Showing posts with label ரசித்த பாடல்கள். Show all posts
Showing posts with label ரசித்த பாடல்கள். Show all posts

Monday, June 15, 2015

மலரும் நினைவுகள் - சிறுவர், சிறுமியர் பாடல்கள்


வெகுநாட்கள் முன் டைப் செய்து வைத்திருந்த பதிவு..வெளியிடும் நேரம் இன்றுதான் வாய்த்திருக்கிறது. படித்துப்பார்த்து உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்! :) 
~~~
ஆனை  ஆனையாம்
அழகர் ஆனையாம்
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனையாம்
கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனையாம்
காவிரித் தண்ணிய கலக்கும் ஆனையாம்
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்
~~~
காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டா
காடைக்குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக்கிளியே பழம் கொண்டா
உத்தமராஜா என் கண்ணே
பத்தரை மாற்று பசும்பொன்னே
இன்னும் பாட்டுப் பாடிடுவேன்
கேட்டுக்கொண்டே உறங்கிடுவாய்!
~~~
காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு முட்டாயாம்
ஏண்டியக்கா அழுகறே..
காஞ்சீபுரம் போகலாம்..
கட்டு முட்டாய் வாங்கலாம்..
பிட்டுப் பிட்டுத் தின்னலாம்..
~~~
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு..
சாயக்கிளியே சாய்ந்தாடு
குத்து விளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு..
மயிலே குயிலே சாந்தாடு...
மாடப்புறாவே சாய்ந்தாடு...
மணிப்புறாவே சாய்ந்தாடு! 
~~~
கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு..
~~~
************* இதுவரை உள்ள பாடல்கள் சிறு குழந்தைகளுக்கு (ஐ மீன்  லயா வயதுக் குழந்தைகளுக்குப் பாடுவது! :)) பிறந்தது முதல் பாடும் பாடல்கள் நிறைய உண்டு. இப்போதைக்கு நினைவில் உள்ளவை இவை மட்டுமே..சிறுகச் சிறுக கிடைக்கும் பாடல்களை எல்லாம் பதிந்து வைக்கும் ஆசையுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.***********
அடுத்து வரும் பாடல்கள் பள்ளிப்பருவத்துப் பாடல்கள்! :) 
~~~
அடடா அடடா அண்ணாமல
அண்ணாந்து பாத்தா ஒண்ணுமில்ல
போகப் போக ஜவுளிக்கட
போயிப் பாத்தா இட்லிக்கட
இட்லிக்கும் சட்னிக்கும் சண்டை  வந்துச்சாம் 
ஈரோட்டு மாமனுக்கு கொண்டை வந்துச்சாம்! 
~~~~
கதை  கதையாம்
காரணமாம்
காரணத்தில் ஒரு தோரணமாம்
தோரணத்தில் ஒரு தொக்கடவாம்
தொக்கடவில் ஒரு வைக்கப்புல்லாம்
வைக்கப்புல்லைக் கொண்டு போய் மாட்டுக்குப் போட
மாடு ஒரு படி பால் குடுத்துதாம்
பாலைக் கொண்டுபோய் பால்காரனுக்கு ஊத்த
பால்காரன் ஒரு பணம் குடுத்தானாம்
பணத்தைக் கொண்டுபோய்க் கடைக்காரனுக்குக் குடுக்க
கடைக்காரன் ஒரு தேங்காய் குடுத்தானாம்
தேங்காயைக் கொண்டுபோய் சாமிக்கு உடைக்க
சாமி ஒரு பூ குடுத்ததாம் 
பூவைக் கொண்டு போய் ஆத்துல விட
ஆறு ஒரு மீன் குடுத்ததாம்
மீனைக் கொண்டுபோய் பொண்டாட்டிகிட்ட  குடுக்க
அவ ஆக்கத்தெரியாதுன்னாளாம்
ஆக்கத்தெரியாதவ அப்படிப்போனாளாம்.
திங்கத் தெரியாதவன் இப்படிப் போனானாம்.. 
~~~~
எங்கம்மா உங்கம்மா
டீச்சரம்மா

எங்கப்பா உங்கப்பா
தகர டப்பா

எங்கண்ணன் உங்கண்ணன் 
வெளக்கெண்ணை

எங்கக்கா உங்கக்கா
முருங்கைக்கா

எந்தம்பி உந்தம்பி 
கரன்ட் கம்பி 
~~~~
கொக்கே கொக்கே பூப்போடு
கோயிலைச் சுத்தி 
பூப்போடு 
... இந்தப் பாடலை ஆரம்பப் பள்ளியில் படிக்கும் காலத்தில் பாடுவோம். வானத்தில்   கருடன் (அ) பருந்து பறப்பதைக் கண்டால் இந்தப் பாட்டைப் பாடுவது ( கோவையில் ஊருக்குள்ள கொக்கு பறந்து நான் பார்த்ததில்லீங்க! :)) ..பாடினால் கை நகத்தில் வெள்ளைப் புள்ளிகள் வருமாம், அதாவது கொக்கு வானத்திலிருந்து பூ போடுவது அதுதான்! என்னவெல்லாம் கற்பனைகள்!!
~~~~
மொட்டைப் பாப்பாத்தி
ரொட்டி சுட்டாளாம்
உப்புப் பத்தலையாம்
கடைக்குப் போனாளாம்
காசு பத்தலையாம்
கடைக்காரனைப் பார்த்து கண்ணடிச்சாளாம்!
~~~~
ஐஸ் ஐஸ் ஐஸ்
அஞ்சு பைசா ஐஸ்
ஆப்பிள் ஜூஸ்
நீ ஒரு லூஸ்! 
~~~~~
பருப்பாம் பருப்பாம்
பன்னன்டு பருப்பாம்
சுக்கைத் தட்டி
சோத்துல போட்டு
உங்கப்பன் பேர் என்ன? 
முருங்கைப் பூ
முருங்கைப்பூ தின்னவனே 
முள்ளாங்கஞ்சி குடிச்சவனே
பாம்புக்கைய மடக்கு
மாட்டேன்
மாட்டேன்னா மாட்டேன்
மாதுளங்கா கோட்டை
கோழி குடலைத் தின்னு
குப்பைத்தொட்டி மண்ணைத் தின்னு 
தார் தார் மல்லாண்ட
தாமரப் பூ மல்லாண்ட
பூப்பறிக்கிற நோம்பிக்கு 
பூமா தேவி கையெடு! 
..இந்தப் பாடல் நான்கைந்து பேர் வட்டமாக உட்கார்ந்து, கைகளைத் தரையில் வைத்துக்கொள்ள ஒருவர் ஒவ்வொரு கையாய்த் தொட்டவாறே இந்தப் பாட்டைப் பாடுவது. கடைசி வரி "கையெடு" வருகையில் யார் கையில் பாடுபவர் விரல் இருக்கிறதோ அவர் அந்தக் கையை எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒவ்வொருவராக கைய எடுத்துவிட்டு வரிசையாக நிற்க, பாட்டு பாடி விளையாடியவர் ஏதோ சில கேள்விகள் கேட்பார். அவையெல்லாம் மறந்துபோய்விட்டது. வீட்டில் யாராவதிடம் கேட்டு அப்டேட் செய்ய முயல்கிறேன். 
~~~
மழ வருது மழ வருது 
நெல்லு குத்துங்க..
முக்காப் படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க..
ஏரோட்டற மாமனுக்கு எடுத்து வையுங்க..
சும்மா வாற மாமனுக்குச் சூடு வையுங்க..
~~~ 
குத்தடி குத்தடி ஜைலக்கா
குனிஞ்சு குத்தடி ஜைலக்கா..
பந்தலிலே பாவக்கா..
தொங்குதடி லோலாக்கு..
பையன் வருவான் பாத்துக்கோ..
பணங்குடுப்பான் வாங்கிக்கோ..
சுருக்குப்பையில போட்டுக்கோ
சும்மா சும்மா நடந்துக்கோ!
~~~
 ...இப்படியாப்பட்ட பாட்டுகளைப் படிச்சு ஆரும் டென்ஷன் ஆகக்கூடாது..அர்த்தம் கேட்கப்படாது...அமைதியா படிச்சு ரசிச்சு(!) விட்டுப் போகோணும் என கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், உங்களுக்குத் தெரிந்த, நீங்கள் பாடிய சின்ன வயசுப்பாடல்களைக் கருத்துப் பெட்டியில் பகிருங்கள் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நன்றி, வணக்கம்!

Sunday, December 28, 2014

பூனையாரே, பூனையாரே.. போவதெங்கே.. சொல்லுவீர்!!




பூனையாரே பூனையாரே போவதெங்கு சொல்லுவீர்
கோலி குண்டு கண்களால் கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்
பஞ்சுக் கால்களாலே நீர் பையப்பையச் சென்றுமே என்ன செய்யப் போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?
அங்கே இங்கே போகிறீர்..அடுப்பங்கரையை நோக்கியா?
சட்டிப்பாலைக் குடிக்கவா சாது போல செல்கிறீர்?
சட்டிப்பாலும் ஐயைய்யோ ஜாஸ்தியாய் கொதிக்குதே
தொட்டால் நாக்கை சுட்டிடும், தூர ஓடிப் போய்விடும்!
~~~
லயாவிற்காக பார்க்க ஆரம்பித்த பாடல்கள், இப்பொழுது வரிகள் அனைத்தும் வெகு பரிச்சயமாகிப் போய்விட்டன! :) குழந்தைகளுக்கான வீடியோக்கள் என்றாலும் ஒவ்வொரு சின்னச் சின்ன டீடெய்லும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள் இந்தப் பாடல்களில். தமிழ்ப்பாடல்கள் அர்த்தமுள்ள, தெளிவான பாடல்களாகவும் இருக்கின்றன.

3 little kittens
they lost their mittens
...
தமிழுக்கு சற்றும் இளைப்பில்லை காண் என்று போட்டி போடும் ஆங்கிலப்பாடல்கள்! எண்ணற்றவை இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும் எங்களுக்குப் பரிச்சயமான, பிடித்த பாடல்கள் இவை. 

இந்தப் பாடலில் வரும் மூன்று பூனைக்குட்டிகள், பூனையம்மா, அவர்களின் வீடு - சமையலறை -பாத்திரங்கள்- மைக்ரோவேவ் அவன் - ட்யூலிப் பூங்கொத்துக்களால்  அலங்காரம் என்று என்னைக் கவர்ந்த விஷயங்கள் ஏராளம். ஆக மொத்தம் லயா பார்ப்பதை விடவும் நான் பார்ப்பது அதிகம். ஹிஹ்ஹி!



எலியம்மா எலியம்மா எட்டி பாரம்மா
இனிமையான பண்டம் இங்கே இருக்குதே அம்மா..
....
இந்தப் பாட்டில் பூனையார் வில்லனாகவும், எலியம்மா புத்திசாலியாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். பூனை ஏதேதோ காரணங்கள் சொல்லி எலியை வளையை விட்டு வெளியே இழுக்கப்பார்த்தாலும் சாமர்த்தியமான எலியம்மா தப்பிவிடுவார்! :)

5 little speckled frogs
Sat on a speckled log..
Eating some most delicious bugs..yum, yum!!
...
5 தவளைகள் குளத்தில் மிதக்கும் மரக்கட்டை மீது அமர்ந்திருப்பதாகவும், பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அவை ஒவ்வொன்றாக குளத்தில் குதிப்பதாகவும் பாடல்.

குளத்தில் குதிக்கும் தவளைகள் ஈஸி சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பதும், கூல் டிரிங்க்ஸ் குடிப்பதுமாக அதகளம் செய்கின்றன! க்யூட்! :)

அன்னை மொழி எத்துணை முக்கியமானது, அன்னை சொல்வதைக் கேட்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதைச் சொல்லும் அடுத்துவரும் இந்தப் பாடல்..

குருவி ஒன்று மரத்திலே...
கூடு ஒன்றை கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றினை அதில் வளர்த்து வந்தது
நித்தம் நித்தம் குருவியும்
நீண்டதூரம் சென்றிடும்..
கொத்தி வந்து இரைதனை குஞ்சு தின்ன கொடுத்திடும்..
...
அழகழகான குருவிகள், பூக்கள், கருத்து என்று அழகான பாட்டு இது. இவை மட்டுமல்ல, இந்தத் தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடல்கள் பல உள்ளன. ஒரு மணி நேரம் ஓடும் ப்ளே லிஸ்ட்டுகளைப் பார்த்தால் நேரம் போவதே தெரியாது. நேரமிருப்பவர்கள் ரசியுங்களேன். நன்றி! :) 

Wednesday, December 11, 2013

ரசித்த பாடல்கள்..

கோவை வானொலியில் தினமும் காலை 6 மணி முதல் 6.45 வரை "பக்தி இசை" ஒலிபரப்பாகும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் பாடல்கள் தலா ஒவ்வொன்று ஒலிபரப்புவார்கள். அப்படி வரும் பாடல்களில் ஒன்றுதான் இது. பின்னணி இசையோ, வேறு எந்த இசைக்கருவிகளோ இல்லாமல், எஸ்.பி.ஷைலஜா அவர்களின் தேன் போன்ற குரலில் இனிமையானதொரு பாடலிது. பாடலைக் கேட்கையில் மனதில் ஒரு அமைதியையும் நிறைவும் தோன்றுமெனக்கு. பலநாட்களாக இணையத்தில் தேடியும் ஒலி வடிவமோ, வரி வடிவமோ அகப்படவில்லை! என் அதிர்ஷ்டம்,  ஊரிலிருந்து மாமா-அத்தை வந்தவர்கள் மனதில் மனப்பாடமாக இருந்த பாடல் வரிகள் கிடைத்தன! :) நான் ரசித்தவற்றை பகிர்வது வழக்கம் என்ற வகையில், நீங்களும் ரசிக்க அந்த வரிகள் இதோ...

அழகெல்லாம் தவழ்கின்ற அற்புதமே வணக்கம்..
அன்னை கன்யாகுமரி கண்மணியே வணக்கம்!

தாமரைத் தாள்களையே ஏழை மனம் நினைக்கும்..
செண்பகப்பூ மணக்கும் அம்பிகையே வணக்கம்!

காலிலிரு கிண்கிணிச் சதங்கைமணி ஒலிக்கும்..
தாளலய பேதமதில் கோலங்கள் பிறக்கும்!

இடைதுவள சிற்றாடை எழில் காட்டும் உன்னை..
இருவிழிகள் இமையாது பருகுவதும் உண்மை!

வளைகுலுங்க வளைந்தசைந்து அலைபுரளும் கரங்கள்..
வரமளிக்க அருகழைக்கும் நவமணிச் சரங்கள்!

கொத்துவட முத்துக்கள் கொஞ்சுகின்ற மார்பு..
கொடுக்கின்ற குளிர்ச்சியல்லால் வேறேது சால்பு?

கற்றைஒளி ரத்தினங்கள் கழுத்தாட ஆடும்..
காதணியைக் கண்கள் என்று கருவண்டு தேடும்!

மாணிக்க மூக்குத்தி மஞ்சள்முகம் மின்ன..
தேனிதழ்கள் விரிந்திருக்கும் செம்பவளம் என்ன?

பால் வழியும் புன்னகைக்கு ஏதுமில்லை ஈடு...
பார்வதி நீ தவம் செய்யும் காரணம்தான் ஏது?

அழகெல்லாம் தவழ்கின்ற அற்புதமே வணக்கம்..
அன்னை கன்யாகுமரி கண்மணியே வணக்கம்!

-----
பாடல் வரிகளில் ஒரு சில வார்த்தைகள் மாறியிருக்க வாய்ப்பிருக்கலாம். சிலவரிகள் காணவில்லையா, அல்லது முழுப் பாடலும் இதுதானா என்ற கேள்வியுமிருக்கிறது. தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். சொல்வீர்கள் என நம்புகிறேன்! :)
-----
அடுத்து வரும் பாடல் பி.சுசீலா அவர்கள் குரலில் இன்னொரு இனிய பாடல்..

"என் மூச்சில் சுவாசிக்கும் புல்லாங்குழல்"- வந்தபின் அவளுக்காய்த் தேடியபோது சிக்கிய இசைமுத்துக்கள் இவை..என் மனப்பெட்டகத்தில் சேமித்ததுடன் வலைப்பெட்டகத்திலும் சேர்த்துவைக்கிறேன்! :)

அப்பா பாசத்தை அழகாய்ச் சொல்லும் சில பாடல்கள்...
இளையராஜாவின் இனிய இசையில் இன்னொரு இனிமையான தாலாட்டு...

எனக்குப் பிடித்த பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!  

Wednesday, October 23, 2013

ரசித்த பாடல்கள்..

ரசித்த பாடல்களைப் பகிர்ந்து சிலநாட்களாகி விட்டதால் இந்தப் பதிவில் நான் ரசித்த சில பாடல்கள்! மோஸ்ட்லி எல்லாப் பாடல்களும் காதலர்கள் பாடுபவை..ஸோலோ ஸாங்க்ஸ்!
~~~
ஹரிஹரனின் இனிய குரலில், வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் வரிகளுடன் ஆஹா படத்தில் இருந்து "முதன் முதலில் பார்த்தேன், காதல் வந்ததே.."

நொடிக்கொருதரம் உனை நினைக்க வைத்தாய்..
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்! ..
உனைக்கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்..
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்!..
~~~
வைரமுத்து-வின் வைரவரிகள், வித்யாசாகரின் இசை..ஶ்ரீநிவாஸின் குரலில் "தல" அஜீத்தின் அழகான(!) தோற்றத்துடன் ஒரு மெலடி..உயிரோடு உயிராக-படத்தில் இருந்து..

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்..
விண்மீனெல்லாம் நிலவாய்ப் போனது எந்தன் வானத்தில்..
முப்பது நாளும் முஹூர்த்தமானது எந்தன் மாதத்தில்..
முள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்!
~~
பழநிபாரதியின் வரிகள், கார்த்திக் ராஜாவின் இசை, ஹரிஹரனின் குரலில், உல்லாசம்-படத்தில் இருந்து..."வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா?.." கூடவே அழகான விக்ரம் :) என்று சொல்லவும் வேண்டுமா! ;)

அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன்..
போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்!
சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்
விழிகள் முழுதும் நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம்..முதலா..முடிவா?
~~
மீண்டும் வைரமுத்துவின் வரிகள், ஹரிஹரனின் குரல், S.A.ராஜ்குமாரின் இசையில், துள்ளாத மனமும் துள்ளும்-படத்திலிருந்து... "இருபது கோடி நிலவுகள் கூடி.." பலமுறை முயற்சித்தும் பாடலை டைரக்ட்டாக இங்கே இணைக்க முடியவில்லை. சிரமம் பார்க்காம வீடியோவை க்ளிக் செய்து யுடியூபிற்குச் சென்று பாட்டைக் கேளுங்க!

குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு?.. - உன் 
கால்விரல் நகமாய் இருப்பது சிறப்பு! 
:))))
வெட்கப்படாமச் சொல்லுங்க, இந்த வரிகளைப் படிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஒரு சந்தோஷம் வருவது நிஜம்தானே!! :)))
~~
இறுதிப் பாடல் ஒரு சோகப் பாடல்...சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்! :) இதுவும் ஏதோ சன் நெட்வொர்க் காப்பிரைட் என்கிறது. அதனால் யுடியூபிற்குச் செல்லவும்!  படம்- தீனா, ஹரிஹரனின் குரல், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை...கொழுக் மொழுக் அஜீத்! :))) 


சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்!
..
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை..
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தானலைவான் வீதியிலே!! :))))
~~~
பாடல்கள் செவிக்குணவு...ஸ்வீட் பஃப்ஸ் வயிற்றுக்குணவு!
என்ஸாய்! 
:)

Friday, September 6, 2013

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே...

