Wednesday, December 5, 2012

நான் ரசித்தவை, நீங்களும் ரசிக்க!

சிலநாட்களுக்கொருமுறை  ப்ளாகில் என்ன எழுதுவது என்று மூளையில் பல்பூ:) எரியாது..அப்படியாப்பட்ட நாட்களில் அமைதியாக இருந்துவிடுவேன், திடீரென்று ஒரு ஐடியா உதயமாகும். அப்படியான ஒரு நாள்தான் இன்று! :) [நீங்க சகுனமெல்லாம் பார்ப்பீங்க? அப்படின்னா இன்னிக்கு நரிமுகத்திலதான் முளி;)ச்சிருக்கீங்க, தகிரியமா படிக்கோணும், வெசனப்படக்குடாது! :)))))]

பழைய புகைப்படக் கோப்புகளில் இலக்கில்லாமல் உலவுகையில் என் விழித் தூண்டிலில் மாட்டிய புகைப்பட மீன்கள்:) இன்று  உங்கள் பார்வைக்கும்!

படம்: 1
எவ்வளவு அழகு இந்த வானம் என்று பலநேரங்களில் தோன்றும், அந்த அழகை அப்படியே புகைப்படத்தில் பதுக்கி வைத்துக்கொள்ள நினைக்கையில் கையில் காமரா இருக்காது. அதிர்ஷ்டவசமாகக் கையில் காமராவுடன் ஒரு பகல் நேரத்தில் அண்ணாந்து பார்த்தபோது விரிந்து கிடக்கும் நீலவானம்!

படம்: 2
  இலையுதிர் கால வண்ணங்களை ரசிக்கும் நோக்கில் கிளம்பிய ஒரு நாளில் வெள்ளையும் ஒரு வண்ணம்தான், எங்களைப் பார்க்கமாட்டாயா என்று தலையாட்டிய ஒரு ரோஜாக் குடும்பம்!  அடுக்கடுக்கடுக்கடுக்காய் புதைந்துகிடக்கும் இயற்கை, மொட்டவிழும் ரோஜாவில்! :)

படம்: 3
வழமையான மிரட்டலை விடுத்து, அப்பாவிக் கண்கள், அழகு மூக்கு  என சாந்தமாய் இருக்கும் வரிப்புலி..பலநாட்களாய் என் கருத்தைக் கவர்ந்த புலிக்குட்டியை ஒரு நாள் வெற்றிகரமாகப் படமெடுத்தே  விட்டேன்!
பி.கு. அடிக்கவராதீங்க, இது கீழ்வீட்டுக் குப்பைத் தொட்டி! ஹிஹி! ;):)

படம்: 4
வீட்டுத்தொட்டியில் மலர்ந்த மலர்கள்..தண்ணீரில் போட்டு அலங்காரமாய் வைக்கலாம் என்று பறித்த ஒரு நாளில் க்ளிக்கியது! :)

படம்: 5
 
 டேக் எ ப்ரேக்! ஹேவ் திஸ் ஸ்னாக்!  :)
எங்கூர் ஸ்வீட் ஸ்டாலில் வாங்கிவந்த கலகலா/மைதா பிஸ்கட்..
 ஆக்ச்சுவலி, இதுக்கு சரியான பெயரென்ன என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. காலகாலமாகக் கடைக்குப் போனால்  "அது"-ஒரு பேக்கட் குடுங்க!-- என்றே கேட்டு வாங்கியிருக்கிறோம்/வாங்குகிறோம். :) ;) :0)

 படம்: 6
 முன்னிரவிலேயே  உதித்துப் பளீரென்று மிரட்டிய ஜூலை மாதப் பௌர்ணமி நிலா! சற்றே இருட்டிய பின்னர் படமெடுக்க வசதிப்படவில்லை, எடுத்த படங்களில் நிலவின் பிரம்மாண்டம் புலப்படவுமில்லை!

படம்: 7
 எறும்புகளின் தொல்லையால் சுவரிலிருந்து கூரைக்கு இடம்பெயர்ந்த ஹம்மிங் பர்ட் ஃபீடரும், பிஸியாக தேன்குடிக்கும் தேன்சிட்டும்! :) 
போனவாரத்தில் 2-3 தேன்சிட்டுக்கள் தொடர்ந்து வந்தவண்ணமிருந்தன, அவற்றில் ஒருவர்  மற்றவர்களைத் தேன்குடிக்கவிடாமல் துரத்தியவண்ணமே இருந்தார். எல்லாரும் ஒரே போல தெரிவதால், துரத்துவது யார், துரத்தப்படுவது யார் என்று கண்டுபிடிக்க முடிவதில்லை! ;) இப்பவும் துரத்தல் அவ்வப்பொழுது தொடர்கிறது.

படம்: 8
தீபங்கள் பேசும், இது கார்த்திகை மாசம்! 
முல்லையாத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய..
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலையக் கலைய! :)



படம்: 9
ஆரஞ்சு வானத்தில் மரங்களின் பின்னே கண்ணாமூச்சி விளையாடியபடி வீடு திரும்பும் சூரியக் குழந்தை! :)
~~~

 
நான் போட்ட ரம்பத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை  வெற்றிகரமாக, of course, பொறுமையாகப் படித்த அனைவருக்கும் ஒரு சிம்பிள் மீல்.. 
ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்! 
:))))

40 comments:

  1. இது ரம்பம்!! கர்ர்..

    மனதுக்கு இதமான இடுகை.

    ஒவ்வொரு படமும், பாடலும்... எல்லாமே ரசித்தேன்.
    டேஸ்டி மிக்க்ஷர்.

    Loved it. Thank you Mahi.

    ReplyDelete
  2. Annaithu padakalum super.. Rasikum padi iruku..mahi

    ReplyDelete
  3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) மீ த 2ஸ்ட்டூஊஊஊஊஊஉ:))

    ReplyDelete
  4. //திடீரென்று ஒரு ஐடியா உதயமாகும். அப்படியான ஒரு நாள்தான் இன்று! :)/// அப்போ இன்று எங்களுக்கு சகுனம் சரியில்லை அப்பூடித்தானே?:))

    ReplyDelete
  5. //அப்போ இன்று எங்களுக்கு சகுனம் சரியில்லை அப்பூடித்தானே?:))// ஹாஹ்ஹாஹ்ஹா! கெரீக்ட் அதிரா! :)))))))

    பட் வாட் டு டூ?இன்று இதுதான் உங்களுக்கு என்று எழுதப்பட்டிருக்கு, மாத்த முடியாது! ;)))

    சகுனம் சரியில்லாட்டாலும் வந்துட்டீங்கள்ல? என்ஜாய்! :) ;) :0)

    ReplyDelete
  6. உண்மைதான் எனக்கும் வானத்தை சில நேரம் பார்த்தால் கண்ணை எடுக்கவே மனம் வராது.. அதுவும் பூனைக்குட்டி இருப்பதுபோல, குழந்தைபோல இப்படியெல்லாம் தெரியும்.. போன கிழமையில் ஒருநாள்.. தொடர் மரங்கள் நிற்பதுபோல இருந்துது.. கையில கமெரா இல்லை ஃபோன் கமெரா வனம் எடுக்க கிளியர் பத்தாது அவ்வ்வ்வ்வ்:)))).

    ReplyDelete
  7. இமா,/மனதுக்கு இதமான இடுகை./ நன்றிங்கோ! ஒரே மாதிரி திங்க் பண்ணும் ஆட்கள் நிறையப் பேர் இங்க வருவாங்க என்ற நம்பிக்கையில் தைரியமா(!) பப்ளிஷ் பண்ணினேன், ஆதரவுக்கு:) நன்றி, நன்றி,ந்நன்றீ!:)
    ~~
    சிநேகிதி, உங்க ஆதரவுக்கும் மிக்க நன்றி!
    ~~

    ReplyDelete
  8. இயற்கை அழகே அழகுதான்.பூக்கள்,கார்த்திகை விளக்கு,வானம்,நிலா,சூரியன் மறைவு எல்லாமே அழகா இருக்கு, குப்பைத்தொட்டி உட்பட.

    "அதுல ஒன்னு குடுங்க,இதுல ஒன்னு எடுத்து வச்சிருங்க"__பெயர் தெரிந்ததையே நாங்க இப்படித்தான் வாங்குவது.

    "சிலநாட்களுக்கொருமுறை ப்ளாகில் என்ன எழுதுவது என்று மூளையில் பல்பூ:) எரியாது"___ எங்க வீட்டிலும் நீண்ட நாட்களாக இப்படித்தான் இருக்கு.மொத்தத்தில் கதம்பப்பதிவு சூப்பர்.நன்றி மகி.

    ReplyDelete
  9. ஆஹா.. தேன் கூட்டை:)) ஜன்னலில் ஏத்தியாச்சோ?.. கார்த்திகை தீபம் அயகு:))

    ReplyDelete
  10. /அதுவும் பூனைக்குட்டி இருப்பதுபோல, இப்படியெல்லாம் தெரியும்../நோ வொண்டர்! :)) நீங்க பூனைக்குட்டியைப் பார்த்தது ஆச்சரியமே இல்லே,இல்லே,இல்லே! :))) நானும் அவ்வப்பொழுது காமரா இல்லையே என புலம்புவேன், என்னவர் அதை ஆண்டவன் குடுத்த கண் காமாரால ரசியேன்- அப்படின்னு சொல்லுவார்! ;)

    கலிஃபோர்னியா வந்தபிறகுதான் நான் இப்படி வானம் பார்க்க(!) ஆரம்பித்தது அதிரா, அதுக்கு முன் வரை கவனமில்லாமல் இருந்தேன். :)

    ReplyDelete
  11. எனக்கு அந்த வத்தல் கொயம்பு மட்டும் வேணும்....

    ReplyDelete
  12. எனக்கு சின்ன வயதிலிருந்தே இந்த வானம் பார்க்கும் பைத்தியம் இருக்கு மகி... நல்ல கிளியரான கால நிலையில் அங்காங்கு முகில்கள் இருக்கும்போது பார்க்க சூப்பராக இருக்கும்.....

    ReplyDelete
  13. //"அதுல ஒன்னு குடுங்க,இதுல ஒன்னு எடுத்து வச்சிருங்க"__பெயர் தெரிந்ததையே நாங்க இப்படித்தான் வாங்குவது.// ஆஹா! :))) நீங்களும் நம்மள மாதிரியேதானா?! :)

    //எங்க வீட்டிலும் நீண்ட நாட்களாக இப்படித்தான் இருக்கு.// கவனிச்சேன், வின்டர் ஸ்டார்ம்னால ப்ளாகுக்கும் லீவ் விட்டிருக்கீங்கன்னு நினைச்சேன், சீக்கிரமா உங்களுக்கும் பல்பூ;) எரிஞ்சுரும் சித்ராக்கா! ;):)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  14. //. தேன் கூட்டை:)) ஜன்னலில் ஏத்தியாச்சோ?.//ஆமாம் அதிரா, எறும்புதானே குடிச்சுட்டுப் போகட்டும்னு விட்டாலும், சாரிசாரியா சுவரெல்லாம் எறும்பு ஊர்வதைப்பார்க்க அவ்வளவா நல்லால்ல, அதான் மேலே மாட்டிட்டோம். :)

    போனவருஷம் தீபமேற்ற பெரிய வாசல் இருந்துது, இந்த முறை சின்ன வாசல்! இருந்தாலும் விடாம ஏத்திட்டமில்ல! ;) :)

    /எனக்கு அந்த வத்தல் கொயம்பு மட்டும் வேணும்.... / அனுப்பிடறேன் அதிரா! பட் ஆர் யூ ஷூர்? வேற எதுவும் வேணாமா? ;)

    /வானம் பார்க்கும் பைத்தியம்/ :)))..ம்ம்! நம்மள்லாம் பைத்தியம்றீங்க அப்ப? ஆனா எல்லாரும் இப்படி பார்க்க மாட்டாங்க அதிரா! we belong to the same category! :)



    ReplyDelete
  15. கிண்டிக்கிளறி,தோண்டித்துருவி எடுத்து எங்க வீட்டிலும் பல்பு எரிய வச்சிட்டோமில்ல.ஐடியாவுக்கு நன்றி மகி!

    ReplyDelete
  16. ஆஹா ஒவ்வொரு படமும் கதை பேசுது மஹி.. அந்த கல கல வுக்கு பேரு எங்க ஊருல சங்கர் பாலின்னு சொல்லுவோம். மைதா இனிப்பு பிஸ்கெட் தான்.ரொம்ப ரொம்ப டேஸ்ட்டியா இருக்கும் அதோட பதிவுகூட ரெடி பண்ணி வச்சிருக்கேன் இனிமேலதான் போடனும்

    ReplyDelete
  17. Love ur blog posts mahi..simple and interesting

    ReplyDelete
  18. மலரும் நினைவுகள் அருமை.. அந்த ஸ்னாக் பேர் எங்கூர்ல சங்கராபோளி , சங்கர் போளி , மைதா கேக் , என்று சொல்லுவாங்க மகி.

    ReplyDelete
  19. அப்படியா சங்கதி... நானும் இனி போட்டோவா எடுக்க ஆரம்பிக்கப் போறேன்.. ஆனா... ஆனாஆ.... அதுக்கு ஏத்த மாதிரி நீங்க உங்க அழகான கைகளால குறிப்பு எழுதிதரணும்னு கேட்டுக்கொள்(ல்)வேன்... ஓக்கேயா? :-))

    வானம் படம் எல்லாத்தையும் மிஞ்சிடுச்சு... சூப்பர்...:)

    ReplyDelete
  20. //ஒரே மாதிரி திங்க் பண்ணும் ஆட்கள் நிறையப் பேர் இங்க வருவாங்க என்ற நம்பிக்கையில் தைரியமா(!) பப்ளிஷ் பண்ணினேன்,// உங்க நம்பிக்கை வீண்போகாது.

    நான் ஊரிலிருக்கும்போதே இந்த வானம் பார்க்கிற பழக்கம் இருக்கு. இதற்காகவே வயல்வெளிக்கு போவோம்.இயற்கையை ரசிக்க கற்றுக்கொடுத்ததே என் அக்காதான். இங்கு வேறு மலைப்பிரதேசமா
    கேட்கவே வேண்டாம்.

    ReplyDelete
  21. எல்லாப்படங்களுமே அழகாக இருக்கு. ஒன்றையும் குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை. அதைவிட நீங்க அதற்கு கொடுத்த வர்ணனை சூப்பர்
    மகி.

    ReplyDelete
  22. மகி எல்லா படங்களுமே அருமை... படங்களுடன் வரும் உங்கள் எழுத்து நடை அதை விட அருமை.....


    நாங்கள் அதை மைதா மாவு இனிப்பு பிஸ்கட் - ன்னு சொல்லுவோம்....

    ReplyDelete
  23. தீபங்கள் பேசும்... அருமையான பாடல் ஆயிற்றே! நினைவு படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  24. Mahi, as usual kalakkal, naan rasichadhu, 'peyar theriyadhu, kala kalamai adhu konjam kudunga', smiling while reading..

    ReplyDelete
  25. I liked the sky, moon and the sunset.

    கரெக்டா சொன்னீங்க Mahi. அத நான் "அண்ணே, அந்த குட்டி பிஸ்கட் குடுங்க" -னு கேட்பேன். யாரோ இதுக்கு பேரு "ஆட்டுக்கால் பிஸ்கட்"-னு சொன்ன நியாபகம். Having a tank full of memories about it :)

    By the way, rasam...mmmmnnnnhhhh.... A Class!

    ReplyDelete
  26. அழகான புகைப்படங்கள்.ரசித்தேன்...

    ReplyDelete
  27. அழகான படமும் காட்டி அருமையான விருந்து படைத்திட்ட மகீக்கு ஒரு ஓஒ

