தேவையான பொருட்கள்
மீல்மேக்கர் (சோயா உருண்டைகள்) -12
ஃப்ரோஸன் பட்டாணி-1/4கப்
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1
தக்காளி-2
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2டீஸ்பூன்
மல்லித்தூள் -1/2டீஸ்பூன்
சக்தி கறிமசாலா பொடி -1டீஸ்பூன்
***தேங்காய் விழுது கொஞ்சம் (விரும்பினால்)
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மல்லி-புதினா இலை சிறிது
உப்பு
எண்ணெய்
செய்முறை
1.சோயா உருண்டைகளை கொதிநீரில் 3 நிமிடங்கள் போட்டு கொதிக்கவிட்டு, குளிர்ந்த நீரில் அலசி பிழியவும். பிழிந்த உருண்டைகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துவைக்கவும்.
2.சிறிய ப்ரெஷ்ஷர் குக்கரில் எண்ணெய் காயவிட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு பச்சைவாசம் அடங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பிறகு தூள்வகைகளை சேர்த்து கிளறவும்.
3. தேங்காய் விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கி,4. உதிர்த்த சோயா மற்றும் பட்டாணியையும் சேர்க்கவும்.
5. கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேகவிடவும்.
6. இரண்டு விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.7. நறுக்கிய மல்லி-புதினா சேர்த்து தண்ணீர் வற்றும்வரை கிளறி இறக்கவும்.
[பொரியல் தண்ணீராக இல்லாமல் கொஞ்சம் ட்ரையாக இருக்கவேண்டும், ஒருவேளை தெரியாம, தண்ணி அதிகமா வைச்சுட்டீங்கன்னா தண்ணீர் வற்றும்வரை குக்கரை அடுப்பில் வைத்து கிளறி இறக்குங்க! ;)]
8. சுவையான மட்டர்- சோயா கீமா ரெடி!


