
யு.எஸ்.வந்த புதிதில் ஜெம் ஷோ-வை முதன் முதலில் கேள்விப்பட்ட அனைவரும் கண்டிப்பாய் சில பல டாலர்களை செலவு பண்ணியிருப்பாங்க.நானும் இதுக்கு விதிவிலக்கில்லை. பொதுவாக வருஷத்துக்கு 2 முறை வெள்ளி-சனி-ஞாயிறு என்று மூணு நாள் ஜெம் ஷோ நடக்கும். ஆன்லைன்ல பாஸ் பிரிண்ட் பண்ணினா ஆபர்,வெள்ளிக் கிழமை போனா, மத்த 2 நாளுக்கு ப்ரீ அட்மிஷன் இப்படி நம்மை கொக்கி போட்டு இழுப்பாங்க. கூடவே முதல் முறை டிக்கட் வாங்கும்போது நம்ம அட்ரஸ் வாங்கி வச்சுகிட்டு அடுத்த முறை இன்விடேஷன் + ப்ரீ அட்மிஷன் பாஸ் அனுப்பிடுவாங்க.
இரண்டு வருஷம் முன்பு நாங்க இருந்த ஊரில் ஜெம்ஷோ வந்தது. வீட்டுப் பக்கத்தில் இருந்த ஒரு தோழியும் எங்களுடன் சேர்ந்துகிட்டாங்க. இவரை கொத்திப் பிடுங்கி ஒருவழியா சனிக்கிழமை காலைல வெற்றிகரமா போய்ட்டோம். கல்யாண மண்டபம் சைசுக்கு இருந்த ஹால்-ல லைனா டேபிள் போட்டு ஸ்டால் வைச்சு இருந்தாங்க. கலர் கலரா கிறிஸ்டல், பவளம்,முத்து, ரூபி, எமரால்ட் , சபையர் இப்படி விலை உயர்ந்த கற்கள் எல்லாமும் இருந்தது. கீ செய்ன்,ரிஸ்ட் வாட்ச் கடைகள், கால்வலிக்க நடந்து பர்ஸ் இளைக்க ஷாப்பிங் செய்துட்டு ஆறுதலா உட்கார்ந்து சாப்பிட பிஸ்ஸா கார்னரும் இருந்தது.
அதுவரை எனக்கு முத்து பவளம் ரூபி தவிர வேறு கற்கள் எல்லாம் தெரியாது. அழகான மெரூன் கலர் கார்னெட், ப்ரைட்டான கருப்பு நிறத்தில் ஓனிக்ஸ், கடலின் நீலத்தில் டர்க்காய்ஸ், பச்சையிலே பல நிறங்களில் ஜேட் என்று பலவகை இருப்பதை அன்றுதான்தெரிந்துகிட்டேன். பட்டிக்காட்டான் முட்டாய்க் கடையப் பாத்தா மாதிரியே கொஞ்ச நேரம் பராக்கு பாத்துட்டு பர்ச்சேஸ் பண்ண புகுந்தோம்.
முத்து நல்ல சீப்பா கிடைத்தது. டாலர்(யு.எஸ்.டாலர் இல்ல,இது வேற டாலருங்க) வைச்சு,2 -3 வரில இருக்குமே முத்துமாலை அது மேல எனக்கு ரொம்ப நாளா ஒரு கண்ணு. கூடவந்த ப்ரெண்டும் அதே மாதிரி நினைத்ததால் முத்துமாலை +வளையல் செய்யற ப்ளான்ல, கடைக்காரர்கிட்ட பேரம் பேசி முத்துக்களை அள்ளிகிட்டோம். அந்நேரம் ஊருக்கு போகும் பிளானும் இருந்ததால் சொந்த பந்தத்துக்கெல்லாம் சேர்த்து நான் தேத்திய ஜெம் கலெக்ஷன் இதோ..
(எதுக்கு இப்படி கடை பரப்பி போட்டோ எடுத்திருக்கேன்னு நீங்க நினைக்கலாம். அங்கங்கே இருந்த தோழிகளுக்கெல்லாம் போட்டோவை அனுப்பி அவிங்க வீட்டு ரங்க்ஸ் பர்ஸ்களுக்கெல்லாம் வேட்டு வைக்கணும்ல? அதுக்குத்தான்! ஹிஹிஹி!)
ஊருக்கு போனதும் எல்லாருக்கும் டிஸ்ட்ரிப்யூட் பண்ணிட்டு என்னோடதெல்லாம் ராம் நகர்ல ஒரு ஜெம் ஷாப்ல குடுத்து கோர்த்து வாங்கினேன்.(தங்கமெல்லாம் இல்லைங்க. வெள்ளியோ, ஐம்பொன்னோ ஏதோ ஒண்ணுல செய்து தங்க முலாம் பூசியது). ஆசை ஆசையா வாங்கின முத்துக்களுக்கு அட்டகாசமா மாலை-வளையல் டிசைன் செலக்ட் பண்ணி குடுத்துட்டு வந்தேன். கடைக்காரக்கா கடைசி நேரத்தில் சரியா கோர்க்காம சொதப்பிட்டாங்க. அதனால் அது ஊரிலேயே இருக்கு.
"விடாது கருப்பு"-ன்னு அடுத்த வருடமும் ஜெம் ஷோ டிக்கட் அதுவே வந்தது. எதுவும் வாங்க வேணாம், சும்மா பாத்துட்டு வரலாம்னு(?!) போனோம். முதல் முறையே டர்க்காய்ஸ் என்னவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. அப்ப நான் வாங்கலை, இந்தமுறை அவர் ஆசையா வாங்கித் தரும்போது வேணாம்னு சொல்ல முடியுமா? நீங்களே சொல்லுங்க?!! ;)
டிஸ்கி.: ஒரிஜினல் ரூபி-எமரால்ட்-ஸஃபையர் எல்லாம் ரொம்ப ரொம்ப காஸ்ட்லி, இப்படி சரங்களா எல்லாம் வாங்கமுடியாது, இந்த கற்கள் எல்லாம் ஒரிஜினல் இல்லை என்றும் சொல்றாங்க. எது உண்மைன்னு தெரில. ஆனால் குடுத்த காசுக்கு மதிப்பு இருக்கறமாதிரிதான் எனக்கு தெரிந்தது.
முதல் படத்தை பாத்து டென்ஷன் ஆயிராதீங்க..திருஷ்டிக்குன்னு போட்டிருக்கேன், சீரியஸா எடுத்துக்காதீங்க, சும்மா தமாஷுக்கு! அந்த லெமன் சிரிக்கறது அழகா இருக்கில்ல? :D