    ReplyDelete
  28. வானம் பார்க்கும் பைத்தியம்......

    ஒவ்வொரு நேரத்து வானமும் ஒவ்வொரு அழகு !

    அழகான பதிவுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. padangal miga alagu..white rose and humming bird superb..nandri.

    ReplyDelete
  31. antha biscuit peru BOMBAY LAKKADI Mahi

    ReplyDelete
  32. ரசனைக்கு ஓர் எடுத்துக்காட்டு....

    அத்தனையும் அழகு, அருமை. பார்க்கும்போது மனசில் பட்டாம்பூச்சி பறக்கிறது மகி....:)

    வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  33. எனக்கு சின்ன வயதிலிருந்தே இந்த வானம் பார்க்கும் பைத்தியம் இருக்கு மகி..//

    Garrrrrr miyaaa ...giri come soon i need your help

    ReplyDelete
  34. மகிம்மா ...பதிவு சூப்பர் ..நானும் எப்பவும் வானத்தை பார்த்து வியந்ததுண்டு ..
    அதனால் கண்மண் தெரியாம....... மற்றவை அப்புறமா சொல்றேன் :))

    அந்த ஸ்வீட் பம்பாய் லக்கடின்னு என் தங்கச்சி சொல்வா .
    அதுக்கு கஜ்சூர் என்றும் ஒரு பேர் இருக்கு


    இரண்டிலும் சோடா மாவு அதிகமாருக்கும்

    கலை கண்ணோடு அழகா படம் எடுத்திருக்கீங்க மகி அந்த மஞ்சள் வரிபுலி ரொம்ப கியூட் ..
    அமைதியா பயந்த பூனைக்குட்டி மாறியே இருக்கு

    ReplyDelete
  35. Mahi.. Ungal mail Id anupugireergala to shylajapraveen@amuthiskitchen.com of course if you wish.....

    ReplyDelete
  36. நான் வேகமாக ஸ்க்ரோல் செய்தது வீண் போகலை,கண்ணிற்கு விருந்து..

    ReplyDelete
  37. //எங்க வீட்டிலும் பல்பு எரிய வச்சிட்டோமில்ல.ஐடியாவுக்கு நன்றி மகி! // :) நன்றி சித்ராக்கா! :)
    ~~
    லஷ்மிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! மஹாராஷ்ட்ரா-ல சங்கர்பாலி-யா? இல்ல கல்லிட்டைக் குறிச்சில சங்கர்பாலி-யா? ;):) தகவலுக்கு நன்றிம்மா! டால்டா சேர்த்து செய்யறாங்க என்று நினைக்கிறேன், இதை வீட்டில் செய்து பார்க்க நினைப்பேன், ரெசிப்பி குடுங்க, செய்து பார்த்துரலாம்! :)
    ~~
    ரம்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க! வாழ்க்கையை ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணிக்காம இருக்கணும்னு நினைப்பேன், அதுவே ப்ளாகிலும் இம்பாக்ட் ஆகுது! ஹிஹி! ;)
    ~~
    //எங்கூர்ல சங்கராபோளி , சங்கர் போளி , மைதா கேக் , // அடேங்கப்பா, ஒரே ஐட்டத்துக்கு 3 பேரா? சூப்பர் போங்க. கோவையில இப்படி பேரெல்லாம் நான் கேள்விப்படல. பட், எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்னாக் இது. :)
    வருகைக்கும் கருத்துக்கும்நன்றிங்க ராதாராணி!
    ~~
    //நானும் இனி போட்டோவா எடுக்க ஆரம்பிக்கப் போறேன்..//ஆஹா!! God Bless Us Banu! ;) :))))
    //ஆனா... ஆனாஆ.... அதுக்கு ஏத்த மாதிரி நீங்க உங்க அழகான கைகளால குறிப்பு எழுதிதரணும்னு கேட்டுக்கொள்(ல்)வேன்... ஓக்கேயா? :-))// அட, என்னங்க நீங்க? இப்படி //அழகான கைகளால// சொன்னப்பறம் நான் மாட்டேன்னு சொல்லிருவேனா என்ன? தாராளமா எழுதித் தந்துட்டாப் போச்சு! :)))

    உங்க கமென்ட்டைப் படிச்சதும் ஒரு கொசுவர்த்தி. நான் வொர்க் பண்ணிட்டு இருக்கையில் ஒரு முறை கம்ப்யூட்டர் ப்ராப்ளம் ஆனதில இன்டர்னல் எக்ஸாம் கொஸ்டின் பேப்பர் கையால எழுத வேண்டியதாப் போச்சு. 'மேடம், உங்க கையெழுத்து அழகா, நீட்டா இருக்கு,என் கையெழுத்து கோழி கிறுக்கல் மாதிரி இருக்கும், நீங்களே என் கொஸ்டின் பேப்பரையும் எழுதித் தாங்க" -அப்படின்னு சக ஊழியர்கள் எல்லாம் அவங்க கொஸ்டின் பேப்பரையும் எந்தலையிலயே கட்டிட்டாங்க.
    கை உடைய உக்காந்து எழுதிக் குடுத்தேனாக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்...

    வருகைக்கும், ரசித்து கருத்து சொன்னமைக்கும் நன்றி பானு!
    ~~
    அம்முலு, நீங்களும் வானத்தைப் பார்க்கும் ஆள்தானா? ஒரு கை சேர்ந்துருச்சு! ஹாஹாஹ்ஹா! :) வருகைக்கும் ரசித்து கருத்து சொன்னதற்கும் மிக்க நன்றி அம்முலு!
    ~~
    ப்ரியா, தேங்க் யூ! நீங்க அட்லீஸ்ட் பேர் சொல்லறீங்க! நாங்க இன்னும் "அது"-ன்னுதான் சொல்லறோம்! ஹிஹி..ஒரு முறை என் கொழுந்தன் "இனிப்பு சீடை"-ன்னானே பார்க்கணும்! ;) :)
    ~~
    /i really enjoyed here.../ அதுதானே எனக்கு வேணும்? :)வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜி!
    ~~
    ஜனா சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. அந்தப் பாடல்- வினீத், கீர்த்தி ரெட்டியின் அழகு, நடனம், கவிதை இப்படி பலகாரணங்களுக்காக எனக்குப் பிடிக்கும். :)
    ~~

    ReplyDelete
  38. ஹேமா, வருகைக்கும் ரசித்துப் படித்து, சிரிச்சதுக்கும் ரொம்ப சந்தோஷங்க! தேங்க் யூ! :)
    ~~
    //யாரோ இதுக்கு பேரு "ஆட்டுக்கால் பிஸ்கட்"-னு சொன்ன நியாபகம். // ஆஆஆ! ஆட்டுக்காலு பிஸ்கட்டா??? எப்படி, எப்படிங்க?? ஆ.காலுக்கும் இந்த பிஸ்கட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு அப்படிச் சொன்னாங்க? அந்த "யாரோ" -யாருன்னு நினைவு வந்தா மறக்காம இதையும் கேட்டுச் சொல்லுங்க மீனாக்ஷி! ;):)

    /I liked the sky, moon and the sunset./ எங்காத்துக்காரரும் இதே 3 போட்டோஸைத்தான் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னார்! உங்க 2 பேர் ரசனையும் ஒரே மாதிரி இருக்கே! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    நன்றி மேனகா!
    ~~
    வானதி, நன்றி!
    ~~
    ஸாதிகாக்கா, நல்லா "ஓஓ" போடறீங்களே? பசங்க நல்லாவே ட்ரெய்னிங் குடுத்திருக்காங்க! நன்றிங்கோஓஓஓ! ;):)
    ~~
    ராஜேஸ்வரி அம்மா, வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்! :)
    வானப் பைத்தியங்கள்--பல பேர் இருக்கிறோம்! ;)
    ~~
    //Gnanaguru k said...
    This comment has been removed by the author. // ???! என்னாச்சுங்க ஞானகுரு?! எப்படியாயினும், வந்து கருத்தினைப் பதிந்து, அதை டெலீட்-செய்யுமளவு நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டமைக்கு நன்றி!
    ~~
    @ அரையாய் நிறை , பெயரை மாத்திட்டீங்களா? இந்தப் பெயர் அரைகுறையாய் இருப்பது போல எனக்குத் தெரியுதா, இல்ல, பெயரே "அரையாய் நிறை"-தானுங்களா? :)
    உங்க வலைப்பூ பக்கம் வந்தேன், பொறுமையாய்ப் படிக்க வேண்டிய விஷயங்களாய் எழுதறீங்க, நிதானமா வந்து பார்க்கிறேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
    ~~
    /BOMBAY LAKKADI/ பாம்பே லக்கடி?! இதுவும் புதுப் பேரா இருக்குங்க. தகவலுக்கு மிக்க நன்றி அனானி!
    ~~
    இளமதி, எப்பவும் உங்க கமென்ட் பார்த்தா ஒரு கப் ஹார்லிக்ஸ் குடிச்சமாதிரி உற்சாகம்தான் எனக்கு! :) நன்றிங்க!
    ~~
    ஏஞ்சல் அக்கா,//Garrrrrr miyaaa ...giri come soon i need your help // கிரி-ய ஏதுக்கு கூப்பிடறேள்?! திரு.கிரி-யைக் கூப்பிடுங்கோ..வந்து ஒரு டஜன் இஞ்சக்ஷன் போட்டா மியாவ் தெளிஞ்சிருவாங்க!:);))))

    //நானும் எப்பவும் வானத்தை பார்த்து வியந்ததுண்டு ..
    அதனால் கண்மண் தெரியாம....... மற்றவை அப்புறமா சொல்றேன் :))// இப்பூடி சஸ்பென்ஸ் வைப்பது சரியில்லை, சரியில்லை! சீக்கிரமா சொல்லுங்க!

    கஜூர்??! அது போண்டா மாதிரி உருண்டையா இல்ல இருக்கும்? ரோட்டோரம் வண்டிகளில் சுட்டு விற்பாங்க. எனக்கு அதுவும் ரொம்ப பிடிக்கும்ம்ம்ம்ம்ம்! ;) :) பாம்பே லக்கடி- அனானியும் இதையே சொல்லியிருக்காங்க. நெக்ஸ்ட் டைம் கோவையில் கடைக்குப் போகையில் இந்தப் பெயர் எல்லாம் சொல்லி கடைக்காரரை மிரட்டப்(!) போறேன். :)

    இதில சோடா மாவு இருக்குமான்னு தெரில ஏஞ்சல் அக்கா, ஆனா சூப்பரா பொறுபொறு-ன்னு இருக்கும்!

    புலி-யை ஒவ்வொரு முறை மாடியேறும் போதும் கவனிப்பேன், ஒரு நாள் படமும் எடுத்துட்டேன்! :)

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மிக்க நன்றிகள்! :)))
    ~~
    ஷைலஜா, மெயில் அனுப்பியாச்சுங்க!:)
    ~~
    ஆசியா அக்கா, வேகமா ஸ்க்ரோல் பண்ணீங்களா?! நோஓஓஓஓஒ..நிதானமா ஒவ்வொரு படமா ரசிச்சுப் பார்க்கோணும்! ;)
    நன்றி அக்கா!
    ~~


    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails