
ஹலோ..ஹலோ..ஹலோ!!!!
................
மைக் டெஸ்டிங்...ஒன்..டூ..த்ரீஈஈஈஈ!!!!
................
எங்கே..எங்கே..எங்கே..எங்ங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ தேடறீங்க?? இங்கே..இங்கே..இங்கே..இங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ பாருங்க!
..............
நாந்தான் மழை,மழை,மழேஏஏஏஏஏஏஏஏஏஏ வந்திருக்கேன்!
:))))))))))))))))))))))))))))))))
எல்லாரும் சுகமா..எனது காதலி..மனைவி, என் முதலும் முடிவுமான பூமிப்பெண் சுகமா இருக்காளா? ஒரே ஆள், பலமுகம் கொண்டவள் என் காதலி!!! காதல்வெறியில் அவ்வப்பொழுது சிலசமயம் பெய்தும் கெடுப்பேன்,பலசமயம் காய்ந்தும் கெடுப்பேன். love drives people crazy, not only people,but including me!!... :P:P:P
ஹிஹீஹீ..என்ன பார்க்கறேள்? மழை இங்கிலீஷ் பேசுதேன்னா...நான் எல்லா பாஷையும் பேசுவேன். அதை விடுங்கோ..இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன்!!! இதோ இந்தப் பொண்ணைப் பாருங்களேன். இவ பேரு வர்ஷா(வர்ஷா = மழை) ..காலேஜில படிச்சுட்டு இருக்கா..லீவில் ஊருக்கு போறப்ப எப்பூடி என்னை ரசிக்கிறா எண்டு பாருங்க! இதைப் பார்க்கறப்ப எனக்கே டான்ஸ் ஆடலாம் போல வருது! :)
இந்தியப்பெண்ணாய் என் காதலியைப் பார்க்க நினைத்தால் இந்தியத் தீபகற்பம் பக்கம் வந்து பார்ப்பேன்..நவீன யுவதியாகப் பார்க்க நினைச்சால் அமெரிக்க ஐரோப்பியக் கண்டங்களிலே பார்ப்பேன்.வெள்ளைப் பனித் தேவதையாய் அவளைக் காண நினைத்தால் அண்டார்ட்டிக்காவில் பார்ப்பேன்..பச்சைப்பட்டுடுத்திய தேவதையாய்ப் பார்க்க நினைத்தான் அமேஸான் காடுகளிலே ஓடிப்போய்ப் பார்ப்பேன்..மொத்தத்தில் அவள்மீது பைத்தியமாய்ப் பால்வெளியெங்கும் திரிகிறேன்!!!!!! இப்பொழுது கூடப் பாருங்க..மழை வந்திருக்கேன்,கதை சொல்லப்போறேனு சொல்லிட்டு பூமிப்பெண்ணைப் பற்றி பிதற்றிட்டு இருக்கிறேன்! அவ்வளவு காஆஆஆஆஆதலுங்க! ;))))
அட,நம்ம வர்ஷாப் பொண்ணை எங்க விட்டோம்?? ஆங்...அவிங்க ஊர்ல!! வர்ஷா கற்பனையில் மூழ்கி, கவிதையில் முத்தெடுத்து, எழுத்திலே கோர்த்து வைத்திருக்கா..அதை இந்தப்பையன் களவாடிட்டான்..ஆனாலும் பரவாயில்லை,நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாவே பாடறான். :)
சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன்துளியாய் வருவாய்..
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே வருவாய்..
பயிர் வேரினிலே விழுந்து நவதானியமாய் விளைவாய்..
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்!! ...ம்ம்ம்ம்ம்...அனுபவிச்சு எழுதிருக்காங்கள்ல? இதைக்கேக்கறப்ப எனக்கே என்மேல கொஞ்சம் பெருமையா இருக்கு..என்ன, காலர்தான் இல்ல...இருந்தா காலரைத் தூக்கி விட்டுப்பேன்.
இப்புடியே நாள் ஓடிட்டு இருக்கப்ப பாவம்,காலேஜில படிச்சிகிட்டு இருக்கற வர்ஷாவுக்கு கலியாணம் முடிவு பண்ணறாங்க... கரீக்ட்டா நான் போய், அந்தப்புள்ளை வீட்டுக்கு போவதை தாமதப்படுத்திட்டேன்..வர்ஷா ஒரே சந்தோஷமாயிருச்சு..என்னையக் காரணம் காட்டி வீட்டுக்கு லேட்டாப்போலாம்ல?? என்ன ஒரு சந்தோஷம் பாருங்களேன்..
எப்படியோ ஒரு வழியா பெண்பார்க்கும் படலத்தைத் தாமதப்படுத்தியாச்சு..நாட்கள் ஓடிட்டே இருக்கு. ஒருநாள் நான் என் காதலியைப் பார்க்க சென்னை மாநகருக்கு வந்தப்ப, மார்க்கெட்ல இருந்த ஒரு பையன் என்னைப் பார்த்து, நான் ஏற்படுத்தும் ஒலிகளையும் ரசிச்சு பாடறான்..அதே நேரம் அந்தப்பக்கம் நம்ம வர்ஷாப்புள்ளையும் பாடுது.
பாட்டு நல்லாருக்கும்..பையனையும்,புள்ளையையும் பார்க்கப்புடிக்கலைன்னா கண்ணை மூடிகிட்டு பாட்டைக் கேளுங்கோ, விசய்-திரிசா :):)வைப் புடிக்கும்னா கண்ணையும் காதையும் ஓபனா வைச்சிகிட்டே என்சொய் பண்ணுங்ஓஓஓ!;) ;)
ஒத்த ரசனையோட இருக்க ரெண்டு பேரும் எதிர்பாராத விதமாச் சந்திச்சு, தடக்-தடக்குன்னு கலியாணம் பண்ணி, ஆசைக்கு ஒண்ணு, ஆஸ்திக்கு ஒண்ணுன்னு குட்டீஸும் வந்து மும்பைல செட்டில் ஆகிட்டாங்க. ஒரு ஹோலி நாளில் எல்லாரும் வண்ணங்கள் பூசி மகிழ்வதைப் பார்க்க நானும் பூமிக்கு வந்தேன்..பாட்டுப்பாடி நடனம் ஆடி, கலர்ப்பொடி பூசின்னு ஒரு நாள் சந்தோஷமாக் கழிஞ்சது.
கதையும் முடிஞ்சது,கத்தரிக்காய் காய்ச்சது! :))))))))))))) போயிட்டு வரேன்..முடிந்தால் மீண்டும் சந்திப்போம்!

பி.கு. அதிரா ஆரம்பித்து வைத்து, ஆசியாக்கா என்னைக் கோர்த்துவிட்ட "இசையும் கதையும்" தொடர்பதிவு இது. இதைக் கோர்க்கும்படி இமா,வானதி, சிவா ஆகியோரை நானும் கோர்த்து:)விடுகிறேன்.