
பிஸ்ஸா செய்வதற்காக வாங்கிய ஒரு கேன்ட் பைனாப்பிள் துண்டுகளில் மீதி, ப்ரிட்ஜில் வெகு நாட்களாக உட்கார்ந்துகொண்டு,'என்னை ஏதாவது செய்யேன்!'ன்னு கெஞ்சிட்டு இருந்துதுங்க. மேனகா ப்ளாகில்
பைனாப்பிள் கேசரியைப் பார்த்ததுமே இதை ட்ரை பண்ணிப்பார்க்கணும்னு மனசுக்குள்ளே குறிச்சு வைச்சிருந்தேனா..ஒரு நாள்,பத்தரை-பனிரெண்டு ராகுகாலத்துல, செய்ய ஆரம்பிச்சேன்.:)
ஒரு ஸ்பூன் பட்டர்ல(கைவசம் நெய் இல்ல) முந்திரி,திராட்சை,பைனாப்பிள் துண்டுகளை வதக்கி எடுத்து வச்சுட்டு..

அதே கடாயில் 3/4 சேமியாவும், 11/2கப் கொதிநீரும்,2 துளிகள் மஞ்சள் ஃபுட் கலரும் ஊற்றி சேமியாவை வேகவைச்சேன்.(சேமியாவை வறுக்க வேணாமான்னு கேப்பீங்க..நாங்கள்லாம் மொத்தமா சேமியாவ வறுத்து ஸ்டோர் பண்ணி வச்சுக்கறது வழக்கம். அப்படி இல்லைன்னா, பொன்னிறமா சேமியாவை வறுத்துட்டு அப்புறம் வேகவைங்க.)

சேமியா வெந்ததும் 3/4 கப் சர்க்கரையை சேர்த்து கிளறுங்க. (சேமியா-சர்க்கரை ரெண்டும் ஒரே அளவுல போட்டது எங்களுக்கு இனிப்பு சரியா இருந்தது. சர்க்கரை அதிகம்/குறைவுன்னு நினைத்தா உங்க ருசிக்கேற்ப குறைக்கலாம் (அ) அதிகரிக்கலாம்)

சர்க்கரை கரைந்ததும், கேசரி இளகி அப்புறம் மெதுவா இறுக ஆரம்பிக்கும். அந்த ஸ்டேஜ்ல வறுத்து வைச்ச முந்திரி-திராட்சை-பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து,இன்னொரு ஸ்பூன் பட்டரும் சேர்த்து நல்லா கலக்கிவிடுங்க.

அவ்ளோதான்..பைனாப்பிள் சேமியா கேசரி தயார். செய்த உடனே ருசி பார்க்கும் வழக்கமும் கிடையாதா..கேசரி பாவம், என்னவர் ஆபீஸ்ல இருந்து வரவரைக்கும் தேமேன்னு வெயிட் பண்ணுச்சு.(நான் உண்மைதான் பேசுவேன் என்ற உங்க நம்பிக்கைகு நன்றி!;) )
இவரும் வழக்கம்போல டின்னர் டைமும்க்கு வீட்டுக்கு வந்தார்..வந்தவுடனே இரவு உணவும் முடிந்தது.சாப்பாடு,
முளைகட்டிய சோயாபீன்ஸ் குழம்பு,வயலட் முட்டைகோஸ் பொரியல்-ரசம்..வாங்க,சாப்பிடலாம்! :)

எனக்கு கேசரி செய்ததே மறந்துபோச்சு!அவரே கிச்சன்ல துழாவி கண்டுபிடிச்சு, பவுல்-ல போட்டுட்டும் வந்து ருசிக்க ஆரம்பிச்சார்.அதுக்கப்புறம்தான் காமெடியே!!இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்.உஸ்...அப்பாடா!!!
"ஸ்வீட் சேமியா ரொம்ப நல்லா இருக்கு!"-ன்னு போட்டாரே ஒரு போடு!! எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்றதுன்னே தெரில..:-| :-| :-| அது ஸ்வீட் சேமியா இல்லைங்க,இன்னொரு முறை கெஸ் பண்ணி,அதிலே இருக்கும் இன்கிரிடியன்ட்ஸ்-ஐ பாத்து சொல்லுங்க-ன்னு சொன்னேன். எல்லாம் பார்த்துட்டு முந்திரி இருக்கறது தெரியுது,நட்ஸ் சேமியா(!!!??)-வான்னாரு!! எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சு!! முந்திரி-திராட்சையைத் தவிர வேற எதுமே தெரிலையா சேமியா கேசரில?ன்னு கேட்டேன். ஓஹோ..இது சேமியா கேசரியா? நான் ஸ்வீட் சேமியான்னு நினைச்சிட்டேன்.சாரி!ஹிஹிஹி-ன்னாரு..
இவர்கிட்ட பதில எதிர்பார்த்து மனசை உடைச்சுக்கறதுக்கு பதிலா நாமே சொல்லிடலாம்னு இது பைனாப்பிள் சேர்த்த சேமியா கேசரிங்க-ன்னு நானே சொல்லிட்டேன்.இதுக்குள்ள 2 பவுல் கேசரி காலியாயிடுச்சு..ஆஹா,பைனாப்பிள் சேர்த்ததாலே டேஸ்ட் இன்னும் நல்லாருக்கு,அதான் ரெண்டாவது முறையும் சாப்பிட்டேன்னு சமாளிச்சிட்டார்.

நீங்களே சொல்லுங்க..இதை,இதை,இதைப் பார்த்தா ஸ்வீட் சேமியா மாதிரிதான் இருக்குதா?பைனாப்பிள் சேமியா கேசரி மாதிரி இல்லையாஆஆஆஆஆஆஆ? என்ன கொடுமைங்க இது???
~~~~~
அடுத்து இன்னொரு காமெடி..ஒருநாள் கடையிலே வெங்காயம் எடுத்துட்டு இருந்தேன்.அப்ப பக்கத்துல வந்த ஒரு வெள்ளைக்கார தாத்தா,நான் ஓரொரு வெங்காயமா பொறுக்கி எடுப்பதை பார்த்திட்டு, எப்படி நல்ல வெங்காயம்னு கண்டுபிடிக்கறே?ன்னு கேட்டார். நானும் சின்ஸியரா "வெங்காயம் தோல் உரியாததா..நல்லா பளபளப்பா, அழுகிப் போகாம இருக்கறதா எடுக்கணும்"னு சொன்னேன்.(நான் சொன்னது கரெக்டுதானே?நீங்க எல்லாரும் எப்படி வாங்குவீங்க?)

அப்படியே அரட்டை அடிச்சிட்டு, ஒரொரு வெங்காயமா எங்கிட்ட காட்டி,இது நல்ல வெங்காயமா?ன்னு கேட்டு கேட்டு அப்ரூவலும் வாங்கிட்டார். ரெட் ஆனியன்,ஒயிட் ஆனியன்,யெல்லோ ஆனியன் இதுலே எது நல்லாருக்கும்னும் கேட்டுகிட்டார். கடேசியா அந்தப்பக்கம் நகரும்போது.."எப்படி பொறுக்கி எடுத்து செலக்ட் பண்ணி வாங்கினாலும், தொண்டைக்கு கீழே போயிட்டா எல்லாமே ஒண்ணுதானே?"-ன்னு ஒரு போடு போட்டுட்டு போயிட்டார். ஒரொரு முறையும் இது நல்லவெங்காயமான்னு எங்கிட்ட கேக்கும்போது இந்த உண்மை இவருக்கு தெரிலயா? என்ன ஒரு நேரம் பாருங்க!
சரியான புன்னகை மன்னின்னு என் முகத்துல எழுதி ஒட்டிருக்கு போல!! ( புன்னகை மன்னி=புன்னகை மன்னனுக்கு பெண்பாலுங்க.:) )நரி முகத்தில முழிச்சிருக்கோம் இன்னைக்குன்னு மனசைத் தேத்திட்டு வீட்டுக்கு வந்தேன்.
~~~~~~
இப்படி சரமாரியான சம்பவங்களால் புண்பட்ட மனதை குறிஞ்சி,இண்டியன் ஸ்பைஸ் மேஜிக் இருவரும் 'வெர்ஸட்டைல் ப்ளாக்கர்' என்ற அவார்டு கொடுத்து ஆற்றிவிட்டாங்க..:):):)
மிக்க நன்றி குறிஞ்சி&இண்டியன் ஸ்பைஸ் மேஜிக்!

இந்த விருதினை,என்னைக் கவர்ந்து, என் கேமராவில் புகுந்துகொண்ட ஒரு அழகுப்பூவுடன்...

அகிலா,குறிஞ்சி,காயத்ரி,இண்டியன் ஸ்பைஸ் மேஜிக் மற்றும் என் வலைப்பூவைப் பின்தொடரும், ஒவ்வொரு பதிவுக்கும் தவறாமல் பின்னூட்டங்களிட்டு ஊக்கப்படுத்தும்,பின்னூட்டமிட நேரமில்லாமல் படித்து ரசித்துவிட்டு மட்டும் செல்லும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் வழங்குகிறேன்!
நீங்கள் தரும் மேலான ஆதரவுக்கும்,ஊக்கத்துக்கும் நன்றி கூறும் முகமாக எல்லோரும் இந்த விருதினை வழங்குகிறேன்..மறுக்காமல் பெற்றுக்கொண்டு என்னை கௌரவியுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொண்டு(அரசியல் மேடை வாசம் வருதோ?? ஓகே,ஓகே டென்ஷன் ஆவாதீங்க,உடம்புக்கு நல்லதில்ல.. முடிச்சிடறேன். :) ) இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.நன்றி,வணக்கம்!