Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Tuesday, January 15, 2019

பொங்கல் நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!


புதிய ஆரம்பங்கள்..இந்த வருடத்தில் இந்தச் சிறுநாற்றுகள் செழித்து வளர்ந்து விரைவில் உங்களைச் சந்திக்க இங்கே வரவேண்டும் என்ற நம்பிக்கையோடு தைமகளுக்கு வரவேற்பு! :) 
நன்றி! 

Tuesday, November 6, 2018

தீபாவளி நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 

முறுக்கு, ரிப்பன் பக்கோடா, காலா ஜாமூன் & மைசூர்பாகுடன் எங்க வீட்டு தீபாவளி! :) 

Monday, January 16, 2017

பொங்கல் 2017

இந்த வருஷ பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள்...!  


கோலங்கள் கோவையில் அம்மா வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் போடப்பட்டவை. வாட்ஸப் உபயத்தில் சுடச்சுட அமெரிக்கா வந்த கோலங்கள் இப்ப இங்கேயும் வந்தாச்சு! :) 
~~~~~
அறுவடைத் திருநாளுக்கு எங்க வீட்டுத் தோட்ட அறுவடை..கத்தரிக்காய், ப்ரோக்கலி, எலுமிச்சை,  ஒரு தக்காளி, இரண்டு குட்டிப் பழ மிளகாய்கள்! :)))  + சர்க்கரைப் பொங்கல் & வெண்பொங்கல்!  
சாமி கும்பிடும் குட்டிச்சாமி!! ;) 
 நீங்க எல்லாரும் சந்தோஷமா பொங்கல் கொண்டாடி இருப்பீங்க என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கலாம்..நன்றி! 

Saturday, December 31, 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
2016-ன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மறக்க முடியாத ஒவ்வொரு நிகழ்வை வழங்கி விடைபெற்று கொண்டிருக்கின்றன.  இன்னும் சில மணி நேரங்களில் புது வருடம் பிறக்க இருக்கிறது.

இறுதி மாதம் குளிர்-மழையுடன் உடல்நலக் குறைவையும் துணைக்கு அழைத்து வந்து வைத்துக்கொண்டதால், வலைப்பக்கம் வந்து பகிர்ந்து கொள்ள விஷயங்கள் நிறைய இருந்தாலும் வர முடியவில்லை.

ஆக மொத்தத்தில் 2016 ஒரு மறக்க முடியாத வருடமாக, சந்தோஷங்கள் - ஏமாற்றங்கள் - ஆச்சரியங்கள், புது வரவுகள், விருந்தினர்கள், தவிப்புகள், கோபங்கள் என்று எல்லாம் நிறைந்த  ஆண்டாகக் கழிந்து நிறைவு பெற இருக்கின்ற இவ்வேளையில் வருகின்ற ஆண்டு அனைவருக்கும் அளவில்லா நன்மைகளையும், உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரவேண்டும் என்ற வேண்டுதலுடன் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! 

Tuesday, April 14, 2015

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Tuesday, January 13, 2015

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

இங்கு வருகை தரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய தைப்பொங்கல் நன்னாள் நல்வாழ்த்துக்கள்!
~~~

ஐந்து நீண்ட வருடங்களைக் கடந்து,
ஆறாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் வேளை இது!
அவ்வப்போது சோர்ந்தாலும், ஓய்ந்து விடாமல் மீண்டு வந்து
உங்களையெல்லாம் விடாமல் நச்சரிக்கும்;):)
தெம்பைத்தந்த ஆண்டவனுக்கு நன்றிகள்!
அலுக்காமல் சலிக்காமல் என் பதிவுகளை வாசித்து
மறக்காமல் கருத்துக்கள் பதிக்கும்
நட்பூக்களுக்கும்
நேரமில்லாத காரணத்தால் படித்துவிட்டுப்
பறக்கும் நட்பூக்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்!
நீங்கள் இல்லாமல் இந்த வலைப்பூ இல்லை..
இங்கே உங்கள் வருகை இல்லாமல்
என் வருகையும் இல்லை..
புத்துணர்ச்சியுடன் வலைப்பூவுலகில் வலம் வர வாய்ப்பளிக்கும் வாசகர்களே,
உங்களனைவருக்கும் நன்றி, நன்றி, நன்றி!
~~~

Wednesday, December 31, 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பிறக்கும் 2015 அனைவருக்கும் நன்மை பயப்பதாக அமைய வாழ்த்துக்கள்! 


தத்தித் தத்தித் தளர்நடை போடும் தங்கப்பாப்பாவுடன் எங்கள் வாழ்க்கையும் இந்த வருடம் வேகம் எடுக்கிறது! :) 
புத்தாண்டைக் கொண்டாடுங்கள்..மீண்டும் சந்திப்போம், நன்றி!


Wednesday, December 24, 2014

ஹேப்பி ஹாலிடேஸ்!

கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்!!
பெரும்பாலான நாட்களில் இப்படிப் பளிச்சென, நீலப்புடவையில் வெள்ளை மேக டிஸைனுடன் :) :) மின்னும் எங்களூர் வானம்..
கடந்த சில பல நாட்களாக அழுக்குச் சேலை போல சாம்பல் நிறத்தில் அழுது வடிந்தது. 
வானிலை அறிவிப்பில் என்ன சொல்கிறார்கள் என்று பக்க்க்க்கத்தில் நின்று பார்க்கும் எங்க வீட்டு வெண்மேகம்! ;) 
அறிவிப்பில் சொன்னபடி வானம் சில நாட்கள் பொத்துக்கொண்டு ஊற்றியது..
பெரும் மழை இங்கு- என்று சொல்ல முடியாவிட்டாலும்..

சூரியனின் முகம் பார்க்காமலே கழிந்தன தினங்கள்..
வான் ஒழுகியதில், என் மகளின் மூக்கிலும் அருவி கொட்ட, எங்கள் தினங்கள் இன்னும் சுவாரசியமாகக் கழிந்தன. கிறிஸ்மஸும் வந்துவிட்டது. :)
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..ஹேப்பி ஹாலிடேஸ்! புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல நேரம் அனுமதிக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறோம். நன்றி!!



Saturday, December 6, 2014

கார்த்திகை தீபம் & கோலங்கள்

அனைவருக்கும் திருக்கார்த்திகை தீப வாழ்த்துக்கள்! 

தீபங்களால் அலங்கரிக்கத் தயாராய்க் கோலங்கள்..
~~~ 
பொதுவாக எங்க வீடுகளில் பொரி உருண்டை செய்யும் வழக்கம் இல்லை. தீபத்துக்கு வீடெல்லாம் சுத்தம் செய்து மெழுகிவிட்டு, மாலையில் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று இரண்டு விளக்குகளை ஏற்றிவைத்து சாமி கும்பிட்டுவிட்டு வந்து வீட்டில் கோலமிட்டு விளக்குகள் வைத்து அலங்கரிப்போம். வாசல் கோலத்தில், வாசற்படிகளில், திண்ணையில், அம்மிக் கல், ஆட்டுக்கல், உரல், கிணறு இப்படி எல்லா இடங்களிலும் விளக்குகள் வைப்போம்.
இந்தப் பொரி உருண்டை  தோழி ப்ரியா ராம்  வீட்டிலிருந்து அனுப்பியது. எல்லோரும் எடுத்துக்கோங்க.. :)
~~~~
இந்தக் மாக்கோலங்கள் அம்மா வீட்டிலிருந்து...
 11 புள்ளி, இடைப்புள்ளி 6 வரை..
15 புள்ளி, இடைப்புள்ளி 8 வரை..
வெளி வாசலில் உள்ள கோலம், 15 புள்ளி-இடைப்புள்ளி 8 வரை..
 15புள்ளி, நேர் புள்ளி 1 வரை..
5 புள்ளி, நேர் புள்ளி 1 வரை.. 
கோலம் போட்டு முடித்த பின்  அக்கா இடைப்புள்ளிகள் வைத்திருக்கிறார். அதனால் புதிதாகப் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் குழம்பும். முடிந்தால் நாளை இடைப்புள்ளிகள் இல்லாமல் (பேப்பரில் வரைந்து) இணைக்கப்பார்க்கிறேன். 
இந்தக் கோலம் 5, 7,9,11 என ஒற்றைப்படை எண்களில் விரிவாக்கிக்கொண்டே போகலாம். :) 
7 புள்ளி-3 வரிசை, நேர் புள்ளி 1 வரை.  
ஏழு வரிசைப் புள்ளிகளில் இரண்டாம் வரிசையில் இரண்டு புறமும் ஒரு புள்ளி மட்டும் வைத்துக்கொள்ளவும். இந்தக்கோலமும் ஒற்றைப்படை எண்களில் விரிவாக்கிக்கொண்டே போகலாம்.  இக்கோலம் சேலை முந்தானை போல வடிவம் எனத்தோன்றும் எனக்கு! :) 
என் அக்கா சிவில் எஞ்சினியர், வெகு அழகாக எழுதுவார், அழகாக வரைவார், கோலங்களும் அழகாகப்  போடுவார், அதற்கு சான்று இந்தக் கோலங்களே! இந்தப் பூக்கள் இலைகள் கொண்ட பார்டர் எனக்கு ரொம்பப் பிடித்தது. :) 
~~~
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இன்றைய பதிவு அதே தான்..!! :) 
அம்மா வீட்டிலும், மாமியார் வீட்டிலும் இருந்து வந்த படங்களின் உபயத்தால் இன்று இன்னொரு பதிவு.. இந்தப் படங்கள் யாவும் (எனது) காலையில் வாட்ஸ்ஸப்பில் வந்தவை. ஹி..ஹி..ஹி! ;)
 ~~~
ஏற்கனவே ஒரு முறை இந்தப் பாடலைப் பகிர்ந்திருந்தாலும்...இன்றைய பதிவுக்குப் பொருத்தமானதாலும், எனக்குப் பிடித்த பாடல் என்பதாலும் மீண்டுமொருமுறை...
தீபங்கள் பேசுகின்றன.. :) :) :) 


Saturday, November 15, 2014

இந்த நாள், இனிய நாள்...!!

இன்றைக்குச் சரியாக 365 நாட்களுக்கு முன்பாக..
எங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் வசந்தம் வீச..
 கை-கால் முளைத்த ரோஜாப்பூச்செடி ஒன்று கையில் கிடைத்தது!

இளஞ்சிவப்பு நிறத்தில், தலைகொள்ளா முடியோடு, பவள நிற உதடுகளோடு 
எங்கள் தேவதை காலை 9.45 மணிக்கு எங்களை ஆசீர்வதிக்க முதல் குரலெழுப்பினாள்! :)
இன்னொரு அப்பாவும் அம்மாவும் இந்த உலகத்தில் பிறந்தனர்! :) :) 

நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிகளாகி, மணிகள் நாட்களாகி
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் பன்னிரண்டும் கடந்துவிட்டன இன்று!
கைக்குள் அடங்கிக் கிடந்த முல்லைப்பூ இன்று வீடெங்கும் தவழ்ந்து வாசம் வீசுகிறது!

எங்கள் வாழ்விற்கு அனுதினமும் புதுப்புது அர்த்தங்களைப் புரியவைக்க வந்த என் மகளே, 
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு பல்லாயிரத்தாண்டு நீ நலம் வாழ்கவே! 


இந்த வலைப்பூவுக்கு வருகைதரும் அன்புள்ளங்கள் தம் அன்பான ஆசிகளை, வாழ்த்துகளை லயாவிற்கும் லயாவின் குடும்பத்தினருக்கும் தருவீர்கள் என்றுணர்ந்து எங்கள் உள்ளத்தினின்றும் இப்பொழுதே நன்றிகள் நவில்கிறோம் அனைவருக்கும்!  
பிறந்தநாள் விழாவிலிருந்து ஐஸ்க்ரீம் கேக்...ருசியுங்கள்! 
:)
நன்றி! 

Monday, January 13, 2014

புத்தாண்டு-புகைப்படத்தொகுப்பு..


புது வருடத்தில் கோயிலுக்குப் போகலாம் என எண்ணி, பலநாள் தவணையாக இருந்த ஒரு கோயிலுக்குப் போயிருந்தோம். அங்கு எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு! வீட்டிலிருந்து அரைமணி நேரப் பயண தூரத்திலே இருந்தும், என்னவர் தினமும் இதே வழியிலேயே அலுவலகம் சென்றும், இந்த ஸ்வாமிநாராயண் மந்திருக்குச் செல்ல எங்களுக்கு நான்கு வருடங்கள் பிடித்திருக்கின்றன. :) சரி வாருங்கள், என் பார்வையில் கோயிலை ஒரு சுற்று வரலாம்! 
ஶ்ரீ ஸ்வாமி நாராயண் என்பவர் ஒரு விஷ்ணு பக்தர், ஞானஷ்யம் பாண்டே என்ற பெயரில் உத்தர்ப்ரதேஷ் மாநிலத்தில் பிறந்து சிறு வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேறி, 7 வருடங்கள் இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து குஜராத் மாநிலத்தில் கோயில் அமைத்தவர். அவரது இயக்கம் BAPS (Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha)  என்ற பெயரில்  பல இடங்களில் வேர்விட்டுப் பரவியிருக்கிறது. குஜராத், நியூடெல்லியில் மிக பிரம்மாண்டமான ஆலயங்கள் உள்ளன. இது மட்டுமில்லாமல் லண்டன், ஹூஸ்டன், ஷிகாகோ, அட்லாண்டா போன்ற இடங்களிலும் இவரது கோயில்கள் உள்ளன.  சலவைக்கற்களாலும், க்ரானைட் கற்களாலும் இழைத்து அழகழகான சிற்பங்களுடன் பார்த்த விழி பூத்துப்போகும்படி அழகான கட்டக்கலையுடன் மிளிர்கிறது இந்தக்கோயில். 

பார்க்கிங் லாட்-ல் காரை நிறுத்திவிட்டு வருகையில் முதலில் நம்மை எதிர்கொள்கிறது "ஹவேலி" என்ற பெயருடன் விசிட்டர் சென்டர்! கட்டிடத்தின் உள்ளேயும் கேரளத்தில் மரவேலைப்பாடுகளை நினைவுபடுத்தும் நுணுக்கமான சிற்பங்களுடன் உள்ளது. இங்கே அழகிய சிற்பங்கள், கைவினைப்பொருட்கள், மற்றும் இந்திய மளிகைப் பொருட்கள், இனிப்புகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.  


இங்கிருந்து நாங்கள் வாங்கிவந்தது ஒரு யானையும், பூந்தி லட்டுவும்! லட்டு காலியாகிட்டதால் யானையார் மட்டும் உங்களைக் காண வந்துள்ளார்! :)

ஶ்ரீ ஸ்வாமி நாராயண் மந்திர் - பளிங்காலும் க்ரானைட் கற்களாலும் இழைத்து கட்டப்பட்ட கோயிலின் முன்னால் நட்சத்திரவடிவில் ஒரு செய்குளம் உள்ளது. அவ்வப்போது நீரூற்றுகள் நட்சத்திரக்குளத்தில் ஆங்காங்கே எழுந்து நடனமாடி அமைதியாகின்றன. நாங்கள் சென்றது ஒரு பொன்மாலைப் பொழுதாகப் போனதால் நிறையப் படங்கள் எடுக்கும்முன் இருள் கவிழ்ந்துவிட்டது.
இருளானாலும் விளக்கு வெளிச்சத்தில் கோவில் தகதகவென ஜொலித்தது.  படிகளில் ஏறி கோவிலின் உள்ளே நுழைகையிலேயே, "ப்ளீஸ் மெய்ன்டெய்ன்  சைலன்ஸ்" என்ற பலகைகள் வரவேற்கின்றன. உள்ளேயும் ஆங்காங்கே "சைலன்ஸ் ப்ளீஸ்" என்ற போர்டுகளைப் பிடித்தவண்ணம் ஆட்கள் நிற்கிறார்கள். ஆனாலும் நம்மூர் ஆட்களை கன்ட்ரோல் செய்ய இயலுமா? ;)

ஸ்வாமி நாராயண் அவர்களின் திருவுருவங்கள், ராதா-கிருஷ்ணர், ராமர்-சீதை-லக்‌ஷ்மணர், சிவன் - பார்வதி இவர்களையெல்லாம் தரிசித்துவிட்டு, கோயிலினுள்ளே உள்ள சிற்பங்களை வாயைப் பிளந்து பார்த்துவிட்டு,  உடன்வந்த இரண்டு நண்பர் குடும்பத்துடனும் இருட்டுக்குள்ளேயே ஃபோட்டோஷூட்-ஐ முடித்துவிட்டு கிளம்பினோம்.
விசிட்டர் சென்டர் அருகிலேயே உணவகம் இருக்கிறது. பூண்டு-வெங்காயம் சேர்க்காத உணவுகள் குறைந்தவிலையில் விற்பனை செய்கிறார்கள்.  நீளமான க்யூவில் நின்று பராத்தா, பனீர் கறி, கமன் டோக்ளா, ஸ்வீட், லஸ்ஸி, ஃப்ரைட் ரைஸ் என்று ஆளுக்கொரு ப்ளேட் வாங்கி ருசித்துவிட்டு, லட்டும் யானையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினோம். ஆக மொத்தத்தில் புத்தாண்டு ஒரு புதிய விதமான கோயிலில் துவங்கியிருக்கிறது. :) 
~~~
இந்தக் கோயில் மாலிபு பாலாஜி கோயில்! கிறிஸ்துமஸ் அன்று சென்றிருந்தோம், அழகாக வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தார்கள். என்னவர் எடுத்த படத்தை உபயோகிக்காமல் இருந்தால் எப்படி? மஹி'ஸ் ஸ்பேஸ்னு பேரடிச்சு பப்ளிஷும் பண்ணிட்டேன்! ;)
~~~
Holliday Bakes, Butter Biscuit & Coconut Biscuit
எல்லாரும் எடுத்துக்குங்க, அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! 

பி.கு. ஸ்வாமி நாராயண் மந்திர் பற்றிய மேலதிகத்தகவல்கள் அறியவிரும்பினால் அங்கேயே இரண்டு இடங்களில் இணைப்பு கொடுத்திருக்கிறேன், க்ளிக் செய்து பார்க்கவும்.  நன்றி! 

Tuesday, December 24, 2013

வாழ்த்துக்கள்!

மலரப்போகும் 2014 அனைவருக்கும் நலம்-வளம்-மகிழ்ச்சியை அனுதினமும் அள்ளி வழங்க எங்களின் இனிய வாழ்த்துக்கள்!
~~
Wish You All a Very Happy New Year! 
~~


கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் இயேசு பாலன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
~~

LinkWithin

Related Posts with Thumbnails