Wednesday, January 4, 2012

அமுதே தமிழே..

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழின்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத்தமிழெங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத்தமிழெங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
என்று பாரதிதாசன் எழுதிவைத்ததை எல்லாரும் அனுபவித்துப் படித்திருக்கிறோம். தமிழ் நாடு ஒரு மாநிலமாக இருந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் தமிழன்னை ஒவ்வொரு வடிவில் வடிவெடுத்திருக்கிறாள்.

ஒரு சிச்சுவேஷன் சாங்...கேளுங்க! பாட்டைக் கேட்டுட்டு மீதியத் தொடருவோம்.



எங்க ஊருப்பக்கம் வந்தால் தமிழன்னையை மரியாதை கொஞ்சும் கொங்குப் பெண்ணாகப் பார்க்கலாம். சென்னையிலே சென்னை டமில்:) பேசும் சிங்காரியாக,தென் தமிழ் நாட்டுப்பக்கம் போனால் நாஞ்சில் நாட்டு நங்கையாக என்று எத்தனையெத்தனை தமிழ்?? மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், குமரித்தமிழ், கொங்குத்தமிழ், பிராமணர் தமிழ், சென்னைத்தமிழ் இந்த வரிசையில் சமீபத்தில் "இடலாக்குடி தமிழ்" பக்கம் போக நேர்ந்தது!

இடலாக்குடி..நாகர்கோயில் அருகே இருக்கிறது.கிட்டத்தட்ட கேரள எல்லையில் இருப்பதால் அங்கே தமிழ் + மலையாளம் இரண்டு மொழிகளும் கலந்து தலையாளம் ஆகியிருக்கிறது தமிழ்! :) இங்கே அந்த ஊரைச் சேர்ந்த நண்பர் குடும்பம் இருக்கிறார்கள். பேசிக்கொண்டிருக்கையில் பலமுறை அவங்க பேச்சை நிறுத்தி, சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டுக்கொள்வது வழக்கம்.

ஒரு முறை வீட்டுக்கு வந்திருந்தப்ப, அவங்க குட்டிப்பெண் எங்க வீட்டில ஜாலியா விளையாட ஆரம்பிச்சுட்டா. போலாம் வான்னு அவங்க கூப்பிட அவ கிளம்பல.."அப்பா-அம்மா கிளம்பறோம்..நீங்க ஆன்ட்டி வீட்டிலயே நிக்கறீங்களா?" என்று அவள் அப்பா கேட்கவும், என்னவர் "ஏங்க அவ நிக்கணும்?? உட்கார்ந்தே விளையாடிட்டு இருக்கலாமே..நின்னுட்டே இருந்தா கால் வலிக்காது?? "ன்னாரா...கண்ணில் தண்ணி வர சிரிச்சுட்டோம் எல்லாரும்!

குட்டிப்பொண் எங்க வீட்டிலேயே இருக்கட்டும் என்பதுதான் வீட்டிலேயே நிற்பதுக்குப் பொருளாம்!! அப்புறம் ஒரு முறை காஃபி டேபிள் பற்றி ஏதோ பேசுகையில் "எங்க வீட்டு காஃபி டேபிளுக்கு வீதி(!) அதிகம்!"னு ஒரு போடு போட்டாங்க...நான் வழக்கம் போல "ங்ஙே......!!!" வீதின்னா அகலமாம்!! :))))))

இப்படியாக நான் அவ்வப்பொழுது தமிழில் புதுப்புது வார்த்தைகள் படித்துக்கொண்டிருக்கையில் ஒருநாள் விக்கி பீடியாவில் "இடலாக்குடி தமிழ்" என்று தேடிப் பாருங்களேன்னு சொன்னாங்க..நானும் பார்த்தேனா...என்னவருக்கும் காட்டினேனா..ரெண்டு பேரும் நல்லா சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரின்னு சிரிச்சு முடிச்சு...இரவு 9.30ஆனாலும் பரவால்லைன்னு அவிங்களுக்கு போன் செய்து பேசினோம். சும்மா சொல்லக்கூடாது,இடலாக்குடி தமிழ் ஜூப்பருங்கோ!!:D

இங்கே மட்டும் க்ளிக் பண்ணி இடலாக்குடி தமிழ் பற்றி விக்கிபீடியா தரும் விளக்கத்தைப் பார்க்காமல் விட்டால் நீங்க ரெம்ப மிஸ் பண்ணுவீங்க,அதனால ரெண்டுநிமிஷம் அங்கிட்டுப் போய் பார்த்துட்டு வந்துடுங்க.

என்ன பாத்துட்டீங்களா??அந்த டேபிள்ல நிறைய புதிய வித்யாசமான வார்த்தைகள் இருந்தாலும் சிலது ரொம்பவே சிரிக்க வைச்சது எங்களை...
  • "ம்பா கறி"ன்னா ஆட்டுக்கறியாம்!! அதுக்கு ஏன் இந்தப்பேர் வந்ததுன்னு விளக்கம் வேற சொன்னாங்க அவிங்க...ஆடு "ம்பா..ம்பா"ன்னு கத்துமாம்..அதனால அது "ம்பா கறி"யாம்!!
  • "துக்க" என்ற வார்த்தையும் மிகவும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் வார்த்தையாம்..துக்க= அறிவு கெட்டவனே!!!!
  • கான்-னா சாக்கடையாம்..அப்ப ஷாரூக்"கான்",,,அமீர்"கான்",,,சல்மான்"கான்" எல்லாம்??!? அப்படின்னு ஒரு கேள்வி எனக்குத் தோணுச்சு!!! :):)
இதையெல்லாம் எழுதையில எங்கூர்த் தமிழும் கொஞ்சம் கேவகம்(!) வந்துருச்சுங்கோ..அதைய எழுதாம உட முடியுமா?? :)

அக்கானுங் ------> ஆமாங்க
அக்கட்டால போ-------> அந்தப் பக்கம் போ
இக்கட்டால போ ------->இந்தப் பக்கம் போ
அவடத்தால --------> அங்கே
இவடத்தால -------->இங்கே
பொழுதோட--------> சாயங்காலம்
அம்முணி -------->பொதுவாகக் குறிப்பது தங்கையை,..ஆனா எல்லாப் பெண்களையும் குறிப்பிடும் வார்த்தையாகவும்..சிலருக்கு இதுவே பேராகவும் இருக்கும். சின்னம்மிணி,பெரியம்மிணி இப்படியும் சொல்லுவாங்க.
மழைக்காயிதம்-------> ப்ளாஸ்டிக் கவர்
என்றது ------->என்னுடையது
உன்றது -------> உன்னுடையது
ஒட்டுக்கா வைச்சிருக்கேன் --------->ஒன்றாக வைத்திருக்கேன்
வேறயாப் போயிட்டாங்க ------->தனிக்குடித்தனம் போயிட்டாங்க
ஒரம்பரை -------> உறவுக்காரர்கள்/விருந்தினர்கள்

இப்போதைக்கு இவ்வளவு ஸ்பெஷல் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருது. மற்ற வார்த்தைகள் நினைவு வருகையில் இணைக்கிறேன்.(ஒரம்பரையை நினைவுபடுத்திய ரீச்சருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! :)) இன்னும் நல்லா தெரிஞ்சுக்க விருப்பப்பட்டா ஒண்ணு செய்யுங்க..சதிலீலாவதி படத்தைப் பாருங்க. இது ஜஸ்ட் அ சாம்பிள்!! :)



இதுவரைக்கும் பொறுமையா கர்ஸரை ஸ்க்ரோல் பண்ணி வந்திருந்தீங்கன்னா ஒண்ணு படிச்சுட்டு வந்திருக்கோணும்..இல்லாட்டி படம்பார்த்துட்டு வந்திருக்கோணும்..எப்புடின்னாலும் பரவால்ல, இந்தாங்க...சுடச்சுட டோக்ளா!

செல்ஃப் ஸர்வீஸ்தானுங்கோ...ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்! :)))))))))

ரெசிப்பி வேண்டும் என்பவர்கள் இங்கே க்ளிக்கி Read(!) பண்ணுங்க என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி!

36 comments:

  1. ----E

    ஆ! ()
    /////////////
    ??????
    ??????
    ??????

    ReplyDelete
  2. //நிக்கறீங்களா?// அது எங்கட பக்கமும் இருக்குது மகி. அவடம் இவடம் எல்லாம் நாங்களும் சொல்லுறதுதான்.

    ம்.. படம் பார்த்தாச்சு.
    எங்க வீட்டுக்கு 'ஒரம்பறை' வந்திருக்காங்க. ;)))

    இடலாக்குடி சொற்கள் கனக்க எனக்கும் பழக்கமானதாத்தான் இருக்கு.

    'கான்' - இதெல்லாம் கூட உங்களுக்குப் புதுசா!! (கனால் என்கிற ஆங்கில வார்த்தைக்குப் பக்கம் என்று தோன்றும் எனக்கு.) இது தமிழ் அல்ல. அந்நியர் ஆட்சியின்பின் வந்து ஒட்டிக்கொண்ட சொல். ஆனால்.. தமிழ்தான். ;D

    ReplyDelete
  3. 1. முட்கரண்டி
    2. வாய் ;))

    ReplyDelete
  4. :-)நல்ல பதிவு..பிற மாவட்ட வட்டார வழக்கு சொற்களையும் நீங்கள் உங்கள் பாணியிலேயே தொடர்ந்து இங்கு எழுதலாமே மகி:-) நாங்களும் கற்று கொள்வோமே!

    ReplyDelete
  5. //இடலாக்குடி சொற்கள் கனக்க எனக்கும் பழக்கமானதாத்தான் இருக்கு.//ஆ...இமா,இடலாக்குடி!! "இ"தான் இணைப்பா இருக்குமோ?? ;) பதிவில் சொல்லியிருக்கும் வார்த்தைகள் எல்லாமே எனக்குப் புதுசுதான் இமா! ஒரம்பரைய வெருட்டாம அன்பாக் கவனிங்க,ஓக்கை? ;)

    //1. முட்கரண்டி
    2. வாய் ;))// ஓஓஓஓஓஓஓஹ்...ஓக்கே,காட் இட்! முள்ளுகரண்டியால டோக்ளாவை எடுத்து வாயிலே போட்டுகிட்டீங்களா இல்லையா?? இப்புடி அந்தரத்தில தொங்கப்போட்டுப்போனா யாருக்கு என்ன புரியும்?? எதோ என்னைமாதிரி
    முடிவிலிஅறிவிலிகளுக்கும் புரியுறமாதிரி கமென்ட்டுங்கோ! ;)

    காயத்ரி,நீங்க மதுரைக்காரவுகள்ல? :) நன்றிங்கோ!

    நித்து,கண்டிப்பா எழுதறேன் நித்து..இன்ஃபாக்ட் இந்தப் பதிவிலயே இன்னும் 2 பாரா சேர்த்திருந்தேன்..கடைசி நிமிஷத்தில எடிட் பண்ணிட்டேன்,அது இன்னொரு தமிழ். சீஃப் எடிட்டர் அவுட் ஆஃப் ஸ்டேஷன்! அவர் வந்ததும் அப்ரூவல் வாங்கிட்டு அடுத்த பதிவில் பப்ளிஷ் பண்ணறேன். :)
    நன்றிங்க!

    ReplyDelete
  6. /Blogger siva sankar said...

    :)/
    ஆ!!! ஷார்ட் ஹேண்டும் குறைஞ்சு ஸ்மைலியாகிருச்சே?!! தம்பீ சிவசிவசிவசிவவவவவ சங்கர்,எனி ப்ராப்ளம்?!

    ReplyDelete
  7. //எனி ப்ராப்ளம்?! // ஹி ஹி.
    "தமிழ்தானே நமக்கு ப்ராப்ளமே," இல்லையா சிவா!! ஸ்மைலி பிரச்சினையே இல்லை. ;)

    ReplyDelete
  8. மகி இடலாக்குடி தமிழ் இலங்கை தமிழ் மாதிரியே இருக்கு .
    இதே மின் குழல் விளக்கை நானும் ஜெர்மனியில் வாங்கியிருக்கிறேன்
    (பல்பு !! பல்பு )
    ஒரு இலங்கை அக்கா என்னிடம் ஒருமுறை நிக்கறீங்களா என்று கேட்டாங்க
    நான் இல்லை அக்கா நான் உக்காந்திட்டு தான் இருக்கேன் என்று சொன்னேன்.
    .

    ReplyDelete
  9. கான்-னா சாக்கடையாம்//

    எங்காத்துக்காரர் இந்த வார்த்தை சொல்வார் .ஏன்னா அவங்களும் திருவனந்தபுரம் கொழும்பு தமிழ் .
    //.அப்பஷாரூக்"கான்",,,அமீர்"கான்",,,சல்மான்"கான்" எல்லாம்??!? //நமக்கெல்லாம் சல்மான் கான் தானே நினைவு வரும் .wait a minute ???

    why did you forget saif khan ??


    .எங்கப்பா மதுரை அம்மா நாகர்கோவில் இந்த வழக்கு எங்க வீட்டிலும் பேசுவாங்க .ஆனா இலங்கை தமிழும் இடலாக்குடி தமிழும் பங்காளிகள் மாதிரி இருக்கு

    ReplyDelete
  10. அம்முணி !! பதிவு சூப்பருங்கோ

    ReplyDelete
  11. மகி மீண்டும் நான் வந்திருக்கேன்
    பேஸ்ட்ரி ஷீட்ஸ் வாங்கி puffsசெய்தேன் சூப்பரா வந்தது .எனக்கு வெங்காய ஃபில்லிங் .கணவருக்கும் மகளுக்கும் சிக்கன் வைத்து செய்தேன் ரொம்ப டேஸ்டியா வந்தது

    ReplyDelete
  12. மகி, இலங்கைத் தமிழிலும் இப்படி நிறைய வார்த்தைகள் இருக்கு. வீதி என்றால் அகலம். என் அம்மாச்சி அடிக்கடி சொல்வார்கள். அதோடு நிறைய ஆங்கில, போர்த்துக்கேய வார்த்தைகளும் இருக்கு.

    கோவை சரளா சூப்பரோ சூப்பர். எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை. அதுவும் கமலும், கோவை சரளாவும் சூப்பர் ஜோடி.

    ReplyDelete
  13. என்ன இது தமிழ் மாநாடு நடக்குதுபோல:).

    மகி பாட்டின் முதல் இரு வரிகளும் அடிக்கடி நான் மனதில் நினைப்பது.. அதாவது சத்தமின்றிப் பாடுவது... எனக்கு ரொம்பப் பிடித்த வரிகள்.

    தமிழே புரியுதில்லை என்கிறீங்க... தமிழ்நாடென்னும் பெயரில இருந்துகொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    நீங்க எப்பூடிப் பேசினாலும் இலங்கை ஆட்களுக்குப் புரிந்துவிடும்(தமிழில்).. ஆனா தமிழ் நாட்டினர் கஸ்டப்படுகினம் எம் தமிழைப் புரிய:)).

    ReplyDelete
  14. வேறையாப் போயிட்டாங்க... அதைத்தானே நாங்க அது வேற இது வேற என்போம்:)) ..

    எனக்கு டோக்ளா வாணாம்.. இனிப்புபோல தெரியுது... அஞ்சுவின் சிக்கின் பேஸ்ட்ரிதான் வேணும்ம்ம்ம்:)).

    ReplyDelete
  15. ம்பா எனில் அங்கின ஆடோ? அவ்வ்வ்வ்வ்....

    நாங்கள் ஊரில் மாட்டைத்தான் உம்பா என செல்லமாக குழந்தைகளுக்குச் சொல்வோம்.... உம்பாக் கண்டு:)(கன்று) என்போம்... மாட்டுக்குட்டியை ஹையோ குட்டி இல்லை கன்றை:)

    ReplyDelete
  16. இடலாங்குடி தமிழ் விக்கிட பீடியாவில போய்ப் பார்த்தேன், அது தமிழ் எனச் சொல்கிறார்கள் ஆனா அதுக்கு வேறு மொழிச் சொல் வைக்கோணும்:)).

    ReplyDelete
  17. இப்போதான் இந்த த‌மிழை கேள்விபடுகிறேன்..பகிர்வுக்கு நன்றி மகி!! அப்புறம் எனக்கு பிடிச்ச டோக்ளா போட்டுருக்கீங்க,சூப்பரா இருக்கு...

    ReplyDelete
  18. Mahi,love thisssss post...neenga nannaa ezhuthirukkel..jamaaichuttel pongo:-)

    ReplyDelete
  19. உன் கட்டுரைக்கே அமுதென்ற பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.
    உங்க ஊர்த் தமிழ் மதுரைத்தமிழ்
    கொஞ்சம் ஒற்றுமையா? அப்பப்பா எப்படியெல்லாம் போய், எங்கெங்கோ போய், இடலாங்குடி தமிழையும் பார்த்து எல்லோரையும் தமிழ்ப் புலவராக்கி விடுவாயோ என்னவோ? என்
    கற்பனையும் எங்கெங்கோ போய்ட்டு வரது. நிறைய பதங்கள் எந்த ஊர் பாஷை என்று தெறியாமலே உபயோகிப்பதற்கு வட்டார பெயர்
    தெறிந்தது. இன்னும் எவ்வளவோ?
    நன்றி மகி. காமாட்சி

    ReplyDelete
  20. இடலாக்குடி தமிழாஆஆஆ....இங்கே ஒரு ஆள் கிட்ட தட்ட ரெண்டு வருஷம் இருந்தார் கேரளா பார்டர் ...அவர் பேசுவது தமிழா மலையாளமா புரியாம ஆரம்பத்தில குழம்பியதுண்டு ஹா..ஹா... :-))

    ReplyDelete
  21. நீங்க குடுத்த லிங்காவது பரவாயில்லை எங்கூரு தமிழ் ஒரு வார்த்தை கூட கண்டே பிடிக்க முடியாது உங்களால ஹா..ஹா.. :-))

    உதாரணம்

    கொள்ளைல போவான் ! நாசமா போவான் ! இதே டைப்தான் .ஆனா நிறைய இருக்கு :-)

    கான் -- மழைநீர் வடிய ஓட்டின் (பழையவீடு எல்லாம் ஓட்டு வீடுதானே) கீழே வைத்திருக்கும் பைப்புக்கு சொல்லுவது . :-))

    ReplyDelete
  22. //athira said...

    இடலாங்குடி தமிழ் விக்கிட பீடியாவில போய்ப் பார்த்தேன், அது தமிழ் எனச் சொல்கிறார்கள் ஆனா அதுக்கு வேறு மொழிச் சொல் வைக்கோணும்:)).//

    //Edalakudy (Tamil: இடலாகுடி) is a well populated Muslim area //

    ம்ம்ம் இப்பதான் சரியா புரியுது..எங்க பேச்சிலும் ஊரில மட்டும் நிறைய உருது + அரபி + பார்ஸி வார்த்தை மிக்ஸ் ஆகி வரும் ((இதேப்போல நாகூர் )) . ஆனா வெளியே வந்தா டீஸண்ட் தமிழ்தான் .

    வெளியிலிருந்து யார் வந்தாலும் புரியவே புரியாது :-))

    ReplyDelete
  23. இமா said...
    //எனி ப்ராப்ளம்?! // ஹி ஹி.
    "தமிழ்தானே நமக்கு ப்ராப்ளமே," இல்லையா சிவா!! ஸ்மைலி பிரச்சினையே இல்லை. ;)


    :))))

    ReplyDelete
  24. ஹா!! இதுக்கு எதுக்கு சுண்டெலி இப்புடீ பெரூசா ஸ்மைல் பண்ணுது!!!!

    ReplyDelete
  25. எப்படி எல்லாம் அருமையா பதிவு போடுறாங்க.ஆஹா! அந்த இடலாக்குடி தமிழ் வார்த்தைகள் சில எங்க ஊரிலும் புழக்கத்தில் இருக்கு.

    ReplyDelete
  26. ஜூப்பர் பதிவு மகி. இந்த மாதிரி தமிழ பிரிச்சு மேஞ்சிருக்கீங்க !! எங்களுக்கும் இலங்கை நண்பர்கள் பழக்கம். நெறையா புரிஞ்சாலும் சிலது அவங்க கிட்ட வெளக்கம் கேட்டு இருக்கேன். உங்க நிக்குற அனுபவம் எங்களுக்கும் இருக்கு. இடலாங்குடி தமிழும் இலங்கை தமிழும் ரொம்ப ஒரே மாதிரி இருக்கு. ஒரு தடவ அவங்க வீட்டுக்கு வந்த ஒரு பெரியவங்க " மத்தியானம் சாப்பிட்டதில இருந்து ஒரே அந்தரமாக இருக்கு " அப்படின்னு சொன்னாங்க. அது என்னன்னா நெறைய்ய சாப்பிட்டதால கொஞ்சம் uncomfortable ஆ இருக்கு அப்படிங்கறத சொன்னாங்க. ஒவ்வொரு ஊர் தமிழும் சுவாரசியம் தான்

    ReplyDelete
  27. என் நண்பி ஒருத்தவுங்க தஞ்சாவூர சேர்ந்தவுங்க . முதல் தடவ காபி கொடுத்தப்போ " ஐயோ மகிற மகிற கொடுத்திட்டீங்க அப்புடீன்னாங்க .

    சதி லீலாவதி என் ஆல் டைம் favourite . உங்க ஊரு தமிழ் எங்களுக்கு ரொம்ப புடிக்கும் இங்க நெறைய நண்பர்கள் இருக்காங்க. கொங்கு தமிழ் ல பேசும் போது ஏதோ ஒரு closeness வந்திடுது. உங்க ப்ளாக் என்னை ஈர்த்ததும் உங்க தமிழ் தான் அம்மணி

    ReplyDelete
  28. //...ஓக்கே,காட் இட்! //

    //இப்புடி அந்தரத்தில தொங்கப்போட்டுப்போனா யாருக்கு என்ன புரியும்?? எதோ என்னைமாதிரி
    முடிவிலிஅறிவிலிகளுக்கும் புரியுறமாதிரி கமென்ட்டுங்கோ! ;) //

    அப்போ மொதல்ல சொன்ன காட் இட் ????? ஹீ ஹீ டவுட்டு வருதில்ல :))

    ReplyDelete
  29. //தம்பீ சிவசிவசிவசிவவவவவ சங்கர்,எனி ப்ராப்ளம்?!//


    எல்லாம் இந்த புச்சு புச்சா கவிதை எழுதுறதுனால வந்த வினை.:))


    //நீங்க எப்பூடிப் பேசினாலும் இலங்கை ஆட்களுக்குப் புரிந்துவிடும்(தமிழில்//

    நெறைய்ய தமிழ் சினிமா எல்லாம் தமிழ் நாட்டு தமிழ் ல தானே வருது அதை கேட்டு கேட்டு நாங்க பேசுறது உங்களுக்கு புரியுது. இலங்கை தமிழும் புரியாம இல்லே சில வார்த்தைகள் வேற மாதிரி இருக்கு. ஸ்காட்டிஷ் ஆங்கிலம் வேல்ஸ் ஆங்கிலம் ஐரிஷ் accent , அமெரிக்கன் accent இப்புடி ஆங்கிலத்தில இத்த...ந வகை இருக்குற மாதிரி தான் தமிழும். எந்த ஊரா இருந்தா என்ன நம்ப எல்லாரும் ஒரே மொழிய பேசுறோம்

    ReplyDelete
  30. ok kannu muzhichchu 12.45 am comment pottaachchu...me good night

    ReplyDelete
  31. @ இமா, :)
    @ ஏஞ்சல் அக்கா,/இல்லை அக்கா நான் உக்காந்திட்டு தான் இருக்கேன் என்று சொன்னேன்/ ஹாஹா!!ஜூப்பர் பல்பூ! ;)
    /இலங்கை தமிழும் இடலாக்குடி தமிழும் பங்காளிகள் மாதிரி இருக்கு/ஆமாம்,பதிவைப் போட்டாத்தானே இதெல்லாம் தெரியுது?!!
    பஃப் செய்துட்டீங்களா,மறக்காமல் வந்து சொன்னதுக்கு நன்றி! :)

    @/நிறைய ஆங்கில, போர்த்துக்கேய வார்த்தைகளும் இருக்கு./ஓஹ்.,வெளிநாட்டு வார்த்தைகளை கலக்கிட்டாங்க,தமிழ்லன்னு சொல்லுங்க.

    கோவைசரளா-கமல் ஜோடி தூளா இருக்கும் அந்தப்படத்திலே.அதிலும் இந்த வீடியோ செம!!! "ஆம்பளைங்களுக்கு சான்ஸோ,சாய்ஸோ...",டயலாக் எங்கூட்டு பேவரிட் டயலாக்! ;))))
    நன்றி வானதி!

    ReplyDelete
  32. எங்க ஊர் தமிழ் கிட்டதட்ட உங்கள் ஊர் பாஷை தானுங்க... எப்படி நீங்க பேச்சுவாக்கு சொற்களை எழுதுனிங்கனுதான் புரியலை.. அருமை...

    ReplyDelete
  33. /என்ன இது தமிழ் மாநாடு நடக்குதுபோல:)./ஆமாங் அதிரா! இது ப்ளாகுலகத் தமிழ் மாநாடு! ;)

    /எனக்கு டோக்ளா வாணாம்.. இனிப்புபோல தெரியுது... /டோக்ளா இனிப்பில்ல,காரம்தான்! குஜராத்தி உணவுவகைகள் எல்லாமே லைட்டா இனிப்பு இருக்கும்.சாப்புட்டுப் பாக்காம வாணாம்னு சொல்லக்குடாது,யு வில் மிஸ் இட்! ஒழுங்காச் சாப்புடுங்க. :)

    /ம்பா எனில் அங்கின ஆடோ?/அது இடலாக்குடி ஆடு! எங்கூர் ஆடெல்லாம் "மே..ம்மே"ன்னுதான் கத்தும். :)

    /உம்பாக் கண்டு:)(கன்று)//ஆஹா..க்யூட்டா இருக்குதே பேர்?! நாங்க "கன்னுக்குட்டி"ன்னுதான் சொல்லுவோம்.

    /அது தமிழ் எனச் சொல்கிறார்கள் ஆனா அதுக்கு வேறு மொழிச் சொல் வைக்கோணும்:))./பாத்தீங்களா,நீங்களே சொல்லிட்டீங்க! ;)

    மேனகா,நீங்க இப்பதான் கேள்விப்படறீங்களா..எனக்கும் போனவருஷம்தான் தெரிந்தது.கருத்துக்கு நன்றி மேனகா!

    விஜிக்கா & ரம்யா, பாலக்காட்டுத் தமிழ்தானே..கூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.ஆனா ஒரு பதிவு முழுக்க எழுதும் அளவு மேட்டர் தேறுமான்னு தெரில.ஏதாச்சும் உளறிக்கொட்டி கிளறிமூடறேன்.:)
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க!

    /உங்க ஊர்த் தமிழ் மதுரைத்தமிழ்
    கொஞ்சம் ஒற்றுமையா?/இல்லையே காமாட்சிம்மா..ஏன் அப்படிக் கேட்கறீங்க? புரியலையே!! :)

    எனக்குப் புதிதாய்த் தெரியும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள இந்த வலைப்பூ உபயோகமா இருக்கு,படிப்போருக்கும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருந்தா எனக்குச் சந்தோஷம்,அவ்வளவுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா!

    ReplyDelete
  34. /எங்கூரு தமிழ் ஒரு வார்த்தை கூட கண்டே பிடிக்க முடியாது உங்களால /அவ்வ்வ்வ்வ்வ்! இப்புடி பயமுறுத்தறீங்களே..பேசுங்க பார்ப்பொம்,எங்களால கண்டுபுடிக்க முடியுதா இல்லையானு!:)

    /கான் -- மழைநீர் வடிய ஓட்டின் (பழையவீடு எல்லாம் ஓட்டு வீடுதானே) கீழே வைத்திருக்கும் பைப்புக்கு சொல்லுவது /ஆஹா..எங்கூர்ல அதுக்குப் பேர் "தோணி"!!:)

    /எங்க பேச்சிலும் ஊரில மட்டும் நிறைய உருது + அரபி + பார்ஸி வார்த்தை மிக்ஸ் ஆகி வரும்/ ஓ..அதுதான் நிறைய வார்த்தைகள் புரிவதில்லை!

    /ஆனா வெளியே வந்தா டீஸண்ட் தமிழ்தான்./ எல்லாருமே அப்புடிதான் ஜெய் அண்ணா. ஊருக்குப் போனா நம்மூர் பாஷ தன்னால வரும்,ஆனா வெளியே நார்மல் தமிழ்தான் பேசறது!;)
    ~~
    சுண்டெலி, உங்க முதல்:) வருகைக்கு நன்றி. எலிப்பொறி ரெடி பண்ணி மசால்வடை,சீஸ் எல்லாம் வச்சு உங்களைப் புடிக்கறதுக்குள்ளே நீங்களே சொந்த செலவில சூனியம் வச்சுகிட்டீங்க!;) ரொம்ப சந்தோஷம்! :))))))
    ~~
    இமா,:)
    ~~
    ஆசியாக்கா,என்ன பண்ணறது? நான் மொக்க போடணும்னு விதி இருக்கு போல.என்சாய்!!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!
    ~~
    நடுராத்திரியிலும் விடாமல் கருத்துமழை பொழிந்த நம்ம கிரிஷாக்காவுக்கு எல்லாரும் ஓஓஓஓஓஓஓஓஓஓ போடுங்கப்பா! :)

    "மகிற மகிற"ன்னா தளும்பத் தளும்பவா?? :) ஒரு வாட்டர் பாட்டில் தண்ணிய ஒரே மூச்சா குடிச்சு முடிச்சா, அதுக்குப் பேர்"தண்ணீய மண்டு மண்டுன்னு மண்டறதாம்!"! இது மதுரைத்தமிழ்!

    /உங்க ப்ளாக் என்னை ஈர்த்ததும் உங்க தமிழ் தான் அம்மணி/ ஆஹா,ரொம்ப மகிழ்ச்சி!

    பாயிஸா,அப்படியா??:) ரொம்ப சந்தோஷங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails