

    இந்த பக்கமும் நிறைய கோயில்கள் இருக்கின்றது மகி....இந்த பக்கமும் வாங்க..

    அது அணிலா அல்லது எலியா...ஆனாலும் ரொம்ப தைரியம் தான் போங்க...

    ReplyDelete
  5. கோவிலுக்கு போகும் பொழுதும்ம்கேமராவா?ம்ம்..நடத்துங்க.

    கண்ட்வி ரெஸிப்பி காணுமே?

    ReplyDelete
  6. Nice post mahi,thanks for sharing,Kandvi looks too good! Cant wait for the recipe...

    ReplyDelete
  7. வடாமெல்லாம் இட்டாச்சு.கொ்ஞ்சம் கோவிலுக்கும் போய்சாமிக்கெல்லாம் ஹலோ சொல்லிவரப்போனாயானால் அங்கும் எலி, குருவி என எல்லாம் உன்னை எட்டிப் பார்க்கிரது. ஏதாவது புது ரெஸிப்பி செய்து கொண்டு வந்திருப்பாய் என்று. கோவிலிலெல்லாம்
    கீழ்த் தளத்தில் கேண்டீன் இருக்குமே. போகவில்லையா. எப்பவும் கேமராவும் கையுமாக இருப்பாய்
    போல இருக்கு. அதான் சரியாக வசனம் சொல்லி கூட்டி வந்து விட்டார் உன்னவர்.

    ReplyDelete
  8. ஐயா..... malibu temple , malibu temple ! போடோஸ் பார்க்கும் போது எனக்கு 'மலரும் நினைவுகள்'....!

    ReplyDelete
  9. //அத்தி பூத்தமாதிரி-ன்னு? என்று என்னவர் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துட்டார், இல்லைன்னா இன்னும் மரத்தடியில்தான் நின்னுட்டு இருந்திருப்பேன்.ஹிஹி!// நல்ல வேளை கூட்டிகிட்டு வந்திட்டாரு இல்லேன்னா நாங்கெல்லாம் எப்பூடி தவிச்சு போய் இருப்போம். இத கண்டிப்பா மீதி கேட்ட கிருமிஸ் ஒத்துப்பாங்க :)) :))

    ReplyDelete
  10. எனக்கு பயமெல்லாம் இல்லைங்க! கர்ர்ர்ர்ர்ர்! நம்பிக்கை இல்லைன்னா பஸிஃபிக் கடலோரம் போய்ப் பார்த்துட்டு வாங்க. ;) ) // பயமா மகிக்கா ச்சே ச்சே பசிபிக் கடலோரம் நீங்க போயிட்டு வந்தப்புறம் அங்கே இருந்த மீதி ஜீவராசிதான் மகி அக்காவ பார்த்து குளிர் ஜுரத்துல அலையுதுங்க ளாம்: ))

    ReplyDelete
  11. //எல்லாரும் அப்பூடியே படிங்கோ என்று கேட்டுக்கொல்;)கிறேன்.அட்வான்ஸ் டாங்க்ஸு!
    :)))))))))))// டீச்சர் ஓடி வாங்க தமிழ் தமிழ்...ஸ்பெல்லிங் :))

    ReplyDelete
  12. //எல்லாரும் அப்பூடியே படிங்கோ என்று கேட்டுக்கொல்;)கிறேன்.அட்வான்ஸ் டாங்க்ஸு!
    :)))))))))))// டீச்சர் ஓடி வாங்க தமிழ் தமிழ்...ஸ்பெல்லிங் :))

    ReplyDelete
  13. எலிக்கும் அணிலுக்கும் வித்தியாசம் தெரியலையா ..!! அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  14. சுவராஸ்யமான பதிவு!! அது அணிலா இலலி எலியா?? என்னவோ போங்க...காந்த்வி எனக்கு ரொம்ப பிடிச்ச ஐயிட்டம்..செய்து ரொம்ப நாளாச்சு..

    ReplyDelete
  15. //கலர்ஃபுல்லாக பெயின்ட் அடித்தால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து விபத்துக்கள் நேர்ந்துவிடும் என்ற காரணத்தால் எல்லாக் கோயில்களும் பெரும்பாலும் வெள்ளைநிறத்தில்தான் இருக்குமாம்//

    ஓ... இதுதான் காரணமோ? நானும் யோசிப்பதுண்டு ஏன் வெள்ளையாகவே இருக்கென. ஆனாலும் வெள்ளையும் ஒரு அழகுதான் கோயிலுக்கு.

    ReplyDelete
  16. எலியாஆஆஆஆஆஆ?எங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஙேஏஏஏஏஏஏஏஏ?:)

    ReplyDelete
  17. நீங்க கொடுத்து வச்சவங்க.. அத்திமரத்தைப் பார்த்திட்டீங்க.. உங்க்ட புணியத்தில நாங்களும் பர்த்திட்டோம், முன்பு இமாவும் காட்டியிருக்கிறா.

    நான் சூப்பர் மார்க்கட்டில பிக்ஸ்ஸ்ஸ்ஸ்(figs):) என ஒரு பயம் வாங்கிச் சாப்பிட்டேன்... சூப்பரோ சூப்பர்... ஆனா பிறகு இமா சொல்லித்தான் தெரியும் அதுதான் அத்த்த்த்த்த்திப்பயம் எண்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))...

    தமிழ்ல பெயர் போட்டு வித்தால் என்னவாம் இங்கத்தைய சூப்பர் மார்கட்டில கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  18. //நாங்க எதுவும் செய்யமாட்டோம்னு தைரியம் வந்துடுச்சு போல, அதுக்கப்புறம் கையிலிருந்தே வாங்கி சாப்பிட்டார். :) :)))))) //

    இனம் இனத்தோடுதான் சேருமாமே...:))) ஹையோ நான் ஒண்டுமே சொல்லல்ல... அதிரா ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:))))

    ReplyDelete
  19. //En Samaiyal said...

    //எல்லாரும் அப்பூடியே படிங்கோ என்று கேட்டுக்கொல்;)கிறேன்.அட்வான்ஸ் டாங்க்ஸு!
    :)))))))))))// டீச்சர் ஓடி வாங்க தமிழ் தமிழ்...ஸ்பெல்லிங் :))
    //

    meee 2 ooooooooooooooooo:)))..

    ReplyDelete
  20. கிரிஷா:),தெரியாமச் செஞ்சாத்தப்பூ,தெரிந்தே செஞ்சா தவறூஊஊஊ! நான் தவறுசெய்தா பக்கத்தாலையே ஒரு :) போட்டுடுவேன்,அதைப் பார்த்துப் புரிஞ்சுக்கோணும்,ஓக்கை?!

    கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி அதே பல்லவியப் பாடிட்டு இருக்கீங்களே,வேலைய முடிச்சிட்டுவந்து டெலீட் பண்ணலாமுன்னு(நீங்களே பண்ணிட்டீங்க போல? குட் ஜாப்! ;)) இருந்தா இப்ப பூஸும் உங்களோடு பாட ஆரம்பிச்சாச்சு! ரீச்சரைத்தான் காணம்!

    ReplyDelete
  21. //கிரிஷா:),தெரியாமச் செஞ்சாத்தப்பூ,தெரிந்தே செஞ்சா தவறூஊஊஊ!//

    haiyoo...ஹையோஓஓ.. தெரியாமல் செய்தால்தான் தவறு:)))).

    கிரிசாவை அதிரா தேடுறாவாம் புள்ளட் இல்லாத துவக்கோட எனச் சொல்லிடுங்க மகி, நான் வேலை முடிச்சிட்டு வாறேன்.

    ReplyDelete
  22. /haiyoo...ஹையோஓஓ.. தெரியாமல் செய்தால்தான் தவறு:))))./அவ்வ்வ்வ்வ்! தவறு நடந்துபோச்சு, காக்கா போங்கோ பூஸ்! ;)

    /புள்ளட் இல்லாத துவக்கோட எனச் சொல்லிடுங்க மகி,/ சரீ,சொல்லிடறன்,நீங்க அருகம்புள் ச்சீ,ச்சீ,புல்ல புள்லட்ல ழோட் பண்ணிட்டு கெதியா வாங்கோ அதிரா!

    ReplyDelete
  23. //கிரிஷா:),தெரியாமச் செஞ்சாத்தப்பூ,தெரிந்தே செஞ்சா தவறூஊஊஊ! நான் தவறுசெய்தா பக்கத்தாலையே ஒரு :) போட்டுடுவேன்,அதைப் பார்த்துப் புரிஞ்சுக்கோணும்,ஓக்கை?!// நான் யாருன்னு மறந்து போச்சா உங்களுக்கு வா த ஆக்கும் விம் பார் இல்லேன்னா பிரியாஅதூஊ ::):)

    ReplyDelete
  24. //கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி அதே பல்லவியப் பாடிட்டு இருக்கீங்களே,வேலைய முடிச்சிட்டுவந்து டெலீட் பண்ணலாமுன்னு(நீங்களே பண்ணிட்டீங்க போல? குட் ஜாப்! ;)) // டாங்க்ஸ்ஊ ஆமா வேலையில என்ன பண்ணேன்னு தெரியல வேலையும் ஒழுங்க பார்க்கல கமெண்டும் ஒழுங்கா போடல.. ச்சே எத்தன பேருக்கு பயப்படுறது?? இப்போ பூஸ் வேற துப்பாக்கிய அறுகம் புல் வெச்சு லோட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க ??

    ReplyDelete
  25. /விம் பார் இல்லேன்னா பிரியாஅதூஊ ::):)/ஆங்...மறந்துட்டேன் கிரிஜா. இனிமேல் கிரிஷா ஸ்பெஷல் டிக்ஷனரி ஒண்ணு ஒவ்வொரு போஸ்ட்லயும் சேர்த்துடறேன். ;)

    /இப்போ பூஸ் வேற துப்பாக்கிய அறுகம் புல் வெச்சு லோட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க ??/இல்லைல்ல..பூஸ் இண்டைக்கும் ஸ்விம்மிங்,ஷொப்பிங் மோல் எல்லாம் சுற்றிட்டு ரயேட்டா வந்து ரீ குடிக்கினம்.வர லேட்டாகும், நீங்க தகிரியமா இருங்கோ என்ன? ;)

    ReplyDelete
  26. //இல்லைல்ல..பூஸ் இண்டைக்கும் ஸ்விம்மிங்,ஷொப்பிங் மோல் எல்லாம் சுற்றிட்டு ரயேட்டா வந்து ரீ குடிக்கினம்.வர லேட்டாகும், நீங்க தகிரியமா இருங்கோ என்ன? ;)// riot பண்ண பசங்கள இப்போதான் அவிங்க வீட்டு பக்கம் அனுப்பி இருக்கேன் அவிங்க என்னமோ புழு கொடியள் மாவுல செஞ்சு தனியா சாப்பிட போறாங்களாம் அதான்!! (கர்ர் கர்ர்)

    ReplyDelete
  27. //இனிமேல் கிரிஷா ஸ்பெஷல் டிக்ஷனரி ஒண்ணு ஒவ்வொரு போஸ்ட்லயும் சேர்த்துடறேன். ;) // இதனால சகலமானவருக்கும் தெரிவிப்பது என்ன வென்றால் எல்லாரும் ஒரு ஸ்பெஷல் திரிஷா dictionary உங்க பதிவு கூட போட்ட்ருங்க.. முக்கியமா இமா டீச்சர் :)

    ReplyDelete
  28. வன்முறை கூடாது கிரிஷா..நம்மள்லாம் காந்தித்தாத்தா வழி வந்தவங்க. அஹிம்ஸையா பேசிப் பேசியே காரியத்தை சாதிக்கணும். :)

    நேத்து லண்டன் நியூஸ் பாத்தேன்,கவலையா இருந்தது.:-|

    ReplyDelete
  29. //நேத்து லண்டன் நியூஸ் பாத்தேன்,கவலையா இருந்தது.:-|// ஆமா இளைய தலைமுறை ஒரு கட்டு பாடு இல்லாம போய் கிட்டு இருக்கு. எங்கே போய் முடியும்ம்னு தெரியல. எல்லாம் சின்ன பசங்க..

    ச்சே ச்சே எனக்கெல்லாம் வாய் தான் சாஸ்தி யாரையும் துன்புறுத்த எல்லாம் மாட்டேன் வெறும் பதிவு போட்டு கொல்லுரதொட சரி..

    ReplyDelete
  30. /சுண்டல் எந்த கோவிலில் தருவார்கள் விபரம் தரவும்,நேரம் குறிப்பிடவும் / தம்பி சிவா,இதே கோயிலில்ல (கவனிக்க, கோவில் இல்லை, கோ+இல்=கோயில்) சனிக்கிழமைல காலைல பூஜை,மதியம் பிரசாதம் உண்டு. மத்தபடி ஒவ்வொரு திங்கள்கிழமையும் எங்க வூட்டாண்ட இருக்க கோயில்ல பிரசாதம் உண்டாம். விவரம் போதுமா?! ;)

    /அது எலி அல்ல.... /ஆமாம் சிவா,நானும் அதையேதான் சொல்லறேன்.ஆதரவுக்கு நன்றி! :)
    ~~~
    /இந்த பக்கமும் நிறைய கோயில்கள் இருக்கின்றது மகி....இந்த பக்கமும் வாங்க../கீதா,ஆன்மீக சுற்றுலா வரச் சொல்றீங்களா? வரோம் கீதா.:)

    /அது அணிலா அல்லது எலியா.../இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு இன்னமும் விடை தெரியல. இங்கே மிருகங்கள் எல்லாம் மனிதரைப் பார்த்து பயப்படாமல் ப்ரெண்ட்லியா இருக்கு,அம்புட்டுதான்! நன்றி கீதா!

    ~~
    /கோவிலுக்கு போகும் பொழுதும்ம்கேமராவா?/ஸாதிகா அக்கா, இந்தக் கோயிலுக்குப் போவது ஒரு ட்ரிப் போல,அதனால கேமராவும் எடுத்துப்போவேன். :)
    அடுத்த பதிவு காண்ட்வி ரெசிப்பிதான்! தேங்க்ஸ் ஸாதிகாக்கா!
    ~~
    ராஜி,தேங்க்ஸ்ப்பா! சீக்கிரமா அடுத்த போஸ்ட் போட்டுடறேன்.
    ~~
    காமாட்சிம்மா,கேன்டீன் இருந்தது. ஆனால் நாங்க போகும் நேரத்தில் திறந்திருப்பதில்லை. :)
    அவருக்கு என்னிடம் என்ன சொன்னா என்ன நடக்கும் என்பது தலைகீழ்ப் பாடம்! ;) நன்றிம்மா!
    ~~
    வாங்க ஆச்சி! மலரும் நினைவுகள் வந்தாத்தான் இந்தப்பக்கம் கமென்ட் போடுவீக போலருக்கே? :)
    என்னாச்சு,இன்னும் புதுவீட்டுல செட்டில் ஆகலையா?
    நன்றி சித்ரா!

    ReplyDelete
  31. /ச்சே ச்சே எனக்கெல்லாம் வாய் தான் சாஸ்தி யாரையும் துன்புறுத்த எல்லாம் மாட்டேன் வெறும் பதிவு போட்டு கொல்லுரதொட சரி.. /அது எனக்குத் தெரியுமே..நாமெல்லாம் வெறுமனே குரைக்கிற கூட்டம்,கடிக்க மாட்டோம்! ;)


    தி(கி)ரிஷா,உங்க பதிவுக்கெல்லாம் உடனே உடனே பதில் போட்டு கவனிக்கிறேன்,அதை நீங்க கவனிச்சீங்களா? வீட்டுக்கு வந்தாச்சா,இல்ல இன்னும் ஓஃபீஸ்லதான் இருக்கீங்களா?! ;)

    ReplyDelete
  32. இதென்ன இது ஒரு கொமெண்ட் போட்டா ரெண்டா வெளிவருது மிகிட சே..சே.. எல்லாமே தடுமாறுது மகிட பூவில?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்... அப்பூடி ஏதும் உள்ளால செய்து வச்சிருக்கிறாவோ?:)), என்னுடையதில் ஒரே மாதிரி ரெண்டூஊஊஊஊ பதிவாகிட்டுது மேல, அழகானதை விட்டுப்போட்டு அழகில்லாததை:) அலி:)ச்சிடுங்க...

    ReplyDelete
  33. //வீட்டுக்கு வந்தாச்சா,இல்ல இன்னும் ஓஃபீஸ்லதான் இருக்கீங்களா?! ;)//

    இண்டைக்கு அவ எப்பூடி வீட்டுக்கு வருவா?:)), நாமதான் புள்ளட்டூஊஊ(இது வேற லட்டூஊஉ:)) ஒரு கையில, துவக்கு ஒரு கையில வச்சுக்கொண்டு.. வெயிட்டிங்யா.... கிரிசா வீட்டு கேட்டில(இது வேற கேட்:)).

    ReplyDelete
  34. /இதென்ன இது ஒரு கொமெண்ட் போட்டா ரெண்டா வெளிவருது மிகிட சே..சே.. எல்லாமே தடுமாறுது மகிட பூவில?:))/இன்னிக்கும் பெனடோல் போட்ட எபெக்ட்டுன்னு நினைக்கிறேன் அதிரா! ;) அல்லாரும் வேணும்னே பலமுறை ஒரே கொமெண்டைத் தட்டிப்போட்டு என்ர பூவை குறை சொல்கினம்.கர்ர்ர்ர்ர்ர்ர்!

    ஆனா நான் ரொம்ப நல்ல பொண்ணூ,பிறந்த 6 நாளிலிருந்தே! ;) ரிபீட் ஆன கொமெண்ட்டை வேரோடு பிடுங்கிப் போட்டிருவேன்.:)

    /இண்டைக்கு அவ எப்பூடி வீட்டுக்கு வருவா?:)),/பின்வாசல் வழியாவோ, சிம்னியிலே தாவிக்குதிச்சோ வீட்டுக்குள்ளே வந்திட்டதாக் கேள்வி அதிரா..நான் பேக்யார்டை செக் பண்ணறேன்,நீங்க உந்த புகைக்கூண்டுக்குள்ளால ஒரு எட்டுப் பாத்துட்டு வாங்கோ! ;) ;)

    ReplyDelete
  35. //உடனே உடனே பதில் போட்டு கவனிக்கிறேன்,அதை நீங்க கவனிச்சீங்களா? வீட்டுக்கு வந்தாச்சா,இல்ல இன்னும் ஓஃபீஸ்லதான் இருக்கீங்களா?! ;)// நானு வெட்டி முறிக்கறது எல்லாம் மோர்னிங் 8 டு ஆப்டர்நூன் 3 ஒன்லி...அப்புறம் என் பையன வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இங்கே வெட்டி முறிக்கொனும்:) சோ நான் வேலை லஞ்ச் டைம் ல சாப்பிட்ட பாதி கமெண்ட் போடுற பாதி ன்னு நான் படுற அவஸ்தை அந்த குருவாயுரப்ப ஏழுமலையான அல்லா ஜீசசுக்கு த்தான் தெரியும்

    ReplyDelete
  36. //நாமதான் புள்ளட்டூஊஊ(இது வேற லட்டூஊஉ:)) ஒரு கையில, துவக்கு ஒரு கையில வச்சுக்கொண்டு.. வெயிட்டிங்யா.... கிரிசா வீட்டு கேட்டில(இது வேற கேட்:)).// அஸ்க்கு புஸ்க்கு நான் தெரு முனையிலேயே பார்த்திட்டேனே பூஸ் முன் வாசல்லயும் கு.சா பாக் யார்டிலையும் நின்னுக்கிட்டு இருந்தத.. ஒடனே அபௌட் டர்ன் எடுத்து என்னுயிர் தோழி வீட்டுக்கு போய் இப்போ binoculor வெச்சு பார்த்துகிட்டு இருக்கேன்...ஹலோ யாராச்சும் சொல்லுங்களேன் கொல வெறியோட இருந்த ரெண்டு பெரும் போயிட்டாங்களான்னு :))


    //இது வேற லட்டூஊஉ:)) // திருப்பதி லட்டோ ??

    // வேற கேட்// ஐ கவித கவித லட்டு கேட்டு ...

    ReplyDelete
  37. ///ஆனா நான் ரொம்ப நல்ல பொண்ணூ,பிறந்த 6 நாளிலிருந்தே! ;)// நான் எல்லாம் பொறக்க முந்தியே நல்ல பொண்ணு ஊஉ


    //அல்லாரும் வேணும்னே பலமுறை ஒரே கொமெண்டைத் தட்டிப்போட்டு என்ர பூவை குறை சொல்கினம்.கர்ர்ர்ர்ர்ர்ர்// ஆமா உங்க ப்லோகுல கமெண்ட் போடும் போதே மாரியாத்தா மாரியாத்தான்னு கை நடுங்குது ...அதுதான் ரெண்டு ரெண்டா எனக்கு நாலு நாலா கமெண்ட் வருது ஹீ ஹீ

    ReplyDelete
  38. வெயர் இஸ் இமா டீச்சர் ?? சொல்லாம கொள்ளாம எங்கே போய்ட்டாங்க ?? பூசொட துப்பாக்கி இல்லே இல்லே துவக்கு ஒண்டும் செய்யாது அதுல பூந்தி லட்டும் அருகம் புல்லும் தான் இருக்கு ..வெளியே வாங்க இமா

    ReplyDelete
  39. Mee 40

    //,உங்க பதிவுக்கெல்லாம் உடனே உடனே பதில் போட்டு கவனிக்கிறேன்,அதை நீங்க கவனிச்சீங்களா// ஆ ஆ நல்லா கவனிச்சேன் ஏதோ உங்களுக்காச்சும் கொஞ்சம் இளகின மனசா இருக்கே (ஐயோ கடவுளே பூஸ் இந்த இளகின மனசு கம்மெண்ட பார்க்கணுமே.. போன வாரம் அங்கே lighter ஓட போனேன் இந்த வாரம் இங்கே lighter ...உஸ் நாரதர் வேல பார்க்கலேன்னா சாப்பாடு எறங்க மாட்டேங்குது ::)) மகி யோட இளகின மனசுக்காக ஜெய் அண்ணா எனக்கு கொடுத்த கொசு ரத்தம் அல்வா பாதி எடுத்து வெச்சு அனுப்புறேன் ஏதோ என்னால முடிஞ்சது

    ReplyDelete
  40. / மகி யோட இளகின மனசுக்காக ஜெய் அண்ணா எனக்கு கொடுத்த கொசு ரத்தம் அல்வா பாதி எடுத்து வெச்சு அனுப்புறேன் ஏதோ என்னால முடிஞ்சது / அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! கிரிசா அம்முணி,உங்கட நல்ல மனசு ஆருக்கு வரும்? இருந்தாலும் நான் சுத்த சைவமுங்கோ,---- அல்வாவெல்லாம் உங்களுக்காக ஸ்பெஷலா ஜெய் அண்ணா குடுத்திருக்கறாரு,நீங்களே வச்சு சாப்பிடுங்கோ. என்னைய உட்டுருங்கோ! :)

    /பூசொட துப்பாக்கி இல்லே இல்லே துவக்கு ஒண்டும் செய்யாது அதுல பூந்தி லட்டும் அருகம் புல்லும் தான் இருக்கு ./:)))))))) எனக்கு புல்லு வாணாம்,பூந்தி லட்டு ஓக்கே! ;)

    ReplyDelete
  41. அதாரது “கேட்” பற்றிக் கதைக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).... கேட் எண்டால் cat ஐத் தமிழில அப்பூடித்தான் எழுதோணுமாம்.. மறைபொருள் எல்லாம் தெரிஞ்சவங்க சொல்லியிருக்கினம்ம்ம்ம்ம்ம்ம்:))).

    ஊசிக்குறிப்பு:

    இமா ஸாதிகா அக்காவின் புளொக்கில ரெண்டு கையையும் தூக்கிட்டே நிற்கிறாவாம்.... அப்போ எப்பூடிப் பின்னூட்டம் போடுறது.... நீங்களே சொல்லுங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் கையைக் கீழ விடட்டாம் என “கேட்” சொல்லிச்சு எண்டாவது சொல்லுங்கோ...

    மீ இப்பவும் இமாட கட்டிலுக்குக் கீழதான்... நைட்ல கிரிஜாட முத்தத்தில(முற்றத்தில:)) நிற்கப் பய்ம்மாக்கிடக்கு அதேன்ன்ன்ன்ன்....

    ReplyDelete
  42. ஹாய் ஜாலி பூஸ் இன்னும் என் நாரதர் வேலைய கண்டு பிடிக்கல ..உஷ் யாரும் சொல்லிடாதீங்க அடிச்சு இல்லே கடிச்சு கேட்டா கூட சொல்லிடாதீங்க :))

    ReplyDelete
  43. கோவில் மேட்டர் ஓக்கே. நம்ம ஊரு
    போல பிரசாதஙகளும் உண்டா.
    காண்ட்வி(டோக்ளா) நல்லா இருக்கு.
    எங்க வீட்டு வாண்டு களுக்கு அடிக்கடி செய்து கொடுப்பேன்.

    ReplyDelete
  44. /எலிக்கும் அணிலுக்கும் வித்தியாசம் தெரியலையா ..!! அவ்வ்வ்வ்வ்/ஆமாங்ணா! உங்க சந்தேக லிஸ்ட்ல இதையும் சேர்த்து கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்,புண்ணியமாப்போகும்! :)
    நன்றி ஜெய் அண்ணா!
    ~~
    மேனகா,/அது அணிலா இலலி எலியா?? என்னவோ போங்க.../ சலிச்சுப்போய் விட்டுட்டீங்களா? ;)
    கான்ட்வி உங்க ப்ளாக்ல பாத்த நினைவு இருக்கு,அவசரமாத் தேடும்போதும் உங்க ப்ளாக்ல மறக்காமப் பார்த்தேன், கிடைக்கலை அந்நேரம்! தேங்க்ஸ் மேனகா!
    ~~
    /தமிழ்ல பெயர் போட்டு வித்தால் என்னவாம் இங்கத்தைய சூப்பர் மார்கட்டில கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))./ஆமாம் அதிரா! நானும் பேர் தெரியாமத்தான் வாங்கிவந்தேன். அப்புறம் ஒருவரிடம் கேட்டு,அதான் அத்திப்பழம்னு தெரிந்தது!
    /இனம் இனத்தோடுதான் சேருமாமே...:)))/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அப்ப என்னைய எலின்றீங்க? டாம் அன்ட் ஜெரி கதை ஞாபகம் வருதே,நீங்கதான் டாமா?! ;)
    நன்றி அதிரா!

    மோஸ்ட்லி பூஸ்-திரிஷா கூட்டணியின் சரமாரியான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்,இன்னும் எதாச்சும் சொல்லோணும்னா,சிரமம் பாக்காம இன்னொருவாட்டி கேளுங்க,சொல்லிடறேன்! ;)

    தேங்க்ஸ் கிரிஜா & அதிரா!
    ~~
    /நம்ம ஊரு போல பிரசாதஙகளும் உண்டா./ இங்கே பக்தர்கள் பிரசாதம் செய்து கோயிலுக்கு கொண்டுவருவதும் உண்டு,சில கோயில்ல கேன்டீன்ல குறைந்த விலையில் கலந்தசாத விற்பனையும் உண்டு லஷ்மிம்மா! காண்ட்வி எனக்கு கொஞ்சம் புதுசுதான்..இதுவரை 2-3 முறைதான் சாப்பிட்டிருக்கேன். நன்றிம்மா!

    ReplyDelete
  45. //டவுட்டு கேட்ட ஜெய் அண்ணாவுக்காக சுடச்சுட இப்ப பத்து நிமிஷம் முந்தி செய்த காண்ட்வி & அதுக்கு என்னவரின் ரெஸ்பான்ஸ்!! :)) //

    பாவம் நல்லா மிரட்டிதான் வச்சிருக்கீங்கப்போல ஹா..ஹா.. தட்டுல ஐட்டம் அப்படியேதான் இருக்கு சாப்பிட்ட மாதிரியே தெரியலையே அவ்வ்வ்வ் :-))

    ReplyDelete
  46. hey, it is not a fig tree, coz v hv lots of fig trees at bangalore, the leaves look different.

    jayashree
    bangalore

    ReplyDelete
  47. Hi jayashree, I have not seen a fig tree before! The fruits were like the ones which I bought with the name figs! :) tkz for your comment n clarification! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails