Showing posts with label பூக்கள். Show all posts
Showing posts with label பூக்கள். Show all posts

Wednesday, July 20, 2016

கண்களுக்கு குளிர்ச்சியாய்...

எங்கள் வீட்டுப் பூக்கள் சில... சூரியனைப் பார்த்துத் திரும்பி நிற்கும் சூரியகாந்தி! 
சிவப்பும் வெள்ளையுமாய்க் கலந்து மிரட்டும் அழகு ரோஜா..
 உட்புறம் வெள்ளையும், வெளிப்புறம் மஞ்சளுமாய் இதழ்கள் கொண்ட அழகுப்பூ...
குட்டிக்குட்டியாய்ப் பூக்கும் மினி டேலியா...
 செடிகள் மட்டும்தான் அழகாய்ப்பூக்குமா? நானும்தான்... என்று குலைதள்ளி கொல்லென்று சிரிக்கும் Palm tree..
A rose is a rose is a rose is a rose is a rose!! Always the best!! Red rose with amazing fragrance! 
My little flower Laya, the Prettiest one in my garden! :) 
Special Treat from Coimbatore...Ootti Varki from A1 Chips!! Hope you enjoyed the post! Thank you! 

Tuesday, May 10, 2016

வண்ண வண்ண பூக்கள்!

இந்த வருட வசந்தத்தில் எங்க வீட்டில் பூத்த வண்ணப்பூக்கள் இந்தப் பதிவில்!  :) 








எல்லா வேலையையும் பூக்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று எழுதாமல், வெறும் படங்களை மட்டுமே கொண்டு இந்தப் பதிவு! பார்த்து ரசியுங்க! நன்றி! 

Monday, May 11, 2015

பூ பூக்கும் ஓசை..

மொட்டிலிருந்து ஒரு ரோஜாவின் பயணம்..
மொட்டவிழ்ந்த முதல்நாள்..
இரண்டாம் நாள்..இன்னும் கொஞ்சம் மொட்டு பாக்கியிருக்கிறது..
..இதோ ஆகிட்டது...முழுவதும் விரியத்தயார்!
"பப்பரக்கா"- என விரிந்த ரோசாப்பூவக்கா! :)
இனி வண்ணம் மங்கி...
உதிரும் முன்னே இன்னொரு பூ பூத்தாச்சு! :)

இந்த ஏழு நாட்கள் ரோஜாவுடன் பயணித்தமைக்கு மிக்க நன்றிகள்! 

Sunday, March 29, 2015

வா வா வசந்தமே..சுகந்தரும் சுகந்தமே!

இந்த வசந்தத்திற்கு வீடு வந்த புதுமலர்கள்..
பேன்ஸி(Pansy), வயோலா(Viola), கெர்பரா(Gerbera), ரனன்குலஸ்(Rananculus), சீலோஷா(Celosia), ரோஜாக்கள் என்று வண்ண வண்ணப் பூக்களை எங்க வீட்டுக்கு அள்ளிக்கொண்டு வந்திருக்கு இந்த வசந்தம். [பூக்களின் அருகிலேயே ஆங்கிலப் பெயர் கொடுத்திருக்கேன், க்ளிக் பண்ணினால் கூகுளில் அந்தப் படங்களைப் பார்க்கலாம். நாங்க வாங்கி வந்த செடிகள் எல்லாம் கலந்து இருப்பதால் இப்படி ஒரு அரேஞ்ச்மெண்ட்..ஹிஹ்ஹி!!]
நம்மூர் கோழிக்கொண்டை போல இந்த சீலோஷா..மஞ்சள், சிவப்பு, பஞ்சுமிட்டாய்க்கலர் என்று பலவண்ணங்களில் சிறகை காற்றில் அசைத்து மனதை வருடின.
பளீர் என கத்தரிப்பூ மற்றும் மஞ்சள் நிறங்களில் பேன்ஸி மலர்கள்..
இரண்டு நிறங்களில் டேலியா கிழங்குகள்..படத்திலிருக்கும் பூக்கள் வருமோ இல்லை வேறு நிறப்பூக்கள் மலருமோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. விரைவில் தெரிந்துவிடும். 
வசந்தம் கடந்து கோடை வந்ததும் நடவென்று சில காய்கறி விதைகள்..இவற்றை எனது இரண்டு கால் மலர் கையிலெடுத்து குலுக்கி விளையாடிக்கொண்டே நடந்து எங்கேயோ போட்டு வைத்திருக்கிறாள்..அவற்றை முதலில் கண்டுபிடித்து எடுத்து வைக்கவேண்டும்! :) 
தொட்டிகளில் மண் நிறைத்து, செடிகளைப் பிரித்து நட்டு வாரமும் இரண்டாகிவிட்டது. மார்ச் 20ஆம் தேதி இந்த வருஷத்தின் வசந்தம் வந்தது இங்கு..நாங்கள் அதற்கும் முந்தைய ஞாயிற்றுக்கிழமையே பூச்செடிகளை நட்டாயிற்று. 
கெர்பராவில் சுகந்தம் வீசுகின்றதா என்று ஆராய்ச்சி செய்யும் எங்க வீட்டு நாலு கால் பூ!! :) [அப்பாடி...டைட்டிலுக்கு ஒரு அர்த்தம் கொடுத்தாச்சு!:)] இவரும் பூ வாங்க கடைக்கு வந்திருந்தார். வாங்கி வந்த செடிகளை ஒழுங்கா நட்டிருக்கோமா என சோதனை செய்கிறார் ஐயா!! ;) 
~~~
இன்றைய இணைப்பு 
கடந்த டிசம்பர் இறுதியில் ஒன்று முழுவதும் பூனைக்குட்டிகளும், ஒன்றில் காட்டு மிருகக் குழந்தைகளும் என்று இரண்டு கேலண்டர்கள் வாங்கினேன். ஒவ்வொரு படமும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு! லயாவின் அறைச் சுவரில் மாட்டி வைத்து தினமும் இவற்றின் முகத்தில் விழிக்கின்றோம்! :) 
அருகிலிருக்கும் நூலகத்தில் குழந்தைகள் கலர் செய்யவென்று படங்களும் க்ரேயான்களும் வைத்திருப்பார்கள். இது லயா கலர் செய்ததுன்னா நம்பவா போறீங்க??..ஹிஹி..
சின்ன வயதில் இருந்து இப்படி படங்களுக்கு வண்ணம் தீட்டுவது எனக்கு மிகப் பிடிக்கும், இப்பொழுது அதற்கு ஒரு தீனி கிட்டியிருக்கிறது. :)
~~~
இந்தப் பதிவிற்கு தலைப்பைத் தந்த பாடல்..நான் ரசித்தது, நீங்களும் ரசியுங்களேன்! :)


Thursday, February 26, 2015

பூ பூத்தாச்சு... :)

கடந்த கோடையில் புதிதாக அன்புப் பரிசு வடிவில் வீட்டுக்கு வந்த ஜாதிமல்லி ..
அரும்பு கட்டி, மொட்டாகிப் பூத்தும் விட்டாள்!! :) 
2013-ல் மூன்று நிறங்களில் வாங்கிவந்த ஜெரேனியம் மலர்களில் தங்கித் தழைத்தது இந்த ஒன்று மட்டுமே..முதல் கொத்து மலர்கள் ஆன் த வே! :) 
போன வருஷம் வாங்கிய வயோலாச் செடிகளின் விதை தானாக விழுந்து இந்த வருடம் எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை வழங்கியது. பெரிய தொட்டியில் ஓரு ஓரத்தில் இந்தம்மா இருப்பதால் அத்தொட்டியில் வேறு செடிகள் நடலாமா வேண்டாமா என மனம் அலைபாய்கிறது. கார்டன் எக்ஸ்பர்ட்ஸ்..அட்வைஸ் ப்ளீஸ்! :) 
கதவைத் திறந்த உடனே கம்மென்று அசத்தும் மணத்துடன் இந்த அழகுப்பூக்கள்..
வெய்யிலில் குளித்து அழகு வண்ணங்கள் காட்டி..
நீலவானப் பின்னணியில் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இந்தப் பூக்கள் என்ன பூக்கள்? எட்டியெட்டிப் படம்பிடித்தாலும் சைட் போஸ் மட்டுமே தெரிகின்றனவே??!
பெரிய கேமராவை வைத்துவிட்டு ஐஃபோனில் சுட்ட ஒரு படத்தில் பூ பூத்திருச்சுங்க...
இது என்ன பூ? என்பது அப்படியொன்றும் கடினமான கேள்வியில்லை..இருந்தாலும் கேட்டு வைக்கிறேன். அறிந்தோர் நேரமனுபதிப்பின், கருத்துப்பெட்டியில் பதியுங்க..பதில் கண்டபின் அடுத்த படத்தை இணைக்கிறேன். நன்றி!
எலுமிச்சை மரத்தின் மலர்கள்தான் அவை..சரியாகக் கணித்தவர்களுக்கு பழம் பழுத்ததும் ஒரு பழம் அனுப்புகிறேன். ஹிஹி...மொத்தமே 4 பிஞ்சுகள்தான் வெற்றிகரமாக வளர்ந்துவருகின்றன. இப்போது மலரும் மலர்கள் பழமானால் ஆளுக்கொரு டஜன் பழம் கூட அனுப்பிருவேன். காத்திருந்து பார்க்கலாம்..:)
நன்றி..நன்றி!

Monday, November 10, 2014

ரோஜா..ரோஜா..ரோஜாப்பூ!!

எங்கள் தொட்டித் தோட்ட ரோஜாக்கள்...ஊருக்குப் போய்வந்த பின்னர் என் கவனிப்பில் உவகை கொண்டு..
குட்டிக் குட்டிப் பூக்கள் பூத்து..
எங்களை மகிழ்விக்கின்றன. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல ரோசாக்கள் சிறியவை எனினும் எழிலுக்குக் குறைவில்லை! :)
மேலே உள்ள பூக்களின் வண்ணம் எனக்கு மிகப்பிடித்த வண்ணம்.

அடுத்து வருபவை செந்நிற ரோஜாக்கள்..2010-ஆம் ஆண்டு 99 காசுக்கு ஒரு செடி என இரு செடிகள் வாங்கிவந்தேன்..
ஆண்டுகள் நான்கு கடந்த பின்னரும் பொலிவு குறையாமல் புன்னகை புரியும் பூக்களிவை!

கதிரவனின் ஒளியில் குளித்தவாறே என் படங்களுக்கு மென்னகை புரிந்த பூக்கள்..
கடேசிப் பன்ச்..!! :))))) என் ஆல்டைம் ஃபேவரிட் மஞ்ச ரோசாஆஆஆ!
பூக்களை ரசித்துப் புன்னகைப் பூக்கள் சிந்தப்போகும் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்! :)

LinkWithin

Related Posts with Thumbnails