Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Saturday, January 19, 2013

சர்க்கரைப் பொங்கல்

இதுவரை பொங்கலை ப்ரெஷ்ஷர் குக்கரில்தான் செய்திருக்கிறேன். இந்த வருடம் குக்கரில் இல்லாமல் பாத்திரத்தில் செய்வோம் என முயற்சித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. இனிப்பான பொங்கலுடன் எனக்குக் கிடைத்த இனிப்பான பரிசின் விவரங்கள் பொங்கலைத் தொடர்ந்து..

தேவையான பொருட்கள் 
பச்சரிசி - 3/4கப்
பாசிப்பருப்பு -1/4கப்
வெல்லம் - 1 அல்லது 11/2 கப் (சுவைக்கேற்ப அனுசரித்து போட்டுக்கொள்ளவும்)
ஏலக்காய்-2
முந்திரி-திராட்சை -சிறிது
நெய்- 2 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப் [விரும்பினால் சேர்க்கலாம், அல்லது நீரின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.]
தண்ணீர் - 3 கப்


செய்முறை 
பாசிப்பருப்பை வெறும் கடாயில் வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும். 

அரிசியை இரண்டு மூன்று முறை  களைந்து பருப்புடன் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். [புது அரிசி எனில் ஊறத்தேவையில்லை, என்னிடம் இருந்தது கொஞ்சம் பழைய சோனாமசூரி அரிசி! ;)]

பாலுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். பால் பொங்கியதும் ஊறிய அரிசி-பருப்பைச் சேர்க்கவும்.
மிதமான தீயில் அரிசி பருப்பு நன்கு வேகும்வரை சமைக்கவும்.

அவ்வப்போது கிளறிவிட்டு, வேகவைக்கவும். தண்ணீர் முழுவதும் வற்றி பொங்கல் நன்றாக வெந்ததும், கரண்டியால் நன்றாக மசித்துவைக்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு சூடாக்கவும். கரைந்ததும் வடிகட்டி பொங்கலில் சேர்த்து கிளறிவிடவும்.
ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி-திராட்சையைப் பொன்னிறமாக வறுத்து பொங்கலில் சேர்க்கவும். ஏலக்காயையும் பொடித்துச் சேர்க்கவும்.
சுவையான பொங்கல் தயார். பரிமாறும்போது மேலும் ஒரு ஸ்பூன் நெய்யை சூடான பொங்கல் மீது விட்டு பரிமாறவும்.
ஜலீலா அக்காவின் சமையல் அட்டகாசம் வலைப்பூவில் நடைபெற்ற பேச்சுலர் சமையல் போட்டியில் எனக்கும் ஒரு பரிசு கிடைத்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என் ஆங்கில வலைப்பூவில் இருந்து அனுப்பிய Scrambled Egg with Veggies-க்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.குறிப்பு இங்கே.
ஜலீலா அக்கா போட்டியை அழகாக நடத்தி, பங்கு பெற்ற குறிப்புகளை வகை பிரித்து, சுவைத்துப் பார்த்து பரிசுக்குரிய குறிப்புகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அழகான பரிசுகளை வழங்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் பங்குபெற்ற அனைவருக்கும் அழகான சான்றிதழ்களையும் வழங்கியிருக்கிறார்.அன்றாட வேலைப்பளுவிற்கிடையில் இத்தனை வேலைகள் செய்யும் அவரது அயராத உழைப்பு பிரம்மிப்பூட்டுகிறது. மிக்க நன்றி ஜலீலா அக்கா!

எனக்குக் கிடைத்துள்ள கற்கள் பதித்த அழகான கைப்பையைப் பார்க்க விரும்புவோர் கையை இங்கே வையுங்கள்! :))))))).

ஜலீலா அக்காவின் சென்னை ப்ளாஸா கடையில் இருந்து பரிசு மற்றும் சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் கொரியர் மூலம் கோவையில் எங்க வீட்டுக்குச் சென்று சேர்ந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

Thursday, February 2, 2012

கதம்பம்..

ஏழு காய் சாம்பார் குறிப்பை எழுதுகையில் "கதம்ப சாம்பார்" என்ற பெயர் நினைவு வரவே இல்லை..கருத்தினைத் தெரிவித்த நட்பூக்கள் சொன்னதிலிருந்து இந்த கதம்பம் என்ற வார்த்தை அடிக்கடி மனசில் அலைந்துகொண்டே இருக்கிறது. அடுத்து என்ன...மலரும் நினைவுகள்தான்!! :)

கதம்பம்..மல்லிகை(அ)முல்லை, கோழிக்கொண்டை, மரிக்கொழுந்து,மருகு, என்று வெள்ளை,சிவப்பு,பச்சை என்று மூன்று வண்ணப்பூக்களைத் தொடுத்த சரத்தைச் சொல்வோம் எங்க ஊரில்..சிலநேரங்களில் வெள்ளைநிறத்துக்கு ஒரு பூ சேர்த்திருப்பார்கள். (பெயர் நினைவு வரல..வெள்ளைவெளேர்னு முல்லை போலவே இருக்கும்,ஆனா வாசனையே சுத்த்த்த்தமா இருக்காது. என்று சொல்லிருந்தேன், பிறகு நினைவு வந்தது.. ;), "காக்கடா" என்று சொல்லுவோம். எடிட் பண்ணலாம்னு வந்தா, குறிஞ்சியும் சொல்லிருக்காங்க.. :)). கலர்ஃபுல்லாக அழகாக இருக்கும்.

பொதுவாகவே எனக்கு செடிகளில் இருந்து மல்லி,முல்லை,ஜாதிமுல்லை பூக்களை பறிப்பதும் பிடிக்கும், நெருக்கமாக சரம் தொடுக்கவும் மிகவும் பிடிக்கும். ஊரில் இருக்கையில் கட்டிய சரம் வாங்குவதை விட விடுபூ(உதிரிப்பூ) வாங்கி கட்டி(சரம் தொடுத்து) வைப்பதே வழக்கம்.

பூக்காரர் மாலை நேரங்களில் விடுபூவை பெரிய கூடைகளில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வருவார். சிறு தராசில், எடைக்கல் இல்லாமல் ஒரு ரூபாய் நாணயங்களைப் போட்டு "2 எடை(2 நாணயங்கள்) ஐந்து ரூபாய்--3 எடை பத்து ரூபாய்" இப்படி விற்பார்கள். காலை நேரம் பூச்சரங்களும், ஊட்டி(!) ரோஸ் பூக்களும் வரும்.

ஸ்கூல்/காலேஜ்/வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலும் அப்படியே போற போக்கில பூ வாங்கி வைத்துக்கொண்டு போனதுண்டு. பஸ்ஸ்டாப் பூக்காரம்மாக்கள் பூவைத் தலையில் வைக்க ஹேர்பின்( to be more precise in our slang, பூ குத்தற(!) சைடூசி! :)) ) கூட விற்பாங்க. வீடுகளில் செடிவைத்து விற்பனை(!) செய்வோர் டம்ளர் கணக்கில் விற்பாங்க.அங்கே சீக்கிரமாப் போனால்தான் பூ கிடைக்கும், இல்லன்னா அக்கம் பக்கம் இருக்கும் போட்டிக்காரிகள்(!) வாங்கிட்டுப் போயிருவாங்க. ;)

கோவையில் காந்திபுரம்-க்ராஸ்கட் ரோடு கார்னரிலும், உள்ளே லக்ஷ்மி காம்ப்ளக்ஸ்,கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் அருகிலும் நெருக்கமாகத் தொடுத்த மல்லிகைச் சரங்களை விற்பார்கள். மாலை மாதிரி அவ்வளவு நெருக்கமாகத் தொடுக்கப்பட்டிருக்கும். மல்லிகையின் இடையிடையே ப்ளாஸ்டிக்கில் வண்ணவண்ணமாக குட்டிகுட்டிப் பூக்கள் சேர்த்து கோர்க்கப்பட்ட மல்லிகைச் செண்டுகளும் கல்யாண சீஸன்ல படுவேகமா விற்பனையாகும். பட்டுச்சேலைக்கு மேட்சான கலரில் பூ கோர்த்த மல்லிகைச் செண்டு சூப்பரா இருக்கும்ல?;)

பூவை நெருக்கமாகத் தொடுத்து தண்ணீர் தெளித்து (எவர்)சில்வர் டப்பாவில் போட்டு மூடிவைத்தால், அடுத்தநாள் காலையில் சூப்பரா வைச்சுட்டுப் போலாம்..ம்ம்ம்...அது ஒரு அழகிய கனாக்காலம்!
இது இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது தொடுத்த முல்லைச்சரம்..பூவைக் கட்டி எடுத்து ஃப்ரிட்ஜில் வைச்சு வீட்டிலிருந்த எல்லாருக்கும் எடுத்தும் கொடுத்தேன்,ஆனா நான் மட்டும் வைக்க மறந்துட்டேன். இங்கே வந்து படங்களைப் பார்க்கையில்தான் நினைவுவந்தது. :)

***அப்டேட்***
யு.எஸ். மற்றும் கனடா வாழ் தமிழ்த்திருமக்களே, உங்களுக்கு மல்லிகை,முல்லைப்பூ எவ்வளவு விலையா இருந்தாலும் பரவால்லை, வாங்கியே ஆகணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, இதோ இங்கே க்ளிக்குங்க. இந்த பேன்ஸி ஃப்ளோரிஸ்ட்ஸ் மல்லி, முல்லை இப்படி பூக்கள் எல்லாமே விற்பனை செய்யறாங்க. கல்யாணம் கச்சேரி எல்லாத்துக்கும் பூ அலங்காரமும் செஞ்சு குடுக்கறாங்களாம்.....(பூ விக்கற தகவல் சரி,,,அடுத்தது எதுக்குன்றீங்களா??? ஜஸ்ட் இன் கேஸ்...ஹிஹிஹி! :))))))

~~~
புற்றுநோய் விழிப்புணர்வை எல்லாரிடமும் பரப்பும் வகையில் நேசம் அமைப்பினரும் யுடான்ஸ் திரட்டியும் இணைந்து பல்வேறு போட்டிகள் நடத்துகிறார்கள்.

இதிலே பங்குபெறுவதற்காக நம் தோழமைகள் பலரும் படைப்புக்களை அனுப்பியிருக்காங்க... வானதி- விடியல் , ஆசியா அக்கா- வலி ,சந்தனா-அனைவரும் நலமா? , ஜலீலா அக்கா -ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை, அப்பாவி தங்கமணி -- ஆசீர்வாதம், ஹுஸைனம்மா - வருமுன்காப்போம் இப்படி...ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், வருமுன் காக்கும் முயற்சிகள், வந்தபின்னர் செய்யவேண்டிய வழிமுறைகள் என்று ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் பல தகவல்ககளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இணைப்புகள் கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
~~
மீராஸ் டேலன்ட் கேலரி யில் இருந்து என் வலைப்பூவுக்கு ஒரு விருது கொடுத்திருக்காங்க.. மீராவின் வலைப்பூவில் பல்வேறு கைவேலைகளில் இருந்து வட இந்திய உணவுவகைகள் வரை பல ஸ்வாரசியமான விஷயங்கள் உண்டு.கவிதை,ஓவியம், சமையல், கைவேலை என்று பலதுறைகளில் பிரகாசிக்கும் மீராவிடம் இருந்து இந்த விருதைப் பெற்றது சந்தோஷமாக இருக்கிறது.மிக்க நன்றி மீரா!! :)

இந்த விருதினை
1.வானதி -- "வானதி'ஸ்"
2.ப்ரியா ராம் -- "ரசிக்க ருசிக்க"
3.அதிரா -- "என் பக்கம்"
4.ஏஞ்சலின் -- "காகிதப்பூக்கள்"
5.விஜி -- "விஜி'ஸ் க்ராஃப்ட்ஸ்"
இவர்களுக்கு வழங்குகிறேன். விருது பெற்ற ஐவருக்கும் வாழ்த்துக்கள்! 200க்கு குறைவான பின்தொடர்வோர்( followers) இருக்கும் உங்களுக்கு விருப்பமான வலைப்பூ தோழமைகளுடன் இந்த விருதினைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

விருதை மட்டும் குடுத்தா நல்லாருக்காதில்ல..இந்தாங்க, பீன்ஸ் கேஸரோல் & கோக்கனட் கேக்! கேஸரோல் சுத்த சைவம்..கேக்ல முட்டை சேர்த்திருக்கு. பார்த்து சாப்பிடுங்க. :)

~~
அடுத்து எங்க வீட்டுப்பக்கம் இருக்கும் ஒரு கடற்கரை..வீட்டிலிருந்து 20 நிமிட பயணதூரத்தில் இருக்கு..ஒரு புறம் மலைக்குன்றுகள், மறுபுறம் பஸிஃபிக் கடல் என்று அழகாக இருக்கும் சிறிய கடற்கரை..பலமுறை போயிருக்கிறோம்..ஒரு முறை சென்ற பொழுது கடலோரம் இருந்த உணவகம் ஒன்றில் லன்சுக்குப் போலாம் என்று நினைத்து மாலை 4 மணிக்கு சாப்பிட்டுக்கொண்டே சூரியன் கடலில் மூழ்கிய காட்சியை ரசித்தோம்..அதே நேரம் கடலோரம் நடந்துகொண்டிருந்த ஒரு போட்டோஷூட் கண்ணில் பட்டது. :)

நம்மள்லாம் கல்யாணம்னா மண்டபம் புடிச்சு,ஸ்டேஜ் டெகரேஷனுக்கு தனியா ஒரு செலவு செய்து போட்டோ எடுப்போம், இங்கே கல்யாணத்தை முடித்துவிட்டு சன்ஸெட் சமயத்தில் கடற்கரைக்கு வந்து கடலன்னையும் வானமும் இயற்கையாக சிருஷ்டித்திருந்த எழில்பொங்கும் செஞ்சாந்து நிறப் பிண்ணணியில் மணமக்கள் புகைப்படம் எடுத்துகிட்டு இருந்தாங்க...எந்த ஊர் கல்யாணமா இருந்தாலும் எப்பவுமே கல்யாணக்கூட்டத்தைப் பார்த்தாலே ஒரு சந்தோஷம்தான், இல்லீங்களா? :)
சாப்பாடு(!) முடிந்தபிறகு டிஸர்ட் ஒன்று சாப்பிட்டோம்,சூப்பரா இருந்தது..சின்னமன் ப்ரெட் புடிங்..ரொட்டித்துண்டுகளை எண்ணெயில் பொரிச்சு எடுத்து சர்க்கரை+சின்னமன் பவுடர் சேர்த்து கலந்து தருகிறார்கள். சுடச்சுட சாப்பிட சூப்பரா இருந்தது. ஆனால் கொஞ்சம் சாப்பிட்டதுமே, புடிங் ஆறியும் போகவும் திகட்ட ஆரம்பிச்சது!;) அதனால் என்ன..எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத சூரிய அஸ்தமனம் இருக்கே...அதை அனுதினமும் ரசித்தாலும் சலிக்காது எங்களுக்கு..உங்களுக்கு எப்படி? :)))))

Wednesday, November 2, 2011

இட்ஸ் பார்ட்டி டைம்! :)

இந்த வருஷ தீபாவளி வாரநாட்களில் வந்ததால் மற்றுமொரு நாளாகத்தான் கழிந்தது. வெள்ளிக்கிழமை டின்னருக்கு எல்லாரும் சந்திக்கலாம்னு முடிவு செய்து மெனு ஃபிக்ஸிங் ஆரம்பித்தோம்..பேசிப்பேசி டின்னர் லன்ச்சாகி, மெய்ன் கோர்ஸ் அபெடைஸராகி ஒரு வழியா ஆளாளுக்கு என்னென்ன ஐட்டம் செய்வது என்று முடிவானது. வெஜ்-சீஸ் பேஸ்ட்ரி வீல்ஸும் சப்பாத்தி இரண்டும் நான் செய்து கொண்டுபோனேன்.

வெஜ் பேஸ்ட்ரி வீல் ரெசிப்பி முதல்லயே போஸ்ட் பண்ணியிருக்கேன். இந்த முறை கொஞ்சம் க்ரேட்டட் செடர் சீஸ்-ஐ வெஜ் மசாலா மீது தூவி சுருட்டிவைத்தேன்,மத்தபடி அதே ரெசிப்பிதான். வியாழன் இரவே வெஜ் மசாலா செய்து, பேஸ்ட்ரி ஷீட்களில் தடவி, சீஸ் தூவி சுருட்டி, க்ளியர் ராப் பேப்பரில் wrap செய்து ஃப்ரீஸரில் வைச்சாச்சு. சப்பாத்திக்கும் மாவு பிசைந்து ப்ரிட்ஜில் வைச்சாச்சு. வெள்ளி காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடித்துட்டு சப்பாத்தி செய்து முடித்துவிட்டு...
ப்ரீஸரில் இருந்து பேஸ்ட்ரி ரோல்ஸை எடுத்து வைச்சா, அரை மணி நேரமாகியும் ரூம் டெம்பரேச்சருக்கு வராம கல்லு மாதிரியே இருக்குது. என்னடா இது வம்பாப்போச்சுன்னு கிட்னிய கசக்கிப் பிழிஞ்சு யோசிச்சு(!) ஒவ்வொரு ரோலையும் பத்திருபது செகன்ட் மைக்ரோவேவ்-ல வைச்சேன். ப்ராப்ளம் சால்வ்ட்!:)
பேஸ்ட்ரி ரோலை துண்டுகளா நறுக்கி மில்க் வாஷ் பண்ணி, bake செய்து எடுத்தாச்சு. எல்லாரும் ஒன்று சேர்ந்து பார்ட்டி நடக்கும் இடம் போய்ச் சேர்ந்தபோது மணி கிட்டத்தட்ட 3. கோபி மன்ச்சூரியன்,பேஸ்ட்ரி வீல்ஸ், டொமட்டோ சூப்,சிக்கன் சூப் இதெல்லாம் சாப்பிட்டுட்டு எல்லாரும் போக்கர் விளையாடி, எர்லி டின்னர் சாப்பிடப்போனோம்.

பட்டர் சிக்கன், சிக்கன் கோலாப்பூரி, மட்டர் பனீர், தால், ஜீரா ரைஸ், சப்பாத்தி, கேரட் ஹல்வா. எல்லாமே வடஇந்திய உணவு வகைகளாவே இருக்குன்னு யோசிக்கிறீங்களா..கரெக்ட்டுதான்! மொத்த க்ரூப்பிலும் நாங்க & இன்னொரு பேச்சலர் பையன் மூணுபேரும்தான் தமிழு..நான் இட்லி0சாம்பார் செய்து எடுத்துட்டு போலாம்னு முதல் மெனுல ப்ளான் பண்ணியது கடைசியில் பேஸ்ட்ரிவீல் &சப்பாத்தில போய் முடிந்தது.

அரட்டையடித்து, விளையாடி, போட்டோஸ் எடுத்து,மிச்சம் மீதியெல்லாம் ஆளாளுக்கு pack பண்ணிக்கொண்டு, பார்ட்டி ஹாலில் இருந்து கிளம்பும்போது பத்துமணியாகிவிட்டது.

தீபாவளி பார்ட்டி ஓவர்! :)

*********^^^^^*********
Mahi..
She is writing very nicely.
Bringing out all topic. She is also having another blog exclusively for kitchen.
But I like to read her other blog.
I like to pass this award to her.
என்று சொல்லி விஜி'ஸ் க்ராஃப்ட்ஸ் ப்ளாகில் இருந்து விஜிம்மா எனக்கு இந்த அவார்டை கொடுத்திருக்காங்க.
என் சமையல் கொடுமைய விடவும் மொக்கை கொடுமைய ரசிச்சுப் படிச்சேன்னு சொல்லவும் ஒரு ஆள் இருக்காங்கங்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு போங்க! :)))))) நன்றி விஜிம்மா! லட்டு சாப்புடுங்க. :)

எல்லாரும் ஸ்வீட் எடுங்க,கொண்டாடுங்க!! :))))[எ.கொ.ச.இ.??!! ஒரு டயலாக் ஃபேமஸ் ஆனாலும் ஆச்சு..எங்கெங்கே யூஸ் பண்ணறதுன்னு வகைதொகை இல்லாமப் போச்சு! ஹிஹி!]

Diwali Dhamaka 2011
பிக்காஸா-வில் போய் எல்லாரும் அவங்கவங்களுக்குப் பிடிச்ச ஸ்வீட்டைச் சாப்புடுங்க,நன்றி!

Friday, April 29, 2011

நன்றி!

சினேகிதி,ரேவா,காயத்ரி,அம்முமோகன் இவர்கள் என் வலைப்பூக்களுக்கு அன்பாக வழங்கிய விருதுகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, அவர்களுக்கு இந்த பச்சைப் பூவை வழங்குகிறேன்.

The meaning of flower colour in green is about renewal, growth, hope, health and youth.

இன்னும் இரண்டு படங்களையும் இணைத்திருக்கிறேன்..உங்களுக்குப் பிடித்த படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் சினேகிதி,ரேவா,காயத்ரி & அம்மு!


ரேவா -விருது வந்து பலநாள் கழித்து சொல்கிறேன்,தாமதத்தைப் பொறுத்தருள்க!:)
காயத்ரி(தாமதத்தைப் பொறுத்தருள்க!:) ) அம்முமோகன்-இவர்கள் என் இங்கிலீஷ் ப்ளாகுக்கு விருது கொடுத்திருக்கிறார்கள்,இங்கே நன்றி சொல்கிறேன்.:)
~~~~
குறிஞ்சி கதம்பம் ப்ளாக்ஸ்பாட்டில் இருந்து செய்த கேரட் சட்னி

மேனகாவின் ப்ளாகில் இருந்து இட்லிப்பொடி
கீதா ஆச்சலின் ப்ளாகிலிருந்து கைமா இட்லி
~~~
முதல் மூன்று படங்களுக்கான இணைப்புகள்
1.போனவாரம் ஒருநாள் இந்த ப்ரோக்கோஃப்ளவரை கடையில் பார்த்ததும், இதன் பச்சைவண்ணம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது,உடனே வாங்கிட்டு வந்துட்டேன்.:)
2.பிப்ரவரி 14 அன்று மும்முரமாக காரை க்ளீன் செய்துகொண்டிருந்தோம்,அப்பொழுது வானம் மிகவும் அழகாக இருந்தது. :)
3.இந்தப் பூக்கள் பெயர் தெரியவில்லை,நல்ல வாசனையாக இருக்கிறது. வாக் போகும்பொழுது சாலையோரத்தில் இந்தக்கொடிகள் படர்ந்துகிடக்கின்றன. ட்ராஃபிக் அதிகமா இருந்தாலும்,இந்தப் பூக்களின் வாசனையை நுகரவே அந்தச்சாலைக்கு அடிக்கடி செல்கிறேன். படமெடுக்க நினைக்கிறேன், கேமரா எடுத்துப்போக நினைவு இருப்பதில்லை. அதனால் கொடியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஒரு கொத்துப் பூவை பறித்துவந்து வீட்டில் வைத்திருக்கிறேன். :)


இரண்டாவது மூன்று படங்களுக்கான இணைப்புகள்
1.என்னவருக்கு கேரட் பிடிக்காது..இந்த சட்னியில் கேரட் இருப்பதே தெரியாமல் விரும்பி சாப்பிட்டார்! ;)
2.கொத்துமல்லி விதை இட்லிப்பொடி நல்ல வாசனையுடன் ருசியாக இருந்தது.
3.ஒருநாள் மாலை நேரம் சில்லி இட்லி(கைமா-ன்னா நான்வெஜ் பேர் மாதிரி இருக்கு,அதனால் சில்லி இட்லியாக்கிட்டேன்.:) ) செய்தேன்.சுடச்சுட சாப்பிட சூப்பரா இருந்தது.
~~~
என்வலைப்பூக்களுக்குக் கிடைத்த விருதுகளுக்கு..
தினமும் என் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும் இயற்கைக்கு..
ருசியான குறிப்புகளைப் பகிர்ந்த நட்புக்களுக்கு..
நான் எழுதுவதை எல்லாம் ஊக்குவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு..
இந்த நன்றிப்பதிவு உரித்தாகட்டும்!

Wednesday, April 20, 2011

டைம்பாஸ்..டைம்பாஸ்!!

போனவாரத்தில் ஒருநாள் மாலை லேப்டாப்பின் முன் உர்கார்ந்திருந்த என்னவர் திடீர்னு சிரிக்க ஆரம்பித்தார்..நான் கிச்சன்லே இருந்தேன். சிரிப்பு நிற்காமல் தொடர்ந்துகிட்டே இருக்கவும்,என்னதான் விஷயம்னு பார்த்த்தா...நீங்களும் பாருங்களேன்! :)



இதிலே வரும் மிஷ்கா என்ற நாயின் பேச்சுக்கள்-பாடல்கள் எல்லாம் யூ-ட்யூபில் கிட்டத்தட்ட 300 இருக்கிறது. டிவி-யிலும் போய் "ஐ லவ் யூ" சொல்லிட்டு வந்திருக்காம் மிஷ்கா!!

இன்னும் காமெடி என்னதுன்னா,வீடியோவில் ஆண்குரல் சொல்லச்சொல்லும்போது கண்டுக்காம இருக்கும் மிஷ்கா பெண்குரல் வந்து சொல்லும்போதுதான் பேசஆரம்பிக்கும். நம்ம ஊர்ல நாய் ஊளையிட்டா கெட்டசகுனம்னு சொல்லுவாங்க, இவிங்க வீடியோ எடுத்து விளம்பரம் பண்றாங்கப்பா!!! :))))))))))))
~~~~~
ஏ குருவி!...நினைவிருக்கா உங்களுக்கு? அதே இடத்திலே வீட்டை(கூட்டை) ரிப்பேர் பண்ணும் வேலைகள் ஆரம்பித்திருக்கு. அதே குருவிகளா,இல்ல வேற குருவிகளான்னு தெரில..படுவேகமா கன்ஸ்ட்ரக்ஷன் நடந்துகொண்டிருக்கிறது.



கீச்-கீசுன்னு குரல்கள் பகல் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கிறது.மாறி மாறி பறந்து போன குருவிகளில் இந்தக்குருவி வேற கொஞ்சம் முறைச்சுப் பார்க்கிற மாதிரி இருந்ததால் இத்தோடு நிறுத்திட்டேன். :)

~~~~
குருவி பார்த்து கழுத்துவலியே வந்திருச்சு! டயர்ட் போக ஒரு ஈஸி ஸ்னாக் சாப்பிடலாம் வாங்க. ஸ்வீட்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்,அதுக்காக எப்பவும் வீட்டிலே ஸ்டாக் வச்சுட்டே இருக்க முடியாதில்ல? அதனால் அப்பப்ப இப்படி ஒரு ஸ்வீட் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். :)

ஒரு கப் சூடான பால்ல 2 பரோட்டாவை பிச்சுப்போட்டு, தேவையான அளவு சர்க்கரையையும் போட்டு ஒரு 5 நிமிஷம் ஊறவைச்சா அம்புட்டுதான்..சுவையான ஸ்வீட்/ப்ரேக்ஃபாஸ்ட்/ஸ்னாக்(!?!!) ரெடி!!

பரோட்டா எப்பவாவது ஒருமுறைதான் செய்வேன், அதனால் அடிக்கடி கை கொடுப்பது சப்பாத்தி..அதே செய்முறை,பரோட்டாவுக்கு பதிலா சப்பாத்தி!! இதுவும் நல்லா இருக்கும்! :P

~~~~
மேனகா , அப்ஸரா ,ஜலீலாக்கா மூவரும் தந்த விருதுகளுக்கு நன்றி! நன்றியின் அடையாளமா எவ்வளவு நாளைக்கு பூக்களையே தருவது? For a change, இந்த அழகான பூக்கூடையை வழங்குகிறேன். :)
நன்றி ஜலீலாக்கா,அப்ஸரா & மேனகா

Wednesday, December 22, 2010

டாய் ஸ்டோரி

ஹாய்,ஹாய்,ஹாய்!! புதிய பதிவைப் பார்த்ததும் ஆவலாய் ஓடிவந்து படிக்கும் வாசக நேயர்களுக்கு எங்களின் அன்பான வணக்கம்!

அப்புச்சி(grandpa),குட்டி(kutti),மோக்லி(mougli), அப்பு(appu),டெட்(ted),ட்வீட்டி(tweetty),
க்ரி
ஸ்லி(grizzly), நாங்க எல்லாரும் மகிஅக்கா வீட்டுல இருக்கோம். (போட்டோல லெஃப்ட் டு ரைட் பாருங்க).

2 வருஷத்துக்கும் மேல அக்காகூடவே இருக்கறதால எங்களுக்கும் ப்ளாகில் எழுதும் பைத்தியம் தொத்திகிச்சு. அக்கா எங்கே போயிட்டாங்கன்னு கேக்கறீங்களா? ஷீ இஸ் பிஸி இன் கிச்சன்..அவிங்க வரதுக்குள்ள நைஸா ஓடியாந்திருக்கோம். :)


விஷயம் என்னான்னா காயத்ரி அக்காவும்,அகிலா அக்காவும் மகி அக்காவ ஒரு தொடர்பதிவு எழுதச்சொல்லிருக்காங்க. உங்களுக்கே தெரியும்,அக்கா கொஞ்சம் கூச்ச சுபாவின்னு.அதனால அக்காவைப் பத்தி சொல்ல நாங்க வந்திருக்கோம். காயத்ரி அக்கா என்ன சொல்லிருக்காங்கன்னா,மகி அக்காவைப் பத்தி 7 விஷயம் சொல்லணுமாம்.காதை கொஞ்சம் தீட்டிகிட்டு கேளுங்க! :)

Ted:மகி அக்கா ரெம்ப நல்லவங்க,வல்லவிங்க! (வல்லவி=வல்லவனுக்கு பெண்பால்)
அப்பு:மகி அக்கா ரெம்ப அழகா(!!) இருப்பாங்க!
அப்புச்சி:மகி இயற்கைய ரொம்ப அழகா வர்ணிக்கும்!
குட்டி:மகி அக்கா சமையல்ல பலசமயம் புலி,சில சமயம் எலி! ஹிஹி!
க்ரிஸ்லி:மகி அக்கா போட்டோ எடுக்கறதுல எப்பவுமே புலி!
மோக்லி:மகி அக்கா ஒரு மல்ட்டிபிள் பர்சனாலிட்டி..அவிங்க எழுதறதைப் பாத்து,நேர்லயும் இப்படிதான் பேசுவாங்கன்னு கற்பனை பண்ணிருந்தீங்கன்னா,நீங்க ரெம்ப பாவம்! எழுதும்போது மட்டும்,அவங்க மனதில் ஒரு ஓரமா தூங்கிட்டு இருக்க ஸ்ப்ளிட் பர்ஸனாலிட்டி சுறுசுறுப்பா எழுதும். மத்த டைமெல்லாம் அக்கா ரெம்ப அமைதி!
ட்வீட்டி:மகி அக்காக்கு மஞ்சக்கலர் புடிக்கும்,நத்தை,பறக்கிற குருவி இதெல்லாம் ரசிக்கற அழகான ரசனை இருக்குது.

அடுத்து அகிலாக்கா கொஸ்டீன்ஸ் குடுத்து ஆன்ஸர்ஸ் கேக்கிறாங்கோ.அதெல்லாம் பார்த்தா எக்ஸாம் எழுதற எபெக்ட் வருதா,ஸோ யாரையாச்சும் பாத்து காப்பி அடிச்சுடலாம்ணு நாங்கள்லாம் ப்ளான் பண்ணம். இங்கே அக்காவே கொஞ்சம் கொஸ்டின்ஸுக்கு ஆன்ஸர் பண்ணிருந்தாங்கோ..அதையும் காப்பி அடிச்சி,அவிங்க மெய்ல் பாக்ஸ்ல ட்ராப்ட்-ல வச்சிருந்த மீதி ஆன்ஸர்ஸும் காப்பி அடிச்சி இங்கே பேஸ்ட் பண்ணிட்டம்.:)

1. Are you a vegetarian or have you thought of being one?
In-spite of Born, brought-up and married in a non-vegetarian family, I am an egg eating Vegetarian.

2. Who inspired you to cook?
I started to cook all 3 meals by myself only after the marriage. Hunger was the inspiration to cook! haahaa!!! Okay,don't get tensed! My mom,m-in-law and my beloved hubby are my initial inspirations,and then the inspiration list expanded with my friends and Internet.

3. How do you celebrate Christmas or a favourite festival of your choice?
We don't do much on Christmas day..Once we forgot to buy milk, and somehow managed to get it in a gas station. Its an unforgettable experience about Christmas!:)
My favourite festival is Diwali..I would love to celebrate it with everybody in my family. Of course with lot of fireworks and sweets.

4.Do you prefer to celebrate New Year's Eve with friends and/or family to ring in the New Year quietly and privately at home?
Back home,New Years were quite and private..I always get a new dress for the new year. Since it comes in between the month of Markazhi, I used to go to the temple early in the morning...those are good old days!! Now we are going to see fireworks and having get-to-gathers with the friends around.

5.If someone were to ask you to bring a dessert to a party,what would you bring? Store-bought or home made?If you were to make at home,what would you make?
I never liked the store bought (Indian) desserts here,so will make it at home only..the choices will be gulab-jamoon,kesari,ras malai,or some cakes.

6.How will you celebrate your next birthday?
Haven't thought about it yet! Like last year it will be quite and private.:) We will go to the temple and have dinner outside.

7.Do you have a New Year resolution and will you be sticking to it?
Nope..I haven't had any resolutions so far.Its better not to take it than brake it.

இவ்ளோதாங்க டைப் பண்ணி வச்சிருந்தாங்கோ.ஆன்ஸர்ஸ் எல்லாம் எப்பூடி இருக்கு? சூப்பரா இருக்குல்ல? மகி அக்கா ஆல்வேஸ் ராக்ஸ்,யூ நோ??

இவ்ளோ நேரமா போராடி(!!) அக்கா பண்ணிய குக்கீ!! எல்லாரும்*** சுத்தி,கடப்பாரை,வெடிமருந்து இதெல்லாம் ரெடியா எடுத்துட்டு பிஸ்கட் சாப்புட வாங்கோஓஓஓஓ! :) :) :)))))

மகி அக்கா கொடுமை போதாதுன்னு இப்ப எங்க கொடுமையையும் பொறுமையா படிச்சதுக்கு டாங்க்ஸ்!

ஜெய்லானி
அண்ணா

அப்பாவி தங்கமணியக்கா
என்றென்றும் 16-பானுஅக்கா
பாலாஜி சரவணன் அண்ணா
வானதியக்கா
சிவா அண்ணா
ஜலீலா ஆன்டி
ஸாதிகா ஆன்டி
(ஆன்டீஸ்,கோபப்படாதீங்க,நீங்க மகியக்காவுக்குதான் அக்கா,எங்களுக்கு ஆன்ட்டி!ஹிஹி)
இவங்களை எல்லாம் இந்தப் பதிவைத் தொடருமாறு அன்போடு கேட்டுக்கொண்டு,அட்வான்ஸா இந்த அவார்டையும் வழங்கிவிட்டு விடைபெறுகிறோம்.
இப்ப நம்மள்லாம் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டமல்ல?உங்கள விட்டுட்டு எங்களால இருக்க முடியாது,இனிமேல் நாங்க அடிக்கடி வருவோம்,(ஜாக்கிரதை!) நன்றி!
_()_ _()_ _()_

**** அந்த இடத்தில கொஞ்சம் ஸ்பேஸ் வெள்ளையா இருக்கும்,அதை ஹைலைட் பண்ணிப் படியுங்கோ. ஜெய் அண்ணாவோட கழுக்குக்கண்ணுக்கே இது தெரிலன்னா,வேற யாருக்குமே தெரியாது,அதனாலே சஸ்பென்ஸை உடைச்சாச்ச்ச்ச்ச்ச்ச்! :)

Friday, December 10, 2010

பைனாப்பிள் சேமியா கேசரி,பல்பு & விருது

பிஸ்ஸா செய்வதற்காக வாங்கிய ஒரு கேன்ட் பைனாப்பிள் துண்டுகளில் மீதி, ப்ரிட்ஜில் வெகு நாட்களாக உட்கார்ந்துகொண்டு,'என்னை ஏதாவது செய்யேன்!'ன்னு கெஞ்சிட்டு இருந்துதுங்க. மேனகா ப்ளாகில் பைனாப்பிள் கேசரியைப் பார்த்ததுமே இதை ட்ரை பண்ணிப்பார்க்கணும்னு மனசுக்குள்ளே குறிச்சு வைச்சிருந்தேனா..ஒரு நாள்,பத்தரை-பனிரெண்டு ராகுகாலத்துல, செய்ய ஆரம்பிச்சேன்.:)

ஒரு ஸ்பூன் பட்டர்ல(கைவசம் நெய் இல்ல) முந்திரி,திராட்சை,பைனாப்பிள் துண்டுகளை வதக்கி எடுத்து வச்சுட்டு..
அதே கடாயில் 3/4 சேமியாவும், 11/2கப் கொதிநீரும்,2 துளிகள் மஞ்சள் ஃபுட் கலரும் ஊற்றி சேமியாவை வேகவைச்சேன்.(சேமியாவை வறுக்க வேணாமான்னு கேப்பீங்க..நாங்கள்லாம் மொத்தமா சேமியாவ வறுத்து ஸ்டோர் பண்ணி வச்சுக்கறது வழக்கம். அப்படி இல்லைன்னா, பொன்னிறமா சேமியாவை வறுத்துட்டு அப்புறம் வேகவைங்க.)
சேமியா வெந்ததும் 3/4 கப் சர்க்கரையை சேர்த்து கிளறுங்க. (சேமியா-சர்க்கரை ரெண்டும் ஒரே அளவுல போட்டது எங்களுக்கு இனிப்பு சரியா இருந்தது. சர்க்கரை அதிகம்/குறைவுன்னு நினைத்தா உங்க ருசிக்கேற்ப குறைக்கலாம் (அ) அதிகரிக்கலாம்)
சர்க்கரை கரைந்ததும், கேசரி இளகி அப்புறம் மெதுவா இறுக ஆரம்பிக்கும். அந்த ஸ்டேஜ்ல வறுத்து வைச்ச முந்திரி-திராட்சை-பைனாப்பிள் துண்டுகளை சேர்த்து,இன்னொரு ஸ்பூன் பட்டரும் சேர்த்து நல்லா கலக்கிவிடுங்க.
அவ்ளோதான்..பைனாப்பிள் சேமியா கேசரி தயார். செய்த உடனே ருசி பார்க்கும் வழக்கமும் கிடையாதா..கேசரி பாவம், என்னவர் ஆபீஸ்ல இருந்து வரவரைக்கும் தேமேன்னு வெயிட் பண்ணுச்சு.(நான் உண்மைதான் பேசுவேன் என்ற உங்க நம்பிக்கைகு நன்றி!;) )

இவரும் வழக்கம்போல டின்னர் டைமும்க்கு வீட்டுக்கு வந்தார்..வந்தவுடனே இரவு உணவும் முடிந்தது.சாப்பாடு,முளைகட்டிய சோயாபீன்ஸ் குழம்பு,வயலட் முட்டைகோஸ் பொரியல்-ரசம்..வாங்க,சாப்பிடலாம்! :)

எனக்கு கேசரி செய்ததே மறந்துபோச்சு!அவரே கிச்சன்ல துழாவி கண்டுபிடிச்சு, பவுல்-ல போட்டுட்டும் வந்து ருசிக்க ஆரம்பிச்சார்.அதுக்கப்புறம்தான் காமெடியே!!இருங்க கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன்.உஸ்...அப்பாடா!!!

"ஸ்வீட் சேமியா ரொம்ப நல்லா இருக்கு!"-ன்னு போட்டாரே ஒரு போடு!! எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்றதுன்னே தெரில..:-| :-| :-| அது ஸ்வீட் சேமியா இல்லைங்க,இன்னொரு முறை கெஸ் பண்ணி,அதிலே இருக்கும் இன்கிரிடியன்ட்ஸ்-ஐ பாத்து சொல்லுங்க-ன்னு சொன்னேன். எல்லாம் பார்த்துட்டு முந்திரி இருக்கறது தெரியுது,நட்ஸ் சேமியா(!!!??)-வான்னாரு!! எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சு!! முந்திரி-திராட்சையைத் தவிர வேற எதுமே தெரிலையா சேமியா கேசரில?ன்னு கேட்டேன். ஓஹோ..இது சேமியா கேசரியா? நான் ஸ்வீட் சேமியான்னு நினைச்சிட்டேன்.சாரி!ஹிஹிஹி-ன்னாரு..

இவர்கிட்ட பதில எதிர்பார்த்து மனசை உடைச்சுக்கறதுக்கு பதிலா நாமே சொல்லிடலாம்னு இது பைனாப்பிள் சேர்த்த சேமியா கேசரிங்க-ன்னு நானே சொல்லிட்டேன்.இதுக்குள்ள 2 பவுல் கேசரி காலியாயிடுச்சு..ஆஹா,பைனாப்பிள் சேர்த்ததாலே டேஸ்ட் இன்னும் நல்லாருக்கு,அதான் ரெண்டாவது முறையும் சாப்பிட்டேன்னு சமாளிச்சிட்டார்.

நீங்களே சொல்லுங்க..இதை,இதை,இதைப் பார்த்தா ஸ்வீட் சேமியா மாதிரிதான் இருக்குதா?பைனாப்பிள் சேமியா கேசரி மாதிரி இல்லையாஆஆஆஆஆஆஆ? என்ன கொடுமைங்க இது???
~~~~~
அடுத்து இன்னொரு காமெடி..ஒருநாள் கடையிலே வெங்காயம் எடுத்துட்டு இருந்தேன்.அப்ப பக்கத்துல வந்த ஒரு வெள்ளைக்கார தாத்தா,நான் ஓரொரு வெங்காயமா பொறுக்கி எடுப்பதை பார்த்திட்டு, எப்படி நல்ல வெங்காயம்னு கண்டுபிடிக்கறே?ன்னு கேட்டார். நானும் சின்ஸியரா "வெங்காயம் தோல் உரியாததா..நல்லா பளபளப்பா, அழுகிப் போகாம இருக்கறதா எடுக்கணும்"னு சொன்னேன்.(நான் சொன்னது கரெக்டுதானே?நீங்க எல்லாரும் எப்படி வாங்குவீங்க?)
அப்படியே அரட்டை அடிச்சிட்டு, ஒரொரு வெங்காயமா எங்கிட்ட காட்டி,இது நல்ல வெங்காயமா?ன்னு கேட்டு கேட்டு அப்ரூவலும் வாங்கிட்டார். ரெட் ஆனியன்,ஒயிட் ஆனியன்,யெல்லோ ஆனியன் இதுலே எது நல்லாருக்கும்னும் கேட்டுகிட்டார். கடேசியா அந்தப்பக்கம் நகரும்போது.."எப்படி பொறுக்கி எடுத்து செலக்ட் பண்ணி வாங்கினாலும், தொண்டைக்கு கீழே போயிட்டா எல்லாமே ஒண்ணுதானே?"-ன்னு ஒரு போடு போட்டுட்டு போயிட்டார். ஒரொரு முறையும் இது நல்லவெங்காயமான்னு எங்கிட்ட கேக்கும்போது இந்த உண்மை இவருக்கு தெரிலயா? என்ன ஒரு நேரம் பாருங்க!

சரியான புன்னகை மன்னின்னு என் முகத்துல எழுதி ஒட்டிருக்கு போல!! ( புன்னகை மன்னி=புன்னகை மன்னனுக்கு பெண்பாலுங்க.:) )நரி முகத்தில முழிச்சிருக்கோம் இன்னைக்குன்னு மனசைத் தேத்திட்டு வீட்டுக்கு வந்தேன்.
~~~~~~
இப்படி சரமாரியான சம்பவங்களால் புண்பட்ட மனதை குறிஞ்சி,இண்டியன் ஸ்பைஸ் மேஜிக் இருவரும் 'வெர்ஸட்டைல் ப்ளாக்கர்' என்ற அவார்டு கொடுத்து ஆற்றிவிட்டாங்க..:):):)
மிக்க நன்றி குறிஞ்சி&இண்டியன் ஸ்பைஸ் மேஜிக்!

இந்த விருதினை,என்னைக் கவர்ந்து, என் கேமராவில் புகுந்துகொண்ட ஒரு அழகுப்பூவுடன்...

அகிலா,குறிஞ்சி,காயத்ரி,இண்டியன் ஸ்பைஸ் மேஜிக் மற்றும் என் வலைப்பூவைப் பின்தொடரும், ஒவ்வொரு பதிவுக்கும் தவறாமல் பின்னூட்டங்களிட்டு ஊக்கப்படுத்தும்,பின்னூட்டமிட நேரமில்லாமல் படித்து ரசித்துவிட்டு மட்டும் செல்லும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் வழங்குகிறேன்!

நீங்கள் தரும் மேலான ஆதரவுக்கும்,ஊக்கத்துக்கும் நன்றி கூறும் முகமாக எல்லோரும் இந்த விருதினை வழங்குகிறேன்..மறுக்காமல் பெற்றுக்கொண்டு என்னை கௌரவியுங்கள் என்று பணிவன்புடன் கேட்டுக்கொண்டு(அரசியல் மேடை வாசம் வருதோ?? ஓகே,ஓகே டென்ஷன் ஆவாதீங்க,உடம்புக்கு நல்லதில்ல.. முடிச்சிடறேன். :) ) இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.நன்றி,வணக்கம்!

LinkWithin

Related Posts with Thumbnails