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே...
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே!..
ஒரு வெள்ளிக்கிழமை மாலை..
வானக் காதலன் மேகப்படுதாவை இறக்கி, 
பூமிப் பெண்ணைத் தீண்ட எத்தனித்த தருணம்! 
பூமிப் பெண்ணின் வெட்கச் சிவப்பு..
சூரியக்குழந்தையால் கடத்தப்பட்டு
வானில் கலந்ததோ?
~~~
செப்டம்பர் முதல் வாரத்தின்
இளங்காலை நேரத்தின் இதமான தென்றலைத்
தன் சூடான முகத்திலின்றும்
 பளிச்சென்று அடிக்கும் கோப கனலலைகளால்
சூடாக்கும் பகலவன்!
~~~
 நாள் முழுக்க பூமியை வறுத்தெடுத்த 
வெப்பத்தின் 
மொத்தச் சூட்டையும் 
தன்னுள் அமிழ்த்தி..
அக்கினிக் குஞ்சாய்
ஆரஞ்சுப் பழமாய் 
தகதகவென தண்ணீரில் 
அமிழும்  ஆகஸ்ட் மாதத்தின் ஆதவன்! 
:)
~~~
பதிவின் தலைப்பிற்கு உதவிய பாடல்..
வைரமுத்துவின் வரிகள், பரத்வாஜின் இசை, ஹரிஹரன் - சித்ரா இவர்களின் இனிய குரலில்!

முழுப்பதிவையும் சூரியனே குத்தகைக்கு எடுத்துக் கொண்டால் நிலாப்பெண்ணுக்குக் கோபம் வருமே! ;) 
ஆகஸ்ட்டின் முழுநிலவு..மேகங்களுடன் இயைந்து நடைபழகிய அழகைக் கேமராவில் சிறை பிடிக்க முயன்று..
மேகங்களற்ற முழு மதியை வெற்றிகரமாகச் சிறை பிடித்தோம். :) 
~~~
வெகு நேரம் வானில் பறந்துவிட்டோம், அப்படியே இறங்கி மண்ணுக்கு வாங்க! :) 
சோறு-பச்சைப் பயறு-முள்ளங்கி பொரியல்-பீன்ஸ் பொரியல்
பொதுவா தட்டில் இருக்க சாப்பாடு கலர் கலரா இருந்தா நல்லதுனு சொல்லுவாங்க. அதனால் முடிந்தவரை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளைன்னு பலவண்ணங்கள் உள்ள காய்களை சமைத்து உண்ணுங்கள்! :) 
அனைவருக்கும் இனிய வார இறுதி! 
~~~
காய்கறி கடையில் காய்களுடன் கிடைக்கும் கறிவேப்பிலை போல, பதிவின் கொசுறு..காதல் மன்னன் படத்திலிருந்து இன்னுமிரு பாடல்கள்! 

பாடல் காட்சிகளை விடவும், இசையிலும் கவிதை வரிகளிலும் கவனம் செலுத்தி ரசிப்பது என் பழக்கம்! நேரமிருப்போர் 
"ஏன் பிறந்தேன் என்று நானிருந்தேன், உன்னைப் பார்த்தவுடன் உண்மை தானறிந்தேன்!
என் உயிரில் நீ பாதியென்று உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்.."
"மரபு வேலிக்குள் நீ இருக்க, மறக்க நினைக்கிறேன், முடியவில்லை!
இமயமலையென்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை.."
என எஸ்.பி.பி.-யின் குரல் உருகுவதைக் கேட்கலாம், ரசிக்கலாம்! 
---------
"பத்துப் பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்..
அழுக்குச் சட்டை போட்டாலும் அழகாய்த் தோன்றும் ஆணழகன்"
;) :)
-----
இப்படி பாடலில் வரும் வரிகளை ரசிக்கலாம், கேட்கலாம், ! :)

Wednesday, July 24, 2013

மழையின் துளியில் லயமிருக்குது...

மழையின் துளியில் லயம் இருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்..
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்!
........
கோடைக் கதிரவனின் வெப்பத்தில் பூமிப்பெண் கசகசவென்று வியர்த்து வடிந்துகொண்டிருந்த சமயம்..கடந்த வாரம் ஒரு நாள் மேகமூட்டமாய் இருந்த வானம், பின்மதியத்தில் பூமிப் பெண்ணுக்குப் பன்னீராய்ச் சாரல் தெளித்து தென்றல் சாமரம் வீசியது! சில நிமிடங்கள் மட்டுமே இந்த சிசுருஷை நடந்தாலும் பூக்களால் சிரிக்கும் பூமாதேவி தன் மகிழ்வைத் தெரிவிக்க மறக்கவில்லை. அந்த அழகை கேமராவில் சிறைப்பிடித்தேன்.

செம்பருத்தி, செம்பருத்தி..
பூவைப் போல பெண்ணொருத்தி.. :) 
இந்த செம்பருத்திப் பெண் தினமும் சில பூக்கள் மலரத் தவறுவதில்லை. முழுவதும் நனையும் அளவுக்குக் கூடச் சாரலடிக்காமல் இருந்தாலும் விழுந்த ஓரிரு துளிகளிலும் ஓர் அழகு! 

ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ!
கொத்துக் கொத்தாய் பூத்துச் சிரிக்கிறது சிவப்பு ரோஜா! கொத்தில் ஒரு மொட்டை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை நீக்கிவிட்டால் பெரிய ரோஜாமலர்கள் கிடைக்கும் என்று தோட்டம் போட்ட அனுபவஸ்தர்கள் சொன்னாலும் அங்ஙனம் செய்ய எனக்கு மனம் வருவதில்லை.
ரோஜாப்பெண்ணின் மொட்டுப்பிள்ளைகளைக் கிள்ளியெறிய எனக்கு உரிமையும் இல்லை, அது சரியென்று என் மனம் ஒப்பவுமில்லை. பூ சிறிதாய் இருந்தாலென்ன, அதுவும் ஓரு அழகுதான்! நீங்க என்ன சொல்றீங்க?
இயற்கையைத் தொல்லை செய்யாமல் அதனோடு ஒன்றி ரசிப்போமே! :)

ஒரு மலர்..
இந்த ஜெரேனியம் மலர்கள், கொத்துக் கொத்தாய் மலரும்,

இந்தப் படத்தில் கொத்தில் மலர்ந்த ஒரு மலர் மட்டும் சாரலில் நனைந்து உவகை கொள்கிறது.
~~
ஜீனோ: பால்கனில கேமராவோடு சுத்திட்டு வந்து உட்கார்ந்தாங்க, அக்கடா-ன்னு நானும் வந்து படுத்தேன், ஆனா இன்னும் கேமரா ஆஃப் ஆகலை போலிருக்கு...கிர்ர்ர்ர்ர், கர்ர்ர்ர்ர்-ன்னு ஏதேதோ சத்தமெல்லாம் கேக்குது...ஹ்ம்ம்ம்!
அட போங்கப்பா..நீங்க போட்டோ எடுத்தாலும் சரி, எடுக்காம ஜூம் பண்ணிகிட்டே இருந்தாலும் சரி..நான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணறேன்.
யாரது என்ர மஞ்சக் கலர் பொம்மைய கண்கொட்டாமப் பாக்குறது? அது ஜீனோவுது..நீங்கள்லாம் பூக்களை ரசிங்க, ஜீனோ இஸ் வெறி;) பொஸஸிவ் அபவுட் ஹிஸ் டாய்ஸ்! யாருக்கும்ம்ம்ம்ம்ம் தரமாட்டேன்!! :) 

~~
பதிவின் முதலில் வந்த வரிகள் இந்தப் பாடலில் இருந்து...


சின்னத்தம்பி-பெரியதம்பி எங்க ஊருப்பக்கம் எடுக்கப்பட்ட படம்.. நரசீபுரம் அருகில் உள்ள "வைதேகி சுனை" என்ற அழகான இடம் இந்தப் படத்தில் பல இடங்களில் வரும். அழகான நதியா, இனிமையான இசை, சின்னக் குயில் சித்ராவின் அற்புதமான  குரலில்.... மழையை ரசிக்க ஒரு பர்ஃபெக்ட் பாட்டு! :)
~~
இத்தனை நாட்கள் மறந்து போகாமல், மறைந்தும் போகாமல் தொடர்ந்து எழுத ஆர்வத்தையும், வாய்ப்பையும், ஊக்கத்தையும் கொடுக்கும் இறைவனுக்கும், ஆதரவு தரும் அன்பான வாசகர்கள் மற்றும் நட்புக்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை என் 350வது பதிவான இப்பதிவில் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். 
நன்றி!
~~

Friday, June 14, 2013

My name is..

Hello Ladies and Gentlemen, My name is GENO!  Hope you all know who I am..but lately I came to
know that many of you have a misunderstanding about me and my size. So today I came here to give you guys a short and sweet introduction about me! 
You are seeing my back pose in the above picture[..this is what Mommy always does..she clicks pictures 24/7....errrr!] I guess you can estimate my height and weight. Am a small dog, weighing around 12Lb. By the way, I am fully grown chug dog, and this is my maximum height and weight...So, please guys, don't put comments that I have grown up! I am blushing..you know?! ;) :)

So...this is Mommy transferring my pictures from her phone to Laptop. When ever she sits on the couch, I love to sit on her lap. [I hate these laptops and iPads..they don't let me enjoy the comfort. Grrr!]  Sometimes, I do send messages to Mommy's friends when she is chatting with her buddies! typing is fun! :) 

...hmmm! okay, lets continue...Now Mommy did a google search about my breed and she landed here. You can see lots of details about my breed in that page. But I didn't like that guy in that picture. Why is he starring me like this??! Grrrrrr!...I am sitting real on her Lap, and why does she wanna know from internet than knowing from me??! oh...that link is for you guys, who doesn't know about me and my character.
Its so boring..donno how these human beings are sitting with their laptops all day! As I am on Mommy's lap, I love to have a nap! ;) :) 
 
You wanna know something more about me? ...well, I hate to disclose these details in public, but..its okay! I love to chase rabbits, reptiles [அது ஒண்ணுமில்லீங்க, ஓணான்!!]..love to bark at big dogs[they kinda annoy me..]. I am scared of  room fresheners, nail polish, Dad's perfume, and most importantly, taking bathe! avvvvvv!! Its too cruel to put me in water you know!! 

When I get treats (more than enough), I would hide them in some secret places and eat them latter. I am a veggie lover, I like to eat boiled veggies like broccoli, potato and beans. Dad is my Super Hero, I lovvvvvvve to munch baby carrots when he is having his salad! :P  I play nosy-ball with grapes, I can play and chew my toys all day! ;) :) I like to run in the dog walk, love to go n receive Daddy from parking lot!

...and the video below is one more humiliation to me by Mommy! I thought there is another dog outside the mirror..I don't like any other dog in this house and thats why I bark at him.  But Mommy burst out laughing and started taking video. I love her and am her personal guard dog, I support whatever she does always! So I let her share this video in public. 
While typing this post's title, this song strike Mommy's brain. I too love this song. How about you?

Since I am also a Super Star, I would love to share some good news with all of you. Yeah...our apartment is getting new trees where ever the old trees  were! Mommy is so happy about it and she took lot of pictures. Now over to her..
என்னங்க..ஓவர் பீட்டரா இருக்குதா? ஹி...ஹிஹ்..ஹி! என்ன செய்ய? ஜீனோவுக்கு தமிழ விட இங்கிலிபீஸ் தான் ஃப்ளூயன்ட்டா வருதுன்னு சொல்லிட்டான். அதான், அவனையே பேச வைச்சிட்டேன். ;) :) 

அப்புறம் மரங்கள் வெட்டப்படுவது பற்றி வருத்தப்பட்டிருந்தேன் இல்லையா? அந்த இடங்களில் எல்லாம் புது மரக்கன்றுகள் நட்டிருக்காங்க. பழைய மரங்கள் இருந்ததற்கான சுவடுகளே இல்லை. மண்ணில் இருக்கும் பெரிய மரங்களின் அடித்தண்டை மேலே படத்திலிருக்கும் ஒரு மிஷின் மூலம் பொடிப்பொடியா சிதைச்சுடறாங்க. சில நிமிடங்களில் மரத்தின் வேர் மற்றும் தண்டு இருந்த இடத்தில் மரத்தூள் தான் இருக்கு, அதை அப்படியே அள்ளிப் போட்டுட்டு, அருகில் பள்ளம் தோண்டி புது மரம் நட்டுவிடுகிறார்கள். எவ்வளவு சிம்பிளா வேலைய முடிச்சுடறாங்க என ஆச்சரியமாக இருந்தது! சிறு கன்றுகள் என்பதால் சுற்றுவட்டாரம் கொஞ்சம் வெறிச்-என்றுதான் இருக்கிறது. ஆனால், "சம்திங் இஸ் பெட்டர் தன் நத்திங்"..இல்லைங்களா? :) 
பொறுமையாக ஜீனோ-புராணத்தையும் மரங்களைப் பற்றியும் படிச்சுட்டீங்க..இதோ எங்க ஜீனோவின் ஃபேவரின் ப்ரேக்ஃபாஸ்ட்..சின்னமன் ப்ரெட் டோஸ்ட்! நீங்களும் சாப்பிடுங்க![..தைரியமாச் சாப்பிடலாம், இது எனக்காக செய்ததுதான், அவனுக்கும் பிடிக்கும் என்று ஒரு ஸ்லைஸ் அவனுக்குக் குடுப்பேன். :)]
அனைவருக்கும் இனிய வார இறுதி! 

Tuesday, May 14, 2013

புத்தம் புது..







புத்தம் புது - என்று தொடங்கும் சில இனிமையான பாடல்களும் எங்க வீட்டுப் புத்தம்புதுப் பூக்கள் மற்றும்  பொன்னிற வேளையும்!!

Friday, April 12, 2013

ஸ்ட்ராபெரி பெண்ணே!..

நீங்க மார்கெட் போகாமல் உங்கள் வாழ்க்கைத் துணைவரை தனியாக அனுப்பினால் என்ன ஆகும்?  நீங்க அனுப்பிய தேவையான பொருட்கள் லிஸ்ட்டை சுத்தமாக மறந்துபோயி, அவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு, பச்சைமிளகாய்-இஞ்சி-கொத்துமல்லித் தழை போன்ற கொசுறுகளை ஒரு கணமும் நினைக்காமல், ஒரு மினி ஃப்ரூட்-வெஜிடபிள் மார்க்கட்டையே காரில் நிறைத்துக்கொண்டு வருவார்கள். :) அதையெல்லாம் விட முக்கியமான ஒன்று, ப்ளாகில் போட நமக்கு ஒரு பதிவு தேறும், ஹிஹி! :)

மினி மார்க்கெட்டைப் பார்த்து மயக்கம் போட்டுவிடாமல், எல்லாத்தையும் பத்திரமாக குளிர்சாதனப் பெட்டியில் வைச்சு உபயோகிப்பது உங்க பொறுப்பு! எங்க வீட்டில் நடந்த இப்படியாகப்பட்ட  நிகழ்வொன்றில் ஒய்யாரமாக கண்ணாடிப் பெட்டியில் செக்கச்செவேர் என்று வந்த ஸ்ட்ராபெரி பழங்கள் புளிப்புன்னா புளிப்பு, வாயில் வைக்க முடியாத அளவு புளிப்பு!! அதற்காக தூக்கி குப்பையில் போட  மனசு வருமா? இப்படி ஒரு ஸ்மூத்தியை மிக்ஸியில் அடிச்சு, ஒரு டால் க்ளாஸ் நிறைய ஊற்றி, ஸ்டைலா ஒரு பழத்தையும் கட் பண்ணி வைச்சு போட்டோ புடிச்சுட்டு, அக்கடான்னு உக்கார்ந்து குடிச்சும் முடிச்சுட்டேன்!
தேவையான பொருட்கள் 
ஸ்ட்ராபெரி பழங்கள் -5 (பெரிய பழங்கள்)
தயிர்-கால்கப்
தண்ணீர்-1/2கப்
சர்க்கரை(விரும்பினல்)-2டீஸ்பூன்

செய்முறை
ஸ்ட்ராபெரி பழங்களை நன்றாக கழுவி, அவற்றின் தலையில் இருக்கும் இலை மற்றும் தண்டுப் பகுதியை நீக்கவும்.
பழங்களை துண்டாக்கி மிக்ஸியில் போட்டு சிலநிமிடங்கள் அரைக்கவும்.
பிறகு அத்துடன் தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மேலும் சிலநிமிடங்கள் அரைக்கவும்.
ஜில் ஜில் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி தயார். கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி சில்லென்று பருகவும்.
பி.கு. புளிப்பான பழம் என்பதால் போட்டோவில் இருக்கும் ஒரு ஒய்யாரக் கொண்டை ஸ்ட்ராபெரி அக்கா :) போட்டோ செஷன் முடிந்ததும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்கே குடியேறிவிட்டார். புளிப்பில்லாத பழம் என்றால், ஸ்மூத்தி பருகும்போது இடையிடையே அந்தப் பழத்தையும் ஒவ்வொரு கடி கடிச்சு சாப்பிடலாம். :)

இது டயட்(!) வர்ஷன்..இதிலேயே கொஞ்சம் வேரியேஷன் வேணும்னா...ஸ்ட்ராபெரி பழங்கள், குளிர்ந்த பால், சர்க்கரை, ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்த்து அரைத்தா..
ரிச் அண்ட் டேஸ்ட்டி ஸ்ட்ராபெரி மில்க்‌ஷேக் ப்ரேக்ஃபாஸ்ட்-டுக்கு ரெடி!  

இலவச இணைப்பு : மின்சாரக் கனவிலிருந்து ஒரு பாட்டு.. :) :)))



~~~
அனைவருக்கும் இனிய தெலுங்கு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
~~~

Monday, March 11, 2013

ரசித்த பாடல்கள்..


எல்லாப் பாடல்களையும் கேட்டீங்கனா ஒரு விஷயம் கவனிச்சிருப்பீங்க..என்னன்னு கருத்துப் பெட்டில சொல்லுங்க, நன்றி!:) -----> என்று 2 நாட்களுக்கு முன்னர் எழுதினேன். ஒண்ணும் பெரீஈய்ய விஷயமெல்லாம் இல்லீங்க, பாடல்கள் எல்லாமே இளையராஜா குரலில் வந்தவை. அதிலும் நாயகன் படப் பாடல் கமல் குரலில் இருந்ததை கவனிக்காமல் சேர்த்துமிருக்கிறேன். :))
இது போன்ற பொழுதுபோக்குப் பதிவுகளையெல்லாம் வந்து பார்ப்பதே பெரிய விஷயம், அதிலே பாட்டுக் கேட்டு கருத்தும் வேறு சொல்லணுமா என்றே மேற்கண்ட படம் சொல்வதுபோல எனக்கு ஒரு பிரம்மை! ;) :)

பாடல்களை ரசித்து, கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் இளமதி, சித்ராக்கா, சங்கீதாநம்பி, ஏஞ்சல் அக்கா அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்! இங்கே வந்து, வலைப்பூவைப் பார்வையிட்டு "ரசித்த பாடல்கள்" பதிவிற்கு 170+ page views தந்த அனைவரும் நன்றிகள். இப்போதைக்கு கருத்துப் பெட்டியைப் பூட்டிவைக்கிறேன். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். அதுவரை 'வழக்கம் போல' வந்து போங்க. ;) :)

Sunday, February 10, 2013

ரவா ரோஸ்ட்

இந்த தோசை இங்கே வந்த புதிதில் மிக்ஸி இல்லாமல் திண்டாடியபோது கை கொடுத்தது. பெங்களூரில் பக்கத்து அப்பார்ட்மென்டில் இருந்த ஒரு சென்னை தோழியின் செய்முறை, அமெரிக்காவில் சமைக்கப்பட்டது! எவ்ளோ ஊர் தாண்டி வந்திருக்கு பாருங்க! :)

 1 பங்கு ரவைக்கு 3 பங்கு அரிசி மாவு,  கொஞ்சம் மைதா.. இதுதான் பேஸிக் ரேஷியோ..அதனுடன் இந்த "மானே,தேனே, பொன்மானே.." (அதாங்க மற்ற பொருட்கள்) இதெல்லாம் விருப்பப்படி சேர்த்துக்  கொள்ளலாம். :))) சிலர் எண்ணெயில் தாளித்துக்கொட்டியும் செய்கிறார்கள். எனக்கு அந்த அளவுக்கு பொறுமை இல்லாததால் அப்படியே பச்சையாகச் சேர்ப்பேன், இந்த ருசியே நன்றாக இருப்பதால் தாளித்துக் கொட்டப்போகல இன்னும்! :)

தேவையான பொருட்கள்

ரவை -1/4கப்
அரிசி மாவு-3/4கப்
மைதா மாவு - 2டேபிள்ஸ்பூன்
கெட்டியான மோர் (அ) புளித்த தயிர் - 1/2கப்
[தயிர் உபயோகிப்பதானால் அரைக் கப்புக்கும் கொஞ்சம் குறைவான தயிருடன் தண்ணீர் விட்டு, கரைத்து உபயோகிக்கவும்]
உப்பு

சீரகம்-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி -சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய்-2 (பொடியாக நறுக்கியது)
முந்திரி -5 (பொடியாக நறுக்கியது) - விரும்பினால் சேர்க்கலாம், நான் சேர்க்கவில்லை.

 செய்முறை
அரிசிமாவு-ரவை-மைதா-உப்பு இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மோர் விட்டு கரைக்கவும். பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அரைமணி நேரம் வைக்கவும்.
மாவு, சாதாரண தோசை மாவைவிட நீர்க்க இருக்கவேண்டும். அதனால் ஒரு கப்பிற்கும் அதிகமாகவே தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தோசை வார்க்கும்  முன்பாக மாவுடன் சீரகம், நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லி, உடைத்த முந்திரி சேர்த்து கலக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும். வழக்கமாக தோசை ஊற்றுவது போல செய்யக்கூடாது. கல் நன்றாகச் சூடானதும் கரண்டியால் ரவாதோசை மாவைக் கலக்கிவிட்டு 2 கரண்டி மாவை எடுத்து தோசைக்கல்லில் தெளித்தாற்போல ஊற்றவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு, தோசை மீதும் கொஞ்சம் எண்ணெய் தெளித்து வேகவிடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து சட்னிகளுடன் சூடாகப் பரிமாறவும்.
~~
யூ ட்யூபில் பாடல்கள் கேட்டுக் கொண்டு இருந்தபோது இந்த தொகுப்பு சிக்கியது. அருமையான பாடல்கள். போட்டுவிட்டால் ஒரு மணி நேரம் போவதே தெரியாது. நேரமிருந்தால் நீங்களும் கேளுங்க. 
:)
 

Wednesday, January 4, 2012

அமுதே தமிழே..

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழின்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத்தமிழெங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத்தமிழெங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
என்று பாரதிதாசன் எழுதிவைத்ததை எல்லாரும் அனுபவித்துப் படித்திருக்கிறோம். தமிழ் நாடு ஒரு மாநிலமாக இருந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் தமிழன்னை ஒவ்வொரு வடிவில் வடிவெடுத்திருக்கிறாள்.

ஒரு சிச்சுவேஷன் சாங்...கேளுங்க! பாட்டைக் கேட்டுட்டு மீதியத் தொடருவோம்.



எங்க ஊருப்பக்கம் வந்தால் தமிழன்னையை மரியாதை கொஞ்சும் கொங்குப் பெண்ணாகப் பார்க்கலாம். சென்னையிலே சென்னை டமில்:) பேசும் சிங்காரியாக,தென் தமிழ் நாட்டுப்பக்கம் போனால் நாஞ்சில் நாட்டு நங்கையாக என்று எத்தனையெத்தனை தமிழ்?? மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், குமரித்தமிழ், கொங்குத்தமிழ், பிராமணர் தமிழ், சென்னைத்தமிழ் இந்த வரிசையில் சமீபத்தில் "இடலாக்குடி தமிழ்" பக்கம் போக நேர்ந்தது!

இடலாக்குடி..நாகர்கோயில் அருகே இருக்கிறது.கிட்டத்தட்ட கேரள எல்லையில் இருப்பதால் அங்கே தமிழ் + மலையாளம் இரண்டு மொழிகளும் கலந்து தலையாளம் ஆகியிருக்கிறது தமிழ்! :) இங்கே அந்த ஊரைச் சேர்ந்த நண்பர் குடும்பம் இருக்கிறார்கள். பேசிக்கொண்டிருக்கையில் பலமுறை அவங்க பேச்சை நிறுத்தி, சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டுக்கொள்வது வழக்கம்.

ஒரு முறை வீட்டுக்கு வந்திருந்தப்ப, அவங்க குட்டிப்பெண் எங்க வீட்டில ஜாலியா விளையாட ஆரம்பிச்சுட்டா. போலாம் வான்னு அவங்க கூப்பிட அவ கிளம்பல.."அப்பா-அம்மா கிளம்பறோம்..நீங்க ஆன்ட்டி வீட்டிலயே நிக்கறீங்களா?" என்று அவள் அப்பா கேட்கவும், என்னவர் "ஏங்க அவ நிக்கணும்?? உட்கார்ந்தே விளையாடிட்டு இருக்கலாமே..நின்னுட்டே இருந்தா கால் வலிக்காது?? "ன்னாரா...கண்ணில் தண்ணி வர சிரிச்சுட்டோம் எல்லாரும்!

குட்டிப்பொண் எங்க வீட்டிலேயே இருக்கட்டும் என்பதுதான் வீட்டிலேயே நிற்பதுக்குப் பொருளாம்!! அப்புறம் ஒரு முறை காஃபி டேபிள் பற்றி ஏதோ பேசுகையில் "எங்க வீட்டு காஃபி டேபிளுக்கு வீதி(!) அதிகம்!"னு ஒரு போடு போட்டாங்க...நான் வழக்கம் போல "ங்ஙே......!!!" வீதின்னா அகலமாம்!! :))))))

இப்படியாக நான் அவ்வப்பொழுது தமிழில் புதுப்புது வார்த்தைகள் படித்துக்கொண்டிருக்கையில் ஒருநாள் விக்கி பீடியாவில் "இடலாக்குடி தமிழ்" என்று தேடிப் பாருங்களேன்னு சொன்னாங்க..நானும் பார்த்தேனா...என்னவருக்கும் காட்டினேனா..ரெண்டு பேரும் நல்லா சிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரிசிரின்னு சிரிச்சு முடிச்சு...இரவு 9.30ஆனாலும் பரவால்லைன்னு அவிங்களுக்கு போன் செய்து பேசினோம். சும்மா சொல்லக்கூடாது,இடலாக்குடி தமிழ் ஜூப்பருங்கோ!!:D

இங்கே மட்டும் க்ளிக் பண்ணி இடலாக்குடி தமிழ் பற்றி விக்கிபீடியா தரும் விளக்கத்தைப் பார்க்காமல் விட்டால் நீங்க ரெம்ப மிஸ் பண்ணுவீங்க,அதனால ரெண்டுநிமிஷம் அங்கிட்டுப் போய் பார்த்துட்டு வந்துடுங்க.

என்ன பாத்துட்டீங்களா??அந்த டேபிள்ல நிறைய புதிய வித்யாசமான வார்த்தைகள் இருந்தாலும் சிலது ரொம்பவே சிரிக்க வைச்சது எங்களை...
  • "ம்பா கறி"ன்னா ஆட்டுக்கறியாம்!! அதுக்கு ஏன் இந்தப்பேர் வந்ததுன்னு விளக்கம் வேற சொன்னாங்க அவிங்க...ஆடு "ம்பா..ம்பா"ன்னு கத்துமாம்..அதனால அது "ம்பா கறி"யாம்!!
  • "துக்க" என்ற வார்த்தையும் மிகவும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் வார்த்தையாம்..துக்க= அறிவு கெட்டவனே!!!!
  • கான்-னா சாக்கடையாம்..அப்ப ஷாரூக்"கான்",,,அமீர்"கான்",,,சல்மான்"கான்" எல்லாம்??!? அப்படின்னு ஒரு கேள்வி எனக்குத் தோணுச்சு!!! :):)
இதையெல்லாம் எழுதையில எங்கூர்த் தமிழும் கொஞ்சம் கேவகம்(!) வந்துருச்சுங்கோ..அதைய எழுதாம உட முடியுமா?? :)

அக்கானுங் ------> ஆமாங்க
அக்கட்டால போ-------> அந்தப் பக்கம் போ
இக்கட்டால போ ------->இந்தப் பக்கம் போ
அவடத்தால --------> அங்கே
இவடத்தால -------->இங்கே
பொழுதோட--------> சாயங்காலம்
அம்முணி -------->பொதுவாகக் குறிப்பது தங்கையை,..ஆனா எல்லாப் பெண்களையும் குறிப்பிடும் வார்த்தையாகவும்..சிலருக்கு இதுவே பேராகவும் இருக்கும். சின்னம்மிணி,பெரியம்மிணி இப்படியும் சொல்லுவாங்க.
மழைக்காயிதம்-------> ப்ளாஸ்டிக் கவர்
என்றது ------->என்னுடையது
உன்றது -------> உன்னுடையது
ஒட்டுக்கா வைச்சிருக்கேன் --------->ஒன்றாக வைத்திருக்கேன்
வேறயாப் போயிட்டாங்க ------->தனிக்குடித்தனம் போயிட்டாங்க
ஒரம்பரை -------> உறவுக்காரர்கள்/விருந்தினர்கள்

இப்போதைக்கு இவ்வளவு ஸ்பெஷல் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருது. மற்ற வார்த்தைகள் நினைவு வருகையில் இணைக்கிறேன்.(ஒரம்பரையை நினைவுபடுத்திய ரீச்சருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! :)) இன்னும் நல்லா தெரிஞ்சுக்க விருப்பப்பட்டா ஒண்ணு செய்யுங்க..சதிலீலாவதி படத்தைப் பாருங்க. இது ஜஸ்ட் அ சாம்பிள்!! :)



இதுவரைக்கும் பொறுமையா கர்ஸரை ஸ்க்ரோல் பண்ணி வந்திருந்தீங்கன்னா ஒண்ணு படிச்சுட்டு வந்திருக்கோணும்..இல்லாட்டி படம்பார்த்துட்டு வந்திருக்கோணும்..எப்புடின்னாலும் பரவால்ல, இந்தாங்க...சுடச்சுட டோக்ளா!

செல்ஃப் ஸர்வீஸ்தானுங்கோ...ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்! :)))))))))

ரெசிப்பி வேண்டும் என்பவர்கள் இங்கே க்ளிக்கி Read(!) பண்ணுங்க என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி!

Thursday, December 22, 2011

மழை..இசை..கதை!!

ஹலோ..ஹலோ..ஹலோ!!!!
................
மைக் டெஸ்டிங்...ஒன்..டூ..த்ரீஈஈஈஈ!!!!
................
எங்கே..எங்கே..எங்கே..எங்ங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ தேடறீங்க?? இங்கே..இங்கே..இங்கே..இங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ பாருங்க!
..............
நாந்தான் மழை,மழை,மழேஏஏஏஏஏஏஏஏஏஏ வந்திருக்கேன்!
:))))))))))))))))))))))))))))))))

எல்லாரும் சுகமா..எனது காதலி..மனைவி, என் முதலும் முடிவுமான பூமிப்பெண் சுகமா இருக்காளா? ஒரே ஆள், பலமுகம் கொண்டவள் என் காதலி!!! காதல்வெறியில் அவ்வப்பொழுது சிலசமயம் பெய்தும் கெடுப்பேன்,பலசமயம் காய்ந்தும் கெடுப்பேன். love drives people crazy, not only people,but including me!!... :P:P:P

ஹிஹீஹீ..என்ன பார்க்கறேள்? மழை இங்கிலீஷ் பேசுதேன்னா...நான் எல்லா பாஷையும் பேசுவேன். அதை விடுங்கோ..இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன்!!! இதோ இந்தப் பொண்ணைப் பாருங்களேன். இவ பேரு வர்ஷா(வர்ஷா = மழை) ..காலேஜில படிச்சுட்டு இருக்கா..லீவில் ஊருக்கு போறப்ப எப்பூடி என்னை ரசிக்கிறா எண்டு பாருங்க! இதைப் பார்க்கறப்ப எனக்கே டான்ஸ் ஆடலாம் போல வருது! :)



இந்தியப்பெண்ணாய் என் காதலியைப் பார்க்க நினைத்தால் இந்தியத் தீபகற்பம் பக்கம் வந்து பார்ப்பேன்..நவீன யுவதியாகப் பார்க்க நினைச்சால் அமெரிக்க ஐரோப்பியக் கண்டங்களிலே பார்ப்பேன்.வெள்ளைப் பனித் தேவதையாய் அவளைக் காண நினைத்தால் அண்டார்ட்டிக்காவில் பார்ப்பேன்..பச்சைப்பட்டுடுத்திய தேவதையாய்ப் பார்க்க நினைத்தான் அமேஸான் காடுகளிலே ஓடிப்போய்ப் பார்ப்பேன்..மொத்தத்தில் அவள்மீது பைத்தியமாய்ப் பால்வெளியெங்கும் திரிகிறேன்!!!!!! இப்பொழுது கூடப் பாருங்க..மழை வந்திருக்கேன்,கதை சொல்லப்போறேனு சொல்லிட்டு பூமிப்பெண்ணைப் பற்றி பிதற்றிட்டு இருக்கிறேன்! அவ்வளவு காஆஆஆஆஆதலுங்க! ;))))

அட,நம்ம வர்ஷாப் பொண்ணை எங்க விட்டோம்?? ஆங்...அவிங்க ஊர்ல!! வர்ஷா கற்பனையில் மூழ்கி, கவிதையில் முத்தெடுத்து, எழுத்திலே கோர்த்து வைத்திருக்கா..அதை இந்தப்பையன் களவாடிட்டான்..ஆனாலும் பரவாயில்லை,நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாவே பாடறான். :)



சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன்துளியாய் வருவாய்..
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே வருவாய்..
பயிர் வேரினிலே விழுந்து நவதானியமாய் விளைவாய்..
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்!! ...ம்ம்ம்ம்ம்...அனுபவிச்சு எழுதிருக்காங்கள்ல? இதைக்கேக்கறப்ப எனக்கே என்மேல கொஞ்சம் பெருமையா இருக்கு..என்ன, காலர்தான் இல்ல...இருந்தா காலரைத் தூக்கி விட்டுப்பேன்.

இப்புடியே நாள் ஓடிட்டு இருக்கப்ப பாவம்,காலேஜில படிச்சிகிட்டு இருக்கற வர்ஷாவுக்கு கலியாணம் முடிவு பண்ணறாங்க... கரீக்ட்டா நான் போய், அந்தப்புள்ளை வீட்டுக்கு போவதை தாமதப்படுத்திட்டேன்..வர்ஷா ஒரே சந்தோஷமாயிருச்சு..என்னையக் காரணம் காட்டி வீட்டுக்கு லேட்டாப்போலாம்ல?? என்ன ஒரு சந்தோஷம் பாருங்களேன்..



எப்படியோ ஒரு வழியா பெண்பார்க்கும் படலத்தைத் தாமதப்படுத்தியாச்சு..நாட்கள் ஓடிட்டே இருக்கு. ஒருநாள் நான் என் காதலியைப் பார்க்க சென்னை மாநகருக்கு வந்தப்ப, மார்க்கெட்ல இருந்த ஒரு பையன் என்னைப் பார்த்து, நான் ஏற்படுத்தும் ஒலிகளையும் ரசிச்சு பாடறான்..அதே நேரம் அந்தப்பக்கம் நம்ம வர்ஷாப்புள்ளையும் பாடுது.

பாட்டு நல்லாருக்கும்..பையனையும்,புள்ளையையும் பார்க்கப்புடிக்கலைன்னா கண்ணை மூடிகிட்டு பாட்டைக் கேளுங்கோ, விசய்-திரிசா :):)வைப் புடிக்கும்னா கண்ணையும் காதையும் ஓபனா வைச்சிகிட்டே என்சொய் பண்ணுங்ஓஓஓ!;) ;)



ஒத்த ரசனையோட இருக்க ரெண்டு பேரும் எதிர்பாராத விதமாச் சந்திச்சு, தடக்-தடக்குன்னு கலியாணம் பண்ணி, ஆசைக்கு ஒண்ணு, ஆஸ்திக்கு ஒண்ணுன்னு குட்டீஸும் வந்து மும்பைல செட்டில் ஆகிட்டாங்க. ஒரு ஹோலி நாளில் எல்லாரும் வண்ணங்கள் பூசி மகிழ்வதைப் பார்க்க நானும் பூமிக்கு வந்தேன்..பாட்டுப்பாடி நடனம் ஆடி, கலர்ப்பொடி பூசின்னு ஒரு நாள் சந்தோஷமாக் கழிஞ்சது.



கதையும் முடிஞ்சது,கத்தரிக்காய் காய்ச்சது! :))))))))))))) போயிட்டு வரேன்..முடிந்தால் மீண்டும் சந்திப்போம்!

பி.கு. அதிரா ஆரம்பித்து வைத்து, ஆசியாக்கா என்னைக் கோர்த்துவிட்ட "இசையும் கதையும்" தொடர்பதிவு இது. இதைக் கோர்க்கும்படி இமா,வானதி, சிவா ஆகியோரை நானும் கோர்த்து:)விடுகிறேன்.

Thursday, July 21, 2011

அமுதென்பதா,விஷமென்பதா?

அமுதென்பதா,விஷமென்பதா...அமுதவிஷமென்பதா?

காதலைப் பற்றி தொடர்பதிவு எழுதச்சொல்லி அதிரா அன்பாக அழைத்திருந்தார். என்ன எழுதுவது, எங்கே ஆரம்பிப்பது, எங்கே முடிப்பது எதுவும் தெரியவில்லை! :)

ஒருநாள் காலை டூயட்-படத்தில் இருந்து பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தேன்..அஞ்சலி செய்து, மெட்டுப்போட்டு, குண்டுக்கத்தரிக்காயாகி, கடைசியாக "என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப்போகிறாய்?" என்று எஸ்.பி.பி. கேட்க ஆரம்பித்தார்.

எனக்குத் தெரிந்த வட்டத்தில் சிலுவைகள் தந்த காதலை அதிர்ஷ்டவசமாக நான் இதுவரை பார்க்கவில்லை. எங்கள் குடும்பம்/நண்பர்கள் பலருக்கு சிறகுகளைதான் காதல் தந்திருக்கிறது. எல்லாரும் சந்தோஷமாகப் பறந்துகொண்டிருக்கிறோம். :)

சிலவிஷயங்களை "இது நல்லது, இது கெட்டது" என்று அறுதியிட்டு கூற முடியாது..காதலும் அவற்றில் ஒன்று. காதல் தவறான விஷயம் என்றால் சங்ககாலம் தொட்டு இன்றைய ஹைடெக் யுகம் வரை சிரஞ்சீவியாக எப்படி அது வாழ்ந்துகொண்டிருக்கிறது? இல்லை, காதல் மட்டுமே சரியானது என்றால், மொட்டிலேயே கருகும் இளைஞர்களின் வாழ்வுக்குப் பொருள் என்ன?

ஒவ்வொருவர் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள், அனுபவங்கள், இன்பதுன்பங்கள் இவையே காதல் பற்றிய அவர்களின் அளவுகோலாக இருக்கிறது. இதனால் காதல் ஏமாற்றம் தருமா-தராதா,சரியா-தவறா, செய்யலாமா-கூடாதா என்று ஆராய்ச்சி செய்யாமல் அது பாட்டுக்கு இருக்கட்டும் என்று விட்டுவிடுவோமே! ;)

என்னைப் பொறுத்தவரை காதல் அமுதாகத்தான் இருந்திருக்கிறது,இருந்துகொண்டிருக்கிறது, இருக்கும்! (அதற்காக விஷமில்லை என்று நான் சொல்லவில்லை.;)) பெற்றோர் பார்த்து இணைத்தாலும் சரி, பிள்ளைகள் பார்த்து முடிவு செய்தாலும் சரி, இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று! அதுதான் நடக்கும். அமைந்த வாழ்க்கையை வளமாக வைத்துக்கொள்வது அவரவர் கையில்!



உங்களுக்குக் காதல் பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் இந்தப் பாட்டைப் பாருங்க..ஸோனு நிகம், அனுராதா ஸ்ரீராம் குரல்கள் -ஏ.ஆர்.ரஹ்மான் இசை-ஐஸ்வர்யா ராய் நடனம் எல்லாமே அழகா இருக்கும்! :)

இதுவரை என்னை அழைத்த தொடர்பதிவுகள் எல்லாவற்றையும் முடிந்தவரை எழுதியிருக்கிறேன், இதையும் ஒரு மாதிரியா எழுதிப் பூசி மெழுகிவிடலாம்னு எழுதிட்டேன். என் மனதில் பட்டதைச் சொல்லியிருக்கேன், படித்துப் பிடித்தால் சந்தோஷம், பிடிக்கலைன்னா அது உங்க உரிமை! ஒவ்வொருவருக்கும் values வித்யாசப்படும் இல்லையா? ;)

நன்றி!

Wednesday, March 23, 2011

பாடல்கள் தொகுப்பு-3


அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை பெண்களை வர்ணித்து வந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்கள் இந்த நான்கும். காலங்களில் அவள் வசந்தம்...இந்தப்பாடலில் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலும்,பாடல் வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தது.



அபூர்வ ராகங்கள்..இடியாப்ப சிக்கலான ஒரு கதையை அழகாக படம்பிடித்திருப்பார் K.பாலசந்தர். எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்.



கொஞ்சம் லேட்டஸ்ட்டா வந்த பாடல்களில் இரண்டுமே பிரபு படங்களாவே இருக்கு. ரம்பாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இந்தப்பாடலில் இருப்பாங்க..பானுப்பிரியாவும் அழகா இருப்பாங்க..பாடல்வரிகளும் அழகா இருக்கும். :)


நதியா-வை பூவே பூச்சூடவா படத்திலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும்..இந்தப்பாட்டில் புடவையில் மிக அழகா இருப்பாங்க,மீனாவை (இந்தப்பாடலில்) அவ்வளவாப் பிடிக்காது. S.P.B.குரலில் இன்னொரு இனிமையான பாட்டு!


~~~~~
நிழல்கள் படத்தில் பூங்கதவே,தாழ் திறவாய்...ஹீரோயின்(பேர் தெரியவில்லை) ஹோம்லியா அழகா இருப்பாங்க..இசையும் நன்றாக இருக்கும்.



ரெட்டைவால் குருவி படத்தில் ராஜ ராஜ சோழன் நான்..நானும் என்னவரும் ரசித்துக் கேட்கும் பாடல். பாடல் வரிகள் கிட்டத்தட்ட மனப்பாடம்னே சொல்லலாம். யூ ட்யூப் லிங்க் எடுத்து வைத்திருந்தேன்,வொர்க் ஆகல இப்போ..மறுபடி தேடியதில் கிடைத்தது இது..



பகல் நிலவு படத்தில் இந்தப்பாடல் ரொம்ப நல்லா இருக்கும்..ரேவதி-முரளி, அழகான லொகேஷன் எல்லாத்தையும் விட இளையராஜா-ஜானகி இருவரின் குரலும் கலந்து கலந்து வருவது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். :)
பூ மாலையே..தோள் சேரவா...

இதுவரை நான் ரசித்த பாடல்களின் தொகுப்பு இங்கே.

LinkWithin

Related Posts with Thumbnails