Monday, February 8, 2010

கார சட்னி

பொதுவாக கார சட்னிக்கு மிளகாய் வற்றல் சேர்த்துத்தான் அரைப்போம்..இந்த சட்னி, என் தோழியின் செய்முறை..அவருக்கு இன்னொரு தோழி சொன்னது..ஆக மொத்தம் நதி மூலம்,ரிஷி மூலம் எங்கே என்று தெரியவில்லை.:)

வழக்கமான சட்னிகளே ஒவ்வொரு முறையும் செய்வதற்கு பதிலாய் இப்படி சின்னச் சின்ன மாற்றங்களுடன் செய்யும்போது என்னவோ ஒரு புது சட்னிவகை செய்வதாய் ஒரு மகிழ்ச்சி..நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க..


தேவையான பொருட்கள்
வெங்காயம்(பெரியது) - 1
தக்காளி (மீடியம் சைஸ்)- 1
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் (அ) காரத்துக்கேற்ப
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு

செய்முறை
வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து, பெருங்காயத்தூள் சேர்த்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கி ஆறவைக்கவும்.

ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும்.

காரசாரமான கார சட்னி தயார். இது இட்லி ,தோசை, பணியாரம் இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.

2 comments:

  1. இதும் ஈசியா இருக்கு மஹி.. கண்டிப்பா செஞ்சுட்டு சொல்றேன்..

    ReplyDelete
  2. செய்து சுவைத்துப் பாருங்க.. நன்றீ!